தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 20 ஜூலை, 2018

படைக்கப்பட்ட புதிய வரலாறு! சுமார் 40 ஆண்டுகளாக தொடரும் மர்மம் !


இந்த உலகில் பல்வேறு ஜீவராசிகள் வாழும் பொழுதிலும் ஆறாம் அறிவை கொண்ட மனித இனம் மகத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
எனினும் பகுத்தறிவை கொண்ட மனிதனிடம் பொது அறிவு (General Knowledge) இல்லாவிடின் இந்த உலகத்தில் முட்டாளாகவே அடையாளப்படுத்தப்படுகிறான்.
நமக்கு பொது அறிவு பல்வேறு வழிகளின் மூலம் கிடைக்கிறது. அதனடிப்படையில் சிறுவயதிலிருந்தே நம்மை பின் தொடர்ந்து வரும் பொது அறிவு வினாவே “நிலாவில் முதன் முதலாக காலடி வைத்தவர் யார்?” என்பது.
இந்த கேள்வியை கேட்டு முடிப்பதற்கு முன்னரே பலரது உதடுகளும் விடையை முணுமுணுத்துவிடும்.
சரி இப்பொழுது எதற்கு இந்த கேள்வி. மனித இனம், பகுத்தறிவு, பொது அறிவு என்று ஆரம்பிக்கிறீர்களே! நீங்கள் என்ன விடயத்தை கூற விளைகின்றீர்கள் என்று நீங்கள் கேட்பது எனக்கும் கேட்கிறது.

ஆம், நான் கூற வந்த விடயத்திற்கும், சிறுவயதிலிருந்தே நம்மை பின் தொடர்ந்து வருவதாக நான் கூறிய கேள்விக்கும் இடையில் சம்பந்தம் இருக்கிறது.
ஏனெனில் சுமார் 40 ஆண்டுகளுக்கு முன் இதேபோன்றதொரு நாளில் தான் நிலவில் முதன்முதலாக நிலவில் காலடி வைத்தார் நீல் ஆம்ஸ்ட்ராங்.
நம்முடைய தாய், அவர்களின் தாய் உட்பட நம் மூதாதையர்கள் முதல் ஓர் பழக்கம் நிலவி வருகிறது. குழந்தைகளுக்கு உணவளிக்கும் போது நிலாவை காட்டி உணவூட்டுவார்கள். குழந்தைகளும் நிலவை பார்த்த ஆர்வத்தில் உணவை உண்பார்கள்.
ஆனால் அந்த நிலவில் அமெரிக்காவின் அப்பல்லோ 11 விண்கலமானது இன்று போன்றொரு நாளில் தான் தரையிறங்கி புதிய வரலாறு படைத்தது.
புளோரிடா மாகாணத்தில் இருந்து நாசா விண்வெளி மையத்தின் சார்பில் 1969, ஜூலை 16ஆம் தேதி அப்பலோ 11 விண்கலம் நிலவுக்கு பயணமானது.
இதில் கமாண்டர் நீல் ஆம்ஸ்ட்ராங், பைலட் மைக்கேல் காலியன்ஸ் மற்றும் பைலட் எட்வின் ஆல்ட்ரின் ஆகிய மூன்று விண்வெளி வீரர்கள் பயணித்தனர்.
* நீல் ஆம்ஸ்ட்ராங் 1930, ஆகஸ்ட 5இல் பிறந்தார். பி.எஸ் (ஏரோநாட்டிக்கல் இன்ஜினியரிங்), எம்.எஸ் (ஏரோஸ்பேஸ் இன்ஜினியரிங்) படித்தவர்.

* எட்வின் ஆல்ட்ரின் 1930, ஜனவரி 20இல் பிறந்தார். இவரும் பி.எஸ் பட்டதாரி. நிலவில் இறங்கிய இரண்டாவது மனிதன் என்ற பெருமை பெற்றவர்.
* மைக்கேல் காலியன்ஸ் 1930, அக்டோபர் 31இல் இத்தாலியில் பிறந்தார். இவரும் பி.எஸ் பட்டதாரி. 'அப்பல்லோ 11' பயணத்துக்கு பின் அமெரிக்காவின் நேஷனல் ஏர் அண்ட் ஸ்பேஸ் மியூசியத்தின் நிர்வாக இயக்குனராக பணியாற்றினார்.
விண்கலத்தில் பயணம் செய்த மூன்று வீரர்களில் நீல் ஆம்ஸ்ட்ராங், விண்கலத்திலிருந்து இறங்கி முதலில் காலடியை நிலவில் பதித்தார்.
இதன் அடையாளமாக, அமெரிக்காவின் தேசியக் கொடியை நிலவில் நாட்டிய நீல் ஆம்ஸ்ட்ராங் நிலவில் கால் பதித்த முதல் மனிதர் என்ற சாதனையும் படைத்தார். பின் 20 நிமிடம் கழித்து எட்வின் ஆல்ட்ரின் நிலவில் இறங்கினார்.

நிலவுக்கு மனிதனை அனுப்பி சாதனை மைல்கல்லில் தனி இடம்பிடித்த அமெரிக்கா, அப்பல்லோ 11 விண்கலத்தை 20 பில்லியன் டொலர் செலவில் தயாரித்திருந்தது.
இதேவேளை நிலவிலிருந்து வெற்றியுடன் திரும்பிய அப்பல்லோ 11 விண்கலம் 8 நாட்களுக்கு பின், ஜூலை 24இல் கொலம்பியாவில் வெற்றிகரமாக தரை இறங்கியது என்பது வரலாற்றில் எழுதப்பட்டு விட்டது.
ஆனால், எந்தவொரு தாக்கத்திற்கும் பருமனில் சமனானதும், திசையில் எதிரானதுமான மறு தாக்கம் காணப்படும் என்பது நியூற்றனின் மூன்றாவது விதி.
அதன்படி அமெரிக்கா நிலவிற்கு மனிதனை அனுப்பியதும், நீல் ஆம்ஸ்ட்ராங் நிலவில் கால் பதித்தது மற்றும் அமெரிக்க கொடியை நாட்டியது என்ற விடயங்கள் பொய் என்ற கருத்துக்கள் பரவலாக முன்வைக்கப்பட்டு வருகின்றன.
அதனடிப்படையில் நிலவில் கால்வைத்த கதை பொய் என்ற விடயத்தை கூறுபவர்களின் கருத்து இவ்வாறு அமைகிறது.
நிலாவிற்கு ஆட்களை அனுப்பும் சோதனையை கைவிடுவதாக சோவியத் ஒன்றியம் அறிவித்தவுடன், “அவர்களால் செய்ய முடியாததை வெற்றிகரமாக எங்களால் செய்து காட்ட முடியும்” என்று சவால் விட்டது அமெரிக்கா.
அதன் பிறகு தான், அமெரிக்கா “அப்போலோ 11” என்ற விண்கலத்தை நிலவிற்கு அனுப்பியது. இந்த நிலையில் “நிலவில் இறங்கி நீல் ஆம்ஸ்ட்ராங் வலம் வந்த” திரைப்படம் சில ஆராய்ச்சியாளர்களால் ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டது.

இதன்போது அடுக்கடுக்காக வெளிவந்தன அதிர்ச்சி தகவல்கள். நீல் ஆம்ஸ்ட்ராங் நிலவில் காலடி வைத்த படத்தில் அப்படியென்ன கண்டுபிடிக்கப்பட்டது.
ஆராய்ச்சியாளர்கள் சொன்னது என்னவென்றால், நீல் ஆம்ஸ்ட்ராங் நிலாவிற்கே செல்லவில்லை என்பது தான். அத்துடன் அந்த படம் நிலாவிற்கு சென்றது போல் ஹாலிவுட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம் என அடித்து கூறினார்கள்.
அந்த கால கட்டத்தில் “ஹாலிவுட்டில் நிலாவை போன்று செட்டிங்ஸ் போட்டு படம் எடுத்தவர் என் கணவர் தான்” என “science fiction” பட இயக்குனர் ஸ்டான்லி குப்ரிகின் மனைவி கருத்து வெளியிட்டார்.
இந்த விடயங்கள் உலக மக்களின் மூளையை குழப்பதற்குள் தள்ளி வைத்து விட ஆராய்ச்சியாளர்கள் மேலும் சில தகவல்களை வெளியிட்டார்கள், நிலவிற்கு அப்பல்லோ 11 விண்கலம் அனுப்பப்படவில்லை என்பதையும், நீல் ஆம்ஸ்ட்ராங் காலடி பதிக்கவில்லை என்பதையும் நிரூபிக்க.
1) முதலாவது நிலாவில் வெளிச்சமே இருக்காது. சூரியனின் ஒளிபட்டு தான் பூமியிலிருக்கும் நமக்கு நிலா வெளிச்சமாக தெரிகிறதே தவிர, தானாக நிலாவில் எப்படி வெளிச்சம் வரும். அங்கு street light எல்லாம் கிடையாது.
2) நீல் ஆம்ஸ்ட்ராங் நிலாவில் இறங்கி அமெரிக்க கொடியை நிலாவில் நடுவார். அப்போது அந்த கொடி அசையும். காற்றே இல்லாத இடத்தில் கொடி பறப்பதற்கு சாத்தியமே இல்லை.
3) அதேபோல் காற்றே இல்லாத இடத்தில் கால் தடம் பதிக்க நடப்பது என்பதும் இயலாததே. அப்படியிருக்கையில் அவர்கள் நடந்த காலடி தடம் எப்படி இருக்கும். அவர்கள் நடக்கும் போது புழுதி பறக்கும். இதெல்லாம் நிலாவில் எப்படி முடியும்.
4) சுற்றிலும் focus லைட் போட்டு படபிடிப்பு நடத்தப்பட்டதால், அந்த நிலாவில் உள்ள பொருட்களின் நிழல்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கோணங்களில் இருக்கும்.
இப்படியாக பல விடயங்களை முன்வைத்து நிலாவிற்கு சென்றது போல் ஹாலிவுட்டில் எடுக்கப்பட்ட திரைப்படமே அது என்று தமது கருத்தை உறுதியாக எடுத்துரைத்தார்கள்.
இந்த நிலையில் தொடர்ச்சியாக நிலவி வருகிறது குழப்பம். நீல் ஆம்ஸ்ட்ராங் நிலவில் கால் பதித்தாரா? இல்லையா?. இந்த மர்மத்திற்கு விடை கிடைக்க வேண்டுமெனில் அமெரிக்க தான் ஏதாவது கூற வேண்டும் என்பதே உண்மை.


http://www.tamilwin.com/special/01/188593?ref=rightsidebar-article

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக