தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 5 ஆகஸ்ட், 2017

குழந்தைகளின் பாதுகாப்பிற்கும் ,ஆரோக்கியத்திற்கும்

ஜைனர்களின் (சேட்டுகள்) மந்திரங்களைப் பார்த்து வருகிறோம்.அவற்றில் சில எளிமையான மந்திரங்களைப் பார்க்கலாம்.
நம் தமிழகத்தில் உள்ள 18 சித்தர்களைப்போல் ஜைன மதத்தில் 24 தீர்த்தங்கரர்கள் உள்ளார்கள்.இவர்களில் ஸ்ரீ மஹாவீரர் 24 வது தீர்த்தங்கரர். பகவான் ஸ்ரீ பார்ஷ்வநாதர் ஜைன மதத்தின் 23 ஆவது தீர்த்தங்கரர்.இவரது மந்திரம் கீழே தரப்பட்டுள்ளது.இது ஒரு சித்தர் மந்திரம் எனவே சித்தி செய்யத் தேவை இல்லை.
ஒரு செம்பு அல்லது எச்சில் செய்யாத பாத்திரத்தில் நீர் நிரப்பி அதை வலது கையில் வைத்துக்கொண்டு இந்த மந்திரத்தை 27 தடவை ஜெபித்துக் குழந்தை முகத்தில் தெளித்துக் கொஞ்சம் குடிக்கச் செய்ய கண் திருஷ்டி,பாலாரிஷ்ட தோஷம்,பூத பிரேதத் தொல்லைகள்.அடிக்கடி நோய் ஏற்படுதல் நீங்கிக் குழந்தை நலம் பெரும்.
இந்த மந்திரத்தை 27 தடவை ஜெபித்து 3 முடிச்சு போட்டு சிகப்புக் கயிறு கட்ட மேற்கண்ட பலன் உண்டாகும்.இந்தக் கயிறு சிறியவர்,பெரியவர் என யாவருக்கும் கட்டலாம் சிறந்த ரக்ஷையாக விளங்கும்.
மந்திரம் :-
ஓம் நமோ பகவதே ஸ்ரீ பார்ஸ்வநாதாய| ஹீ தர்நேத்ரா |பத்மாவதி சஹிதாய| ஆத்மசக்ஷு ப்ரேதசக்ஷு |சர்வக்ரஹ நாசாய |சர்வ ஜ்வர நாசாய | த்ராசய த்ராசய| ஹீ நாசாய ஸ்வாஹா ||

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக