தொலைக்காட்சி!!

Search This Blog

Sunday, November 12, 2017

இதை படித்தால் இனிமே இஞ்சி டீயை நீங்க குடிக்காமல் இருக்கவே மாட்டீங்க!!!


இஞ்சியை சமையலுக்கு பயன்படுத்தாமல் இருக்கும் ரெசிபிக்கள் மிகக் குறைவுதான். இஞ்சிக்கு மிஞ்சிய மருந்தில்லை என்று பழங்காலத்தில் சொல்வதுண்டு. அனைத்து ஜீரணம் சம்பந்தப்பட்ட வியாதிகளுக்கும் தீர்வு காண இஞ்சியை தினமும் உபயோகப்படுத்துங்கள். அதில் இஞ்சி டீயின் நன்மைகள் பற்றி இங்கு காணலாம்.
ரத்த ஓட்டத்தை துரிதப்படுத்துகிறது:
இஞ்சி டீ ரத்த ஓட்டத்தை அதிகரித்து, மற்ற சத்துக்களையும், ஆக்ஸிஜனையும் உடலின் எல்லா பாகங்களுக்கும் செல்ல உதவி புரிகிறது. செல் வளர்ச்சியை தூண்டுகிறது.
சிறந்த வலி நிவாரணி:
  • நம் உடலில் காக்ஸ்-2 என்ற என்ஸைம் தான் வலியைத் தருகிறது. அதன் செயலை தடுக்க இஞ்சி உதவி புரிந்து வலியை குறைக்கச் செய்கிறது.
  • தொடர்ந்து இஞ்சி டீயை எடுத்துக் கொள்ளும் போது, எலும்பு சம்பந்தமான வியாதிகளான, ஆஸ்டியோ ஆர்த்ரைடிஸ், முடக்கு வாதம், கீல்வாதம் ஆகியவற்றால் ஏற்படும் வலிகளிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.
  • மைக்ரைன் எனப்படும் நாள்பட்ட ஒற்றை தலைவலி, டென்ஷனினால் வரக் கூடிய தலைவலி ஆகியவைகளுக்கு இஞ்சிடீயால் தீர்வு கிடைக்கும்.
மாத விடாய் பிரச்சனைகளுக்குத் தீர்வு :
தொடர்ந்து இஞ்சியை உட்கொள்ளும்போது, ஒழுங்கற்ற மாதவிடாய் சீராகிறது என 2014 ம் ஆண்டில் ISRN (Obstetrics and Gynecology) என்ற இதழ் ஓர் ஆய்வை வெளியிட்டுள்ளது. மாதவிடாயின் போது வெதுவெதுப்பான இஞ்சி டீ குடிப்பதனால், தசைகளுக்கு ஓய்வு தந்து, வயிற்றில் ஏற்படும் பிடிப்புகளை போக்கி இதம் அளிக்கிறது.
வாந்தி மற்றும் வயுற்று வலி:
  • இஞ்சி டீ இருந்தால் இதனை உடனே சரி செய்யலாம். இஞ்சியில் இருக்கும் ஃபீனால் மற்றும் வோலடைல் ஆயில் ஆகியவை நரம்பு மண்டலத்தை தூண்டி, வயிறு சம்பந்தமான பிரச்சனைகளை போக்குகிறது.
  • குமட்டல், வாந்தியை தடுக்கிறது.
  • மலச்சிக்கலுக்கு அருமையான மருந்தாகும், வாய்வினைப் போக்கும். ஜீரணத்தை தூண்டும்.
  • கர்ப்பிணிகள், முதல் மூன்று மாதத்தில் வரக் கூடிய வாந்தியினை இஞ்சி டீக் கொண்டு தடுக்கலாம்.
  • நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க:
  • இஞ்சி நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் செல்களை அதிகரிக்கச் செய்கிறது. தொற்றுக்களை அகற்ற உதவி புரிகிறது. உடலில் ஏற்படும் நச்சுக்களை வெளியேற்றுகிறது.
சுவாசத்தில் ஏற்படும் பாதிப்பிலிருந்து விடுதலை:
  • இஞ்சி மார்பில் கட்டியிருக்கும் சளியை கரைக்கும்.
  • ஆஸ்த்மா நோயாளிகளுக்கு ஏற்படும் சுவாச பிரச்சனைக்கு நல்ல தீர்வாகும்.
  • சாதாரண சளி, இருமல்,வறட்டு இருமல், மற்றும் நுரையீரல் தொடர்பாக ஏற்படும் தொற்றிற்கும் நிவாரணம் அளிக்கிறது.
கொழுப்பினை கரைக்கிறது:
உடலின் குடலில் படியும் கொழுப்பினை இஞ்சி வெகுவாக குறைக்கிறது. பைல் அமிலத்தின் சுரப்பினை அதிகரிக்கச் செய்கிறது. இதனால் கொழுப்பு உடலிலேயே தங்காமல் வளர்சிதை மாற்றத்திற்கு உட்படுத்தப்படுகிறது. உடல் பருமனை குறைக்கும்.
இஞ்சி டீ அதிகமாக உட்கொண்டாலும் பக்க விளைவுகள் :
இஞ்சியை அதிகமாக எடுத்துக் கொள்ளும்போது குமட்டல் வாந்தி வரலாம். இது அமிலத்தன்மை கொண்டுள்ளதால், அசிடிட்டி அதிகரிக்கும் இரண்டு வயதிற்குட்பட்ட குழந்தைகள் இஞ்சியை எடுத்துக் கொள்ளக் கூடாது. இதய நோய் உள்ளவர்கள், பித்தப்பை கற்கள் உள்ள நோயாளிகள், மற்றும் ரத்த சம்பந்தப்பட்ட நோய்கள் உள்ளவர்கள் இஞ்சியை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளக் கூடாது.

http://www.manithan.com/food/04/149321?ref=view_popular

No comments:

Post a Comment