தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 8 பிப்ரவரி, 2017

சிவராத்திரி விரத வகைகள்…..

ஒவ்வொரு மாதமும் தேய்பிறை சதுர்த்தசி இரவு மாத சிவராத்திரி ஆகும். சிவனடியார் பலர் இந்த சிவராத்திரியையும் மாதந்தோறும் தவறாமல் கடைப்பிடித்து வருகின்றனர்.
விரதம் கடைப்பிடிப்போர் (விரதம் பிடிப்போர்) முதல் ஒருநாள் ஒரு பொழுது உணவருந்தி சிவராத்திரியன்று உபவாசமாய் காலையில் குளித்து சிவ சிந்தனையுடன் கண்விழித்திருந்து நான்கு யாம வழிபாடு செய்யவேண்டும். அடுத்தநாள் காலையில் தீர்த்தமாடி, சுவாமி தரிசனம் செய்து அடியார்களுடன் உணவருந்தி (பாரணை செய்து) விரத்தை நிறைவு செய்தல் வேண்டும்.
சிவாயலங்களில் நடைபெறும் நான்கு யாம அபிசேக ஆராதனைகளுக்கு அவரவர் வசதிக்கேற்பப் பொருள்களைக் கொடுத்து உதவலாம்.
சிவராத்திரி விரதம் ஐந்து வகைப்படும்.
1.மகாசிவராத்திரி
2.யோகசிவராத்திரி
3.நித்திய சிவராத்திரி
4.பட்ஷிய சிவராத்திரி
5.மாத சிவராத்திரி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக