தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 13 பிப்ரவரி, 2018

பில்லி, சூனியம் வைக்க எலுமிச்சை ஏன் பயன்படுத்தப்படுகிறது தெரியுமா?


இன்றைய நவீன அறிவியல் யுகத்திலும் பில்லி சூனியங்கள், பேய் விரட்டுதல், குட்டி சாத்தான் ஏவுதல் போன்ற நம்ப முடியாத அதே சமயம் அறிந்துகொள்ள முடியாத அமானுஷ்ய விடயங்கள் நடந்து வருகிறது.
பில்லி சூனியம் வைக்க பல பொருட்கள் பயன்படுத்தப்பட்டாலும், பொதுவாக அதிகம் பயன்படுத்தப்படும் பொருள் எலுமிச்சை.
சாலையில் எலுமிச்சை பழம் குங்குமம் பூசப்பட்டு கிடந்தால் அதை மிதிக்கக்கூடாது என பெரியவர்கள் கூறி நாம் கேள்வி பட்டிருப்போம்.

அது ஏன் தெரியுமா?
கெட்ட சக்தி அல்லது கெட்ட ஆவியை எலுமிச்சை பழம் மூலம் எளிதாக இயக்க முடியும் என கூறப்படுகிறது.
இந்த சக்தி எலுமிச்சையில் இயற்கையாகவே உள்ளதால் பேய்களை தொடர்பு கொள்வதில் இது சிறந்த மீடியமாக செயல்படுகின்றது என பலரால் நம்பப்படுகிறது.
அதோடு அதிர்ஷ்டம் மற்றும் செல்வ செழிப்புக்கு எப்படி லட்சுமி தெய்வத்தை கருதுகிறோமோ, அதே போல லட்சுமி தெய்வத்தின் சகோதரியாக கருதப்படும் அவலட்சுமி துன்பம் மற்றும் துரதிஷ்டத்தின் கடவுளாக கருதப்படுகிறது.

அவலட்சுமிக்கு புளிப்பான பொருள் பிடிக்கும் என்றும் கருதி எலுமிச்சை பயன்படுத்தப்படுகின்றது.
மேலும், பில்லி சூனியத்தின் போது ஆணிகள், முட்கள் போன்ற கூரான பொருட்களும் பயன்படுத்தப்படுமாம்.
அவைகளைக் கொண்டு எளிதில் துளையிட்டு எதிரிகளை உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் பாதிக்கவைக்க முடிவும் என நம்பப்படுகிறது.


http://news.lankasri.com/spiritual/03/171920?ref=ls_d_others

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக