தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 19 பிப்ரவரி, 2017

ஈராயிரம் வருடங்களுக்கு முன் கண்ணகி நடந்து சென்ற ஊர்..



ஈராயிரம் வருடங்களுக்கு முன் கண்ணகி நடந்து சென்ற ஊர்..

ஆயிரம் வருடங்களுக்கு முன் இராஜராஜ சோழனுக்கு பெண் கொடுத்த ஊர்..

கங்கை முதல் கடாரம் வரை ஆண்ட இராஜேந்திர சோழனின் தாய் பிறந்த ஊர்.....

கருவேல மரங்கள் சூழ்ந்த அந்த ஒற்றையடி பாதையில் நடந்து சென்று 1100 வருடங்களுக்கு முன் வேளிர் மன்னர்கள் எழுப்பிய கோயில்களை காணச் செல்லுகையில் மனதில் ஏதோ பிசைந்தது..

பொன்னும் பொருளும் பல மா நிலங்களும் காணிக்கையாக வழங்கப்பட்டு கோலாகலமாக பூசைகள் நடைபெற்ற கோயிலை சுற்றி ஆடுகள் மேய்ந்து கொண்டிருந்தன..

இடம்:கொடும்பாளூர், புதுக்கோட்டை மாவட்டம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக