தொலைக்காட்சி!!

Search This Blog

Sunday, March 19, 2017

வயது வந்த ஆண்கள் பெண்கள் கண்டிப்பாகக் தெரிந்து கொள்ளவும்…!

உலக நாடுகளை மிரட்டிக் கொண்டிருக்கும் நோய் எய்ட்ஸ். ஒருவரது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை படிப்படியாக குறைந்து, ஓருகட்டத்தில் அந்த சக்தியை முழுமையாக இழக்க வேண்டிய அபாய நிலையை ஏற்படுத்துவதுதான் இந்த நோய்.
இந்த நோயை ஒழிக்க முடியாது என்பதால், அதை கட்டுப்படுத்துவதற்காக அனைத்து உலக நாடுகளும் கோடிக்கணக்கில் செலவு செய்கின்றன. எய்ட்ஸ் பாதித்த நோயாளிகளுக்கு, நோய் எதிர்ப்பு சக்தியை கட்டுக்குள் வைத்திருக்கும் மருந்து, மாத்திரைகளும் அந்த பணத்தில் இருந்து வழங்கப்படுகின்றன.
இந்த உதவி முழுமையாக எய்ட்ஸ் நோயாளிகளை சென்று சேர்வது இல்லை. பணக்காரன் ஒருவன் இந்த நோயால் பாதிக்கப்பட்டால் லட்சக்கணக்கில் செலவு செய்து இதற்கான சிகிச்சையை தொடர்ந்து எடுத்து, வாழ்நாளை சற்று நீட்டித்துக்கொள்ளலாம்.
அதுவே ஒரு ஏழையாக இருந்தால்…?
அவனுக்கு அன்றாட சாப்பாடே பெரிய விஷயம். அப்படி இருக்கும்போது தினமும் மருந்து, மாத்திரை வாங்க பணத்திற்கு அவன் எங்கே செல்வான்? அவன் பாடு அந்தோ பரிதாபம்தான்! மரணத்தை எதிர்நோக்க வேண்டியதுதான்.
எங்கள் ஊரிலும் ஒரு பெண் உண்டு. இளம் வயதிலேயே கணவனை இழந்தவள். அதனால், அவளது வாழ்க்கைப் பாதை மாறியது. பலருடன் செக்ஸ் உறவு வைத்துக்கொண்டாள். அதற்கு கிடைத்த பரிசு எய்ட்ஸ்!
2 வருடத்திற்கு முன்பு அந்த பெண்ணை, அவளது வயதான விதவைத் தாயார் மருத்துவமனை ஒன்றிற்கு அழைத்து வந்திருந்தார். யதார்த்தமாக அவர்களை கவனித்தேன். ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மாறிப்போய் இருந்தாள், எய்ட்ஸ் பாதித்த பெண்.
முன்பு, மிகவும் அழகாக இருந்தவள், இன்று சோமாலியா, எத்தியோப்பியா நாடுகளில் உணவு கிடைக்காமல் எலும்பும் தோலுமாக காணப்படும் பெண் போன்று காணப்பட்டாள். ஒரு அடி கூட அவளால் எடுத்து வைக்க முடியவில்லை. அவளது தாய்தான் உதவினார்.
Advertisement
இந்த பெண்ணும் ஏழைதான் என்பதால், அவளது வாழ்க்கையும் சீக்கிரமே முடிந்து போயிற்று. ஆம்… அவள் இறந்துவிட்டாள். எய்ட்ஸ் ஒருவருக்கு வந்துவிட்டால் இறப்பு நிச்சயம். வேண்டும் என்றால், மருந்து, மாத்திரைகளைக் கொண்டு அந்த இறப்பை தள்ளிப் போடலாம். அவ்வளவுதான்! எனக்கு தெரிந்த சித்த டாக்டர் ஒருவர் உண்டு. பத்திரிகைகளில், எய்ட்ஸ் குணமாகும் அதிசயம்! என்று விளம்பரம் கொடுப்பார்.
அதைப் பார்த்து, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் எய்ட்ஸால் பாதிக்கப்பட்டவர்கள் அவரைத் தேடி வருவார்கள். சில மூலிகை மருந்துகளை கொடுப்பார். ஒரு வாரம், 2 வாரம் அவரது மருத்துவமனையில் நோயாளிகள் தங்கியிருந்து, சில-பல ஆயிரங்களை செலவு செய்துவிட்டு செல்வார்கள்.
ஒருநாள் அந்த டாக்டரிடமே கேட்டேன்.
“அது எப்படி எய்ட்ஸ் குணமாகும்? அதற்கு மருந்தே இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லையே… நீங்கள் எந்த மருந்தைக் கொடுத்து குணப்படுத்துகிறீர்கள்?”
“எய்ட்சுக்கு மருந்து இல்லைதான். ஆனால், நம்பிக்கை இருக்கிறது அல்லவா?” என்று திருப்பிக் கேட்டார். நான், புரியாமல் விழித்தேன். அவரே அதை விளக்கினார்.
“எய்ட்ஸ் வந்துவிட்டால் மரணம் நெருங்கிவிட்டது என்று எடுத்துக்கொள்ள வேண்டும். அந்த மரணத்தை நினைத்து பயந்து பயந்து தினமும் செத்துக்கொண்டிருந்தால், 10 வருடத்தில் வரவேண்டிய மரணம் 5 வருடத்திலேயே ஏன்… ஒரு வருடத்தில்கூட வந்துவிடலாம்.
நான் என்னிடம் வரும் நோயாளிகளுக்கு மருந்தாக கொடுப்பது ஆரோக்கியம் தரக்கூடிய சித்த மருந்துதான். அதை நோயாளியிடம் கொடுத்து, இதை சாப்பிடு. எய்ட்ஸ் குணமாகிவிடும் என்று நான் சொன்னால், அதை அந்த நோயாளி நம்பிக்கையோடு சாப்பிடுவான். அவனுக்கு, நாம் சாக மாட்டோம் என்ற தைரியம் வந்துவிடும்.
அப்புறம் என்ன… 10 வருடத்தில் இறக்க வேண்டியவன், கூடுதலாக 5 ஆண்டுகள் உயிர் வாழ்வான்…” என்று விளக்கம் கொடுத்தார். இதுதான் உண்மை. எய்ட்ஸை குணப்படுத்த முடியாது. ஆனால், அதனால் வரும் மரணத்தை தள்ளிப் போடலாம்.
எய்ட்ஸ் நோயாளிகளுக்கு ஊக்கம் கொடுத்தல்
மருந்து, மாத்திரைகள் முறையாக கிடைக்கச் செய்தல்
அடிக்கடி மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளுதல்
நோய் எதிர்ப்பு சக்தி குறையாமல் இருக்க ஆரோக்கியமான உணவை உட்கொள்ளுதல்
அவ்வபோது கவுன்சலிங் பெறுதல்
வாழ்க்கையை மகிழ்ச்சியாக உணருதல்
சமுதாயத்தால் புறக்கணிக்கப்படாமை
குறிப்பாக, நோய்கள் வராமல் உடலை பாதுகாத்துக் கொள்ளல்
வாழும் இடத்தை சுத்தமாக – ஆரோக்கியமாக வைத்திருத்தல்
இந்த சூழ்நிலைகள் ஒரு எய்ட்ஸ் நோயாளிக்கு கிடைத்தால் அவரது மரணத்தை 5 முதல் 10 ஆண்டுகள் வரை தள்ளிப்போடலாம்.
வாழ்ந்து மகிழ வேண்டிய வாழ்க்கையை எளிதில் முடிக்கும் எய்ட்ஸ் நோய்க்கு நாம் பலியாக வேண்டுமா?
என்னதான் விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும், செக்ஸ் தேவையை மனைவியுடன் மட்டும் வைத்துக்கொண்டால், இந்த நோயில் இருந்து தப்பிவிடலாம். ஆசை அபரிமிதமாக பொங்கும்போது அதற்கு வடிகாலாக விபச்சார தொழில் செய்யும் பெண்களை தேடிச் செல்வது சில இளைஞர்களது வழக்கம்.
விபச்சார பெண்ணிடம் தங்களது ஆசையை தற்காலிகமாக தணித்துக்கொள்ளும் அந்த இளைஞர்கள், அதன்பின் ஏற்படப் போகும் பாதிப்புகளை அறியத் தவறிவிடுகிறார்கள். எய்ட்ஸ் பாதிப்புக்கு ஆளாகி விடுகிறார்கள்.
அப்படியே, விபச்சார அழகியுடன் உல்லாசமாக இருக்கும்போது, சில பாதுகாப்பு முறைகளை பின்பற்றினால், எய்ட்ஸ் பாதிப்பில் இருந்து தப்பித்து விடலாம். இந்த பாதுகாப்பு முறைகள் இன்றைய இளம் தலைமுறையினர் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டும்.
1. எய்ட்ஸை தடுக்கும் முதன்மையான தடுப்பு சாதனம் காண்டம் தான். இதை, மனைவி அல்லாத பிற பெண்களிடம் செக்ஸ் உறவு வைத்துக்கொள்ளும் ஆண்கள் நிச்சயம் அணிந்து கொள்ள வேண்டும். அந்த ஆண் அணியவில்லை என்றால், சம்பந்தப்பட்ட பெண், அதை அவர் அணிந்து கொள்ளுமாறு வலியுறுத்த வேண்டும்.
அந்த ஆணுக்கு எய்ட்ஸ் இருந்து, பெண்ணுக்கு எய்ட்ஸ் இல்லாமல் இருந்தால், இந்த பாதுகாப்பற்ற உறவின் மூலம் அந்த பெண்ணுக்கு எய்ட்ஸ் வந்துவிடும்.
2. அடுத்து மனக் கட்டுப்பாடு. அழகான பெண்ணை பார்த்தால் அவளுடன் பழக வேண்டும் என்ற ஆசை மட்டுமல்ல; அவளுடன் உறவு வைத்துக்கொள்ள வேண்டும் என்ற ஆசைகூட ஏற்படும்.
அவளுக்கு எய்ட்ஸ் இருந்தால் நாமும் அந்த நோய்க்கு பலியாகிவிடுவோம். மனதை அடக்க பழகிக்கொண்டால் எய்ட்ஸ் பக்கமே போக வேண்டியது இருக்காது.
அடுத்ததாக, உறவு வைத்துக்கொள்ளும்போது பின்பற்ற வேண்டிய சில விஷயங்களை இங்கே பார்ப்போம்.
எய்ட்ஸ் நோய் பரப்பும் வைரஸ், அது பாதித்த நோயாளியின் ரத்தத்தில் மட்டுமே கலந்து பெருகியிருக்கும். ஒன்று இரண்டாகி, இரண்டு நான்காகி, நான்க எட்டாகி… இப்படி பல்கி பெருகக்கூடியது அதன் இயல்பு.
செக்ஸ் உறவு வைத்துக்கொள்ளும்போது ஆண், பெண்ணின் அந்தரங்க உறுப்புகளே அதிகம் பயன்படுத்தப்படுகின்றன.

No comments:

Post a Comment