தொலைக்காட்சி!!

Search This Blog

Sunday, March 19, 2017

கழிவறையில் அதிக துர்நாற்றம் அடிக்கிறதா? இதோ வழிகள்

பொதுவாககுளியல் அறைகள், கழிவறைகள் என்றாலேதுர்நாற்றங்கள் ஏற்படும். ஏனெனில் நாம் குளிக்கும்போது, நம் மீதுள்ள கழிவுகள்அனைத்தும் அந்த அறையில் தான்தங்குகின்றது.
இதனால்விரைவில் தொற்று கிருமிகள் உருவாவதுடன்நமது ஆரோக்கியத்திற்கும் தீங்காகிறது.
இதற்குகுறைந்தது வாரம் இருமுறையாவது சுத்தம்செய்ய வேண்டும்.
  • நமது வீட்டின் குளியல் அறையில் இருக்கும்ஷவரில் உள்ள அழுக்குகளைப் போக்குவதற்கு,ஒரு பிளாஸ்டிக் கவரில் ஆப்பிள் சீடர்வினிகரை ஊற்றி, அதனை ஷவரில்ரப்பர் பேண்ட் பயன்படுத்திக் கட்டவேண்டும். பின் ஒரு மணிநேரம்கழித்து, அதனை தேய்த்துக் கழுவினால்,ஷவர் பளிச்சென்று புதியதாக இருக்கும்.

  • வாஷிங்மெஷனில், சுடுநீரை நிரப்பி, அதில் 1/4 கப் ஆப்பிள் சீடர்வினிகர் சேர்த்து, 1 மணிநேரம் கழித்து வேகமாக ஓடவைத்து, நிறுத்தி பின் அதில் உள்ளநீர் அனைத்தையும் வெளியேற்ற வேண்டும். இதனால் வாஷிங் மெஷினில்உள்ள கிருமிகள் உடனே வெளியேறி, புதியதுபோல காணப்படும்.

  • குளிக்கும்அறையில் தரை அசிங்கமாக கறையுடன்இருந்தால், 1/2 கப் பேக்கிங் சோடாவில்,1/4 கப் ஹைட்ரஜன் பெராக்ஸைடு மற்றும் 1 டீஸ்பூன் சோப்பு தூள் பயன்படுத்திகலந்து, தரையில் ஊற்றி தேய்த்துகழுவ வேண்டும். இதனால் தரை பளிச்சென்றுமாறிவிடும்.

  • குளியல்தொட்டியில் இருக்கும் அழுக்கை முழுமையாக வெளியேற்றுவதற்கு,கிரேப் ஃபுரூட்டை இரண்டாக வெட்டி, குளியல்தொட்டியில் உப்பைத் தூவி, பின்பாதி கிரேப் ஃபுரூட்டைக் கொண்டுதேய்த்து, கழுவ வேண்டும்.

  • நீங்கள்பாத்திரம் கழுவும் தொட்டியில் துருபிடித்திருந்தால், எலுமிச்சை சாற்றில் பொட்டாசியம் பைட்ரேட் சேர்த்து கலந்து, டூத் பிரஷ்கொண்டு தொட்டியில் தேய்த்து, பின் நன்றாக தண்ணீர் ஊ ற்றிக் கழுவ வேண்டும்.

  • நமது வீட்டின் கழிவறைகளை சுத்தமாக வைத்துக் கொள்வதற்கு, எலுமிச்சை, பேக்கிங் சோடா மற்றும் ஆப்பிள்சீடர் வினிகர் கலந்த கலவையால்சுத்தம் செய்ய வேண்டும். இதனால்கழிவறையில் உள்ள அழுக்குகள் மற்றும்கிருமிகள் நீங்கி, துர்நாற்றம் வீசாமல்இருக்கும்.

No comments:

Post a Comment