தொலைக்காட்சி!!

Search This Blog

Wednesday, June 21, 2017

முருங்கை விதைகளை அடிக்கடி சாப்பிடுவதால் என்னாகும்?

முருங்கை விதைகள் அத்தனை மகத்துவம் கொண்டுள்ளது. பல வியாதிகளை நெருங்க விடாது. பல நோய்களை குணப்படுத்தும்.
பலரும் இந்த காலக்கட்டங்களில் தூக்கம் வராமல் அவதிப்படுகிறார்கள். அவர்கள் முருங்கை விதைகளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தூக்கமின்மை வியாதி குணமாகும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
மூட்டுகளின் இணைப்புகளில் வரும் வலியை போக்குகிறது. அதிக கால்சியம் இது கொண்டுள்ளதால் எலும்புகளும் பலம் பெறுகின்றது. மேலும் ஆர்த்ரைடிஸ் வராமல் நம்மை காக்கும் என ஆய்வுகள் கூறுகின்றன.
முருங்கை விதைகளிலிருந்து பிரித்தெடுக்கப்படும் எண்ணெயில் 30 வகையான ஆன்டி ஆக்ஸிடென்டுகள் இருக்கின்றன. இவை செல்களை ஆரோக்கியமாக பாதுக்காக்கும். இதனால் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியமாக திகழும்.
ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்கும் தன்மை பெற்றுள்ளது. அதோடு சர்க்கரை வியாதியையும் வரவிடாமல் தடுக்கும்.
செல் சிதைவை தடுக்கிறது. புதிய செல்கள் உருவாவதை பெருக்குகிறது. மற்றும் புற்று நோய் வர விடாமல் தடுக்கிறது.
இதயத்தில் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு உத்திரவாதம் இந்த முருங்கை விதைகள் தருகின்றன. . இவை இதயத்தில் படியும் கொழுப்புகளை வெளியேற்றும் பண்பை பெற்றுள்ளன.
http://news.lankasri.com/food/03/127391?ref=right_featured

No comments:

Post a Comment