தொலைக்காட்சி!!

Search This Blog

Thursday, March 23, 2017

கறிவேப்பிலை – மருத்துவர்கள் என்ன சொல்கிறார்கள் தெரியுமா….?

அதிகளவு மருத்துவப் பயன்களைக் கொண்டுள்ள கறிவேப்பிலையை தொடர்ந்து தினமும் உணவில் சேர்த்து வந்தால் நோயின்றி நூறாண்டுகள் வாழலாம் என அறியவந்துள்ளது.
கறிவேப்பிலையில் விட்டமின் ஏ, பி, சி கால்சியம் போன்றவைகள் உள்ளன.
மேலும் கறிவேப்பிலையில் கோயினிஜாக், குளுகோசைட், ஒலியோரெசின், ஆஸ்பர்ஜான் சொரின், ஆஸ்பார்டிக் அமிலம் அயாமைன், புரோலைன் போன்ற அமினோ அமிலங்கள் உள்ளது.
இவை தான் கறிவேப்பிலைக்கு இனிய மணத்தை தருகிறது. பல மருத்துவ குணங்களையும் வெளிப்படுத்துகிறது.
சாதாரணமாக 100 கிராம் கறிவேப்பிலையை அரைத்து சாற்றை எடுத்து 100 கிராம் தேங்காய் எண்ணையில் கலந்து மிதமான சூட்டில் ஈரப்பதம் நீங்கும் வரை காய்ச்சி தினசரி தலைக்கு தேய்த்து வந்தால் உடல் உஷ்ணம் குறையும்.
தலை முடியில் நரை வராது. கண்பார்வை குறைவு ஏற்படாது.
கறிவேப்பிலையை அரைத்து சாப்பிட்டால் நுரையீரல், இருதயம் மற்றும் ரத்த சம்பந்தப்பட்ட நோய்கள் வருவது குறையும்.
இது தவிர நீரிழிவு நோயாளிகள் காலையில் 10 கறிவேப்பிலை இலையையும், மாலையில் 10 இலையையும் பறித்த உடனேயே வாயில் போட்டு மென்று சாற்றை விழுங்கி வந்தால் மாத்திரை சாப்பிடும் அளவை பாதியாக குறைத்து விடலாம் என்கிறார்கள், மருத்துவர்கள்.

No comments:

Post a Comment