தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 12 மார்ச், 2017

நோயை விரட்டும் முத்திரைகள்!

                                
கண்ணாடியைத் தவிர்க்க பிராண முத்திரை!

நம் உடலில் ஷாக் அடிப்பதை உணர இந்தப் பிராண முத்திரை உதவும். பிராண முத்திரை செய்தால் நரம்புத் தளர்ச்சி, சோர்வு முதலியன அகலும். கண்ணாடி இன்றிச் சிறந்த கண்பார்வை பெற வாய்ப்பு அதிகரிக்கும். இதற்காகக் கட்டை விரல் நுனியைச் சுண்டுவிரல் மற்றும் மோதிரவிரல் நனிகள் தொடுமாறு வைத்துக் கொண்டு தியான நிலையில் அமரவும். பார்வைத் திறன் அதிகரிக்கும்.


இரத்தக் கொதிப்பா? வியான முத்திரை!

இரத்தக் கொதிப்பைக் கட்டுப்படுத்த கட்டைவிரல் நுனி மீது சுட்டுவிரல், நடுவிரல் நுனிகளை வைத்துக் கொண்டு அமரவும். வியான( vyana ) முத்திரை என்று இதற்குப் பெயர்.
எல்லா வயதுக்காரர்களும் தியான முத்திரையை மேற்கொள்ளலாம், பிறகு உங்கள் வியாதிக்குரிய முத்திரையைச் செய்ய வேண்டும். இதனால் நோய்கள் குணமாவதுடன் உடலில் எதிர்ப்புச்சக்தி வளரும். அது மட்டுமல்ல, மனவளமும் ஆரோக்கியமாகத் திகழும்.



சிறுநீரகத்தை பலப்படுத்தும் மகர முத்திரை

தந்திர யோகத்தில், உள் உறுப்புகள், பலமாக இருந்தால் தான், அதன் வழியாக செல்லும் குண்டலினி சக்தி ஆதார சக்கரங்களை கடந்து செல்லும், அப்போதே அவர்தம் சாதனை வெற்றி அடையும். சிறு நீரகத்தினை பலமாக்க வல்லது மகர முத்திரை.

"மகரம்" என்றால் "முதலை "என்று பொருள். எவ்வாறு முதலையானது மிக்க சக்தியோடு இருக்கிறதோ அவ்வாறு சாதகனையும் சக்திமிக்கவனாக்குவது இம்முத்திரை. இது, அம...ைதி, திருப்தி, சந்தோஷம் போன்றவற்றையும், தன்னம்பிக்கையையும் தரவல்லது.

செய்முறை :

இடது கை மோதிர விரலை மடக்கி கட்டை விரலோடு சேர்த்து, மற்றவற்றை நேராக நீட்டிய படி வைக்கவும். வலது கை கட்டை விரல் இடக் கை கட்டை விரலின் அடிப்பாகத்தை தொட்டுக்கொண்டும், மற்ற விரல்கள் பின்புறமாகஇடது கையை பற்றிய படியும் இருக்க வேண்டும்.



ஆசனவாய் தசையை வலுவடைய செய்யும் அஸ்வினி முத்திரை!!

அஸ்வினி என்றால் குதிரை என்று அர்த்தம். நீங்கள் குதிரையின் பின்புறத்தை(மலம் கழிக்கும் இடத்தை) பார்த்தீர்கள் என்றால் அது சுருங்கும்... விரியும்.... சுருங்கும் .....விரியும்..... அதை தான் நாம் அஸ்வினி முத்திரை என்று கூறுகிறோம்.

குதிரையை பார்த்தீர்களா, அது எவ்வளவு வலுவாக உள்ளதென்று. அதற்கு காரணம் இரண்டு ஒன்று அதன் உணவான கொள்ளு. இன்னொன்று அஸ்வினி முத்...திரை ஆகும். அதனால் தான் அது மிக ஆற்றலாக உள்ளது. மனிதர்களாகிய நாமும் இதை செய்து வந்தால் மிக ஆரோக்கியமாக இருக்கலாம். ஆண்கள் பெண்கள் இருபாலரும் செய்யலாம்.

இதை செய்தால் ஆண்மை அதிகரிக்கும். உடல் பலம் பெரும். இளமை நம்மிடமே தங்கும். ஆண்மையை பெருக்க வழி என்ன என்று புலம்புபவர்களுக்கு இதை விட சிறந்த வழி வேறு இல்லை. உடலில் உள்ள முக்கிய நரம்புகள் எல்லாம் ஆசன வாயில்(சுருங்கும் இடத்தில) வந்து குவிகின்றன. அதை சுருக்கி விரிக்கும்போது அவை தூண்டப்பட்டு உடல் சக்தி பெறுகிறது. இந்த முத்திரை செய்வதால் மலச்சிக்கல், மூலம், பவுத்திரம், ஆசன வாயில் வெடிப்பு போன்ற பிரச்சனைகள் தீரும். ஆசனவாய்த் தசையும் வலுவடையும். பெண்களுக்கு கருப்பை வலுப்பெறும்.

செய்முறை : விரிப்பில் தியானம் செய்வது போல் அல்லது பத்மாசனம் அல்லது வஜ்ராசனத்தில் வசதியாக அமர்ந்து கொண்டு குதம் வெளியேறும் பகுதியை மெதுவாகச் சுருக்கி இழுத்துப் பிடிக்க வேண்டும். ஆரம்ப காலத்தில் 10 முதல் 20 முறையும், பிறகு 30 முதல் 50 முறையும் செய்யலாம். இந்த முத்திரையை செய்தால் நரம்பு மண்டலம் ஊக்குவிக்கப்படும்.

கொழுப்பு கரைய சூரிய முத்திரை!

உடலுக்குத் தேவையான வெப்பம் கிடைக்கவும் செரிமானம் நன்கு நடக்கவும், உடலில் கொழுப்பு அளவு குறையவும் சூரிய முத்திரை உதவும். மோதிர விரலை மடக்கி அதன் மேல் கட்டை விரலை வைத்து அழுத்திக் கொண்டு தியான நிலையில் அமரவும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக