தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 19 ஜூலை, 2018

போர்த்துக்கீசரால் ஈழத்தில் அழிக்கப்பட்டவை!


1560ம் ஆண்டிற்கும் 1645ம் ஆண்டிற்கும் இடையில் போர்த்துக்கீச தலைமை அதிகாரியும் அன்றைய அரச அதிகாரியுமாக இருந்த Philip De Olivera பிலிப்போ என்பவனின் தலைமயில் சுமார் 500 இந்து கோயில்கள் இடிக்கப்பட்டு அழிக்கப்பட்டன. 1575ம் ஆண்டு சிலாபத்தில் இருந்த முனீஸ்வரன் கோயிலும், 1588ம் ஆண்டு மாதோட்டம் என்று அழைக்கப்பட்டு வந்த மன்னாரில் இருந்த திருக் கேதீஸ்வரம் கோயிலும், டெவினுவெரவில் இருந்த விஷ்ணு கோயிலும் இடிக்கப்பட்டன.1612ம் ஆண்டு மாசிமாதம் 2ம் திகதி நல்லூர் கந்தசாமி கோயிலும், தொடர்ந்து கீரிமலையில் இருந்த திருத் தம்பலேச்வரன் கோயிலையும் 1622ம் ஆண்டு திருகோணமலை கோணேஸ்வரமும் அழிக்கப்பட்டன என்று இந்துக்களின் வரலாறு விம்மிக் கொண்டு கூறுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக