தொலைக்காட்சி!!

Search This Blog

Sunday, August 13, 2017

குளித்துக் கொண்டிருக்கும் போதே சிறுநீர் கழிப்பவரா நீங்கள்?நன்மைகள் ஏராளம்?!

தினமும் நாம் மேற்கொள்ளும் பழக்கங்களில் ஒன்று தான் குளியல். குளிப்பதால் உடல் சுத்தமாகும் என்பது அனைவருக்கும் தெரியும். சிலர் அப்படி குளிக்கும் போது சிறுநீர் கழிப்பார்கள். இப்படி குளிக்கும் போது சிறுநீர் கழிப்பது நல்லது என்பது உங்களுக்கு தெரியுமா?
தலைக்கு குளிக்கும் போது நம்மை அறியாமல் நாம் செய்யும் தவறுகள்!!!
ஆம், குளித்துக் கொண்டிருக்கும் போது நின்று கொண்டே சிறுநீர் கழிப்பதால் ஒருசில நன்மைகள் உள்ளது. அது என்னவென்று தெரிந்தால், இனிமேல் குளிக்கும் போது நீங்களும் சிறுநீர் கழிப்பீர்கள்.
தலைக்கு குளிக்கும் போது நாம் தவறாமல் பின்பற்ற வேண்டியவைகள்!
சரி, இப்போது குளித்துக் கொண்டிருக்கும் போதே சிறுநீர் கழிப்பதில் எவ்வளவு நன்மை உள்ளது என்று பார்ப்போம்.
நன்மை #1
குளிக்கும் போதே சிறுநீர் கழிப்பதால், 27% நீர் சேமிக்கப்படுவதாக அமெரிக்காவில் உள்ள சுற்றுச்சூழல் பாதுகாப்பு முகமை அறிவித்துள்ளது. இதற்கு காரணமாக கழிவறையில் தனியாக நீரை பயன்படுத்த வேண்டிய அவசியம் இருக்காது என்றும் கூறுகின்றனர்.
நன்மை #2
உங்கள் கால்களில் சிறு கீறல்கள் அல்லது சிறு காயங்கள் இருந்தால், பிரஷ்ஷாக வெளிவரும் சிறுநீர், காயங்களில் உள்ள கிருமிகளை அழிப்பதோடு, வலி மற்றும் அங்குள்ள திசுக்களை ரிலாக்ஸ் அடையச் செய்யும். ஒருவேளை உங்கள் கால்களில் காயங்கள் மோசமாக இருந்தால், உடனே மருத்துவரை அணுகுங்கள்.
நன்மை #3
சிறுநீர் சரும தடிப்புக்கள் அல்லது சரும அழற்சிக்கு சிகிச்சை அளிக்க உதவும். சரும அழற்சியை சரிசெய்யப் பயன்படுத்தும் க்ரீம்கள் மற்றும் எண்ணெய்களில் முக்கியமான உட்பொருள் யூரியா தான். இது சருமத்தின் pH அளவை சீராக்கும்.
நன்மை #4
சிறுநீர் பாதங்களில் உள்ள அசிங்கமான பூஞ்சைத் தொற்றுகளை சரிசெய்யும். பூஞ்சை தொற்று ஏற்பட்டுள்ள இடத்தில் சிறுநீர் பட்டால், அதனால் விரைவில் பூஞ்சை தொற்றுகள் நீங்குவதைக் காணலாம்.
குறிப்பு
எனவே உங்கள் கால்களில் ஏதேனும் சரும தொற்றுகள் இருப்பின், தினமும் குளிக்கும் போது சிறுநீர் கழியுங்கள். இதனால் ஓர் நல்ல மாற்றத்தை விரைவிலேயே நீங்கள் காண்பீர்கள்.
http://www.manithan.com/natural/04/135925

No comments:

Post a Comment