தொலைக்காட்சி!!

Search This Blog

Thursday, March 23, 2017

இதை உடனடியாக செய்யுங்கள்: வழுக்கை தலையிலும் முடி வளருமாம்!

தலைமுடி உதிர்வதை தடுக்க எத்தனையோ முயற்சிகள் செய்தும் அதனால் எந்த பலனும் கிடைக்காமல் உள்ளதா?
கவலை வேண்டாம், தலைமுடி கொட்டும் பிரச்சனையில் இருந்து விடுபடுவதோடு, தலைமுடியை நன்றாக வளரச் செய்வதற்கு, இயற்கையில் அற்புதமான ஒரு வழி உள்ளது.
அதிலும் முக்கியமாக இந்த முறையை செய்தால், வழுக்கை விழுந்த இடத்திலும் கூட முடியின் வளர்ச்சியைத் தூண்டச் செய்யலாம்.
தேவையான பொருட்கள்
  • தேங்காய் எண்ணெய்
  • விளக்கெண்ணெய்
  • விட்டமின் E கேப்ஸ்யூல்
  • கற்றாழை
செய்முறை
முதலில் ஜெல் போன்ற பகுதியில் கீறி விட்டு, அதை முடியின் ஸ்கால்ப்பில் படும்படி நன்கு தேய்த்து, சிறிது நேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
பின் ஒரு கிண்ணத்தில் 1 டேபிள் ஸ்பூன் விளக்கெண்ணெய், 2 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் எடுத்துக் கொண்டு அதனுடன் 1 விட்டமின் ஈ கேப்ஸ்யூல் மாத்திரையில் உள்ள எண்ணெயை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
இந்த கலவையை ஒரு அகன்ற பாத்திரத்தில் சுடுநீரை ஊற்றி, அதனுள் அந்த எண்ணெய் கலவையுள்ள கிண்ணத்தை சிறிது நேரம் வைக்க வேண்டும்.
பின் அந்த எண்ணெயை முடியின் ஸ்காலப்பில் படும்படி தடவி 10 நிமிடம் நன்கு மசாஜ் செய்து, இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் தலைக்கு குளிக்க வேண்டும்.
குறிப்பு
இந்த செயல்முறையை வாரத்திற்கு 5 முறை செய்து வந்தால், தலைமுடியின் வளர்ச்சியில் நல்ல மாற்றத்தைக் காணலாம்.

No comments:

Post a Comment