தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 26 ஏப்ரல், 2017

ஜெர்மனியில் சாதனை படைத்த 15 வயது சிங்கள மாணவன்!

இளம் விஞ்ஞானிகளுக்கான சர்வதேச மாநாட்டில் பங்குபற்றிய இலங்கை மாணவர் ஒருவர் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
ஜெர்மனி Stuttgart பகுதியில் இடம்பெற்ற இளம் விஞ்ஞானிகளுக்கான சர்வதேச மாநாட்டிலேயே குறித்த மாணவனுக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்துள்ளது.
நலந்தியன் ரகிந்து விக்ரமரத்ன (Nalandian Rakindhu Wickremeratne) என்ற 15 வயது மாணவனே இந்த சாதனையை படைத்துள்ளார். இந்த மாநாட்டில் 40 நாடுகளைச் சேர்ந்த 300இற்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.
ஆஸ்துமா நோய்க்கு தீர்வு ஒன்றை குறித்த மாணவர் மாநாட்டில் முன்வைத்துள்ளார். இந்த நிலையிலேயே குறித்த மாணவருக்கு வெள்ளிப் பதக்கம் வழங்கப்பட்டுள்ளது.
இளம் விஞ்ஞானிகளின் சர்வதேச மாநாட்டில் பங்கேற்றிய ரகிந்து, இலங்கையில் தேசிய இளம் விஞ்ஞானிகள் சங்கத்தின் 2016/2017 ஆண்டிற்கான சிறந்த இளம் விஞ்ஞானி விருதினையும் வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக