தொலைக்காட்சி!!

Search This Blog

Saturday, September 30, 2017

விஷ்ணுவின் தசாவதாரம்!



இராமர் சிவனை வழிபட்டார்
என்றால் ....
பின்னர் ஏன்
சைவ வைணவ மோதல் ?

விடை:
மோதலை தவிர்க்க இடைச்செருகல் இவை!புத்தரை விஷ்ணுவின் அவதாரம் என்று தசாவதாரம் படம் கூட சொல்லவில்லையா!

என் கேள்விக்கென்ன பதில்?
உண்மையில் விஷ்ணுவின் பத்து அவதாரங்களையும் யாருமே சரியாக சொல்வதில்லையே!

காரணம் ஆணாதிக்கம் என்பதா?

இதுவா உண்மை?
பலராமர் துணை அவதாரமான ஆதிசேடனின் அவதாரம்,இதற்கு முன் இலக்குவனாக பிறந்ததாக ...

இங்கோ?
இது வடக்கின் புனைவுகளில் ஒன்றா?

அங்கே பிள்ளையாரே முருகனுக்கு தம்பி,இன்னொரு சகோதரி வேறு உண்டாம்!

கடவுளுக்கே அங்கு இந்நிலை என்றால்....

அனுமானையே கடவுளாக்கி....

இந்தப்பாவமெல்லாம் சும்மா விடுமா?
*****************************************************


திருப்பாற்கடலில் பள்ளிகொண்டிருக்கும் திருமால், பூலோகத்தைக் காப்பதற்காக ஒன்பது முறை அவதரித்துள்ளார். 10–வது அவதாரமாக கல்கி என்ற அவதாரத்தை அவர் எடுப்பார் என்று புராணங்கள் கூறுகின்றன. அந்த தசாவதாரங்களைப் பற்றி இங்கு பார்ப்போம்.

மச்சாவதாரம்: திருமால் எடுத்த முதல் அவதாரம் இது. மச்சம் என்றால் மீன் என்று பொருள். இந்த அவதாரத்தில் தோன்றி மகாவிஷ்ணு, வேதங்களை அபகரித்துக் கொண்டு போய், கடலில் ஒளித்து வைத்திருந்த சோமுகாசுரனைக் கொன்றார்.

கூர்மாவதாரம்: தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்த போது, மந்திரமலையைத் தாங்க திருமால் எடுத்த ஆமை அவதாரமே கூர்மாவதாரம். மலையை அசையும் போது தம் களைப்பு தீர்ந்து, பெருமாள் நன்கு தூங்கிக் களித்ததாக புராணங்கள் கூறுகிறது.

வராக அவதாரம்: பூமியைக் கவர்ந்து சென்ற இரண்யாட்சன், அதைக் கடலுக்கடியில் ஒளித்து வைத்தான். ஆலிலையில் அறிதுயிலில் இருந்த திருமால், வெள்ளை வராகமாக (பன்றியாக) உருவெடுத்து அசுரனைக் கொன்றார். பின்னர் பூமியை தன் கொம்பில் தாங்கிக் கொண்டு அருள் செய்தார்.

நரசிம்ம அவதாரம்: அசுரன் இரண்யகசிபு, நாராயணனே பரம்பொருள் என்று வணங்கி வந்த தன் பிள்ளை பிரகலாதனைத் துன்புறுத்தி வந்தான். பிரகலாதனுக்காக தூணில் இருந்து சிங்க முகத்துடன் வெளிப்பட்ட திருமால், இரண்யகசிபுவை வதம் செய்தார். இந்த அவதாரமே நரசிம்ம அவதாரம்.

வாமன அவதாரம்: பிரகலாதனின் பேரன் மகாபலியின் ஆணவத்தை அடக்க, பெருமாள் எடுத்த குள்ள வடிவம் வாமன அவதாரம். தன் அடியில் மூவுலகங்களையும் அளந்து திருவிக்ரமனாக வானுக்கும், மண்ணுக்கும் உயர்ந்து நின்றார்.

பரசுராம அவதாரம்: ஜமதக்னி முனிவருக்கும் ரேணுகாவுக்கும் மகனாக பிறந்ததே பரசுராம அவதாரம். தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்பதை உலகத்திற்கு உணர்த்திய அவதாரம். இன்றும் மகேந்திர மலையில் சிரஞ்சீவியாக தவம் செய்து கொண்டிருப்பதாக ஐதீகம்.

ராமாவதாரம்: ரகு குலத்தில் தசரத சக்கரவர்த்திக்கு மகனாகத் திருமால் எடுத்த அவதாரம் ராமன். ஏகபத்தினி விரதனாக சீதாதேவியை மணந்தும், ராவணனை சம்ஹாரம் செய்தும், தந்தை கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றியதும் ராமாவதாரத்தின் சிறப்பம்சங்களாகும். மனிதனின் இன்ப துன்பங்களை அனுபவித்து, மனிதர்களுக்கு முன்னோடியாக விளங்கிய அவதாரம் இது.


பலராம அவதாரம்: கோகுலத்தில் விஷ்ணுவின் அம்சமாக வசுதேவருக்குப் பிறந்த பிள்ளை பலராமன். பெருமாள் வெண்ணிறத்தில் தோன்றிய அவதாரம் இது. ராமாவதாரத்தில் தம்பியாக இருந்த லட்சுமணனை தனக்கு அண்ணனாக விஷ்ணு ஏற்றதாகவும் கூறுவர்.

கிருஷ்ணாவதாரம்: வசுதேவருக்கும் தேவகிக்கும் குழந்தையாக மகாவிஷ்ணு எடுத்த அவதாரம் கிருஷ்ணாவதாரம். இந்த அவதாரத்தில், கண்டவர் தம் மனதை கவரும் அழகுடன் கோபியர் கொஞ்சும் ரமணனாக திருமால் விளங்கினார். கம்சனைக் கொன்றும், பஞ்சபாண்டவரைக் காத்தும் தர்மத்தை நிலைநாட்டினார்.

கல்கி அவதாரம்: ஒவ்வொரு யுகத்தின் முடிவிலும் திருமால் எடுக்கும் அவதாரம் கல்கி. கலியுகத்திலும் இந்த கல்கி அவதாரத்தை எடுத்து, உலக உயிர்களை முக்தி பெறச் செய்வார் என்று புராணங்கள் கூறுகின்றன.

*புத்தரை ஒன்பதாவது அவதாரமாக பலராமரை தவித்து சொல்லும் கதைகளும் உண்டு,அதை தசாவதாரம் படம் சொல்கின்றது!காரணம் பலராமர் ஆதிசேஷன் அவதாரம்,அத்துடன் மோகினி பெண் என்பதால் மறை(ற)க்கப்பட்டிருக்கலாம்!


இதுதான் விஷ்ணுவின் பிரதான பத்து அவதாரங்கள்!
அதில் மோகினியின் நோக்கம் அமிர்தத்தை அரக்கரிடமிருந்து காத்து இரக்கருக்கு கொடுத்தல்,ஐயப்பனை உருவாக்கல்,பஸ்மாசுரனை அழித்தல்!பலராமர் கண்ணனுக்கு துணை மட்டுமே!






No comments:

Post a Comment