தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 20 ஜனவரி, 2017

அடக்கப்படும் தமிழினம்.! கிடைக்கும் பரிசு கொட்டப்போகும் கோடிகள்..!


இந்த விளையாட்டைத் தடை செய்தால் நாட்டு மாடு அழியும், வெளிநாட்டு நிறுவனங்கள் வியாபாரம் பெருகும்.

அறியாத தமிழா உன் அறியாமை பிழையால், உன் அடையாளம் இழந்தால் நீ மெதுவாக அழிவாய். உன் அடையாளம் இழந்தால், உன் தாய் நாட்டில் நீயும் ஒரு அகதியாய் மாறிடுவாய்!

இது ஜல்லிக் கட்டையும் தமிழினத்தையும் காட்டும் பாடல் வரிகள்.

காரணம் இன்றி காரியம் எதுவும் நடப்பதில்லை. இது ஆன்மீகத்திற்கும் பொருந்தும் அரசியலுக்கும் மிக நன்றாகவே பொருந்தும்.

இப்போது உலகம் முழுதும் ஜல்லிக்கட்டுக்காக போராட்டங்கள் இடம் பெற்று கொண்டிருக்கின்றன. ஆனால் இந்த தடைக்கு பின்னணியில் அளப்பரிய அரசியலும் பண வேட்கையுமே முன்னிற்கின்றது என்பது ஒரு தரப்பினரது வாதம்.

அடக்கப்படும் தமிழனத்தின் மூலம் அரசியல் இலாபங்களும் கொட்டப்போகும் கோடிகளையுமே பரிசாக பார்க்கின்றனர். அதனால் திட்டமிட்டு செய்யப்பட்டதே இந்த ஜல்லிக்கட்டு தடை என கூறப்படுகின்றது.

ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்தால் பால் உற்பத்தி குறைவடையும் அப்போது வெளிநாடுகளில் இருந்து செயற்கை பால் இறக்குமதி செய்யப்படும்.

அப்படி இறக்குமதி செய்யப்படும் பால்மாக்கள் மூலம் புதிய பலவகை நோய்கள் பரவும், அதனைத் தடுக்க மீண்டும் புதுப்புது மருந்துகள் இறக்குமதி செய்யப்படும்.

இதன் மூலம் இலாபம் அரசுக்கும், அரசியல் வாதிகளுக்குமே என்ற பின்னணியிலே இந்த ஜல்லிக்கட்டு தடையின் முக்கிய காரணம் என்று கூறப்படுகின்றது.

இதனை தெளிவாக விளக்கும் போது,

தமிழர்களின் பாரம்பரிய செயற்பாடுகளின் பின்னால் அளப்பறிய அறிவு, நுட்பம் இருக்கும். அதே வகையில் இந்த ஜல்லிக் கட்டுக்கும் உள்நோக்கம் இருக்கின்றது.

ஜல்லிக்கட்டில் மாடுகள் அதிக பலத்துடன் வளர்க்கப்படும். இதன் காரணமாக அவற்றைப் பிற பசுக்களுடன் கருவூட்டலுக்கு பயன்படுத்தினால் கருவுறும் பசுக்கள் ஆரோக்கியத்துடன் இருக்கும்.

அதன்படி அவற்றில் இருந்து கிடைக்கும் பால் மிகுந்த போசனை உடையதாக காணப்படும். இதனை அறிந்து இந்த ஜல்லிக்கட்டை பாரம்பரியத்தோடு இணைத்தான் நம் வீரத் தமிழன்.

பால் வகையில் இருவகை உண்டு A1 மற்றும் A2 என்பனவே அவை. இவற்றின் வித்தியாசத்திற்கு காரணம் இவற்றில் உள்ள போசனைக் கூறுகளான புரதங்கள், கார்போஹைட்ரேட்டுகள், கொழுப்பு மற்றும் இதர பொருட்களின் கலவைகளே.

இந்த இரு வகையிலும் A2 என்பது நாட்டு மாடுகளினால் கிடைக்கப்படும் பால், A1 என்பது மேற்கத்திய கலப்பின மாடுகளில் இருந்து கிடைக்கும் பால் ஆகும்.

நமது நாட்டு மாடுகளின் பாலில் இருந்து கிடைக்கும் சத்துக்கள், புரதங்கள் இயற்கையாகவே நமது உடலுக்கு வலு சேர்ப்பவை. ஆனால் A1 இல் கிடைப்பது இதய பாதிப்புகள், நீரிழிவு நோய், செரிமான பாதிப்புகள் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளன எனக் கூறப்படுகின்றது.

இந்த A1 வகை பாலைத் தான் நாம் இப்பொழுது பாக்கெட் பாலாகப் பயன்படுத்தி வருகிறோம். அதன் பதில் கொஞ்சம் கொஞ்சமாக நோய்க்கு தள்ளப்பட்டு வருகின்றோம்.

இதன் பின்னணியில் பாக்கெட் பால், கலப்பின மாடுகள், மருந்துகள் என வெளிநாட்டு பெரும் வர்த்தகமே இருக்கின்றது. அதன் பாதிப்பே இப்போது கிடைத்த ஜல்லிக்கட்டு தடை.

இந்த மாபெரும் பொருளாதாரத்திற்கு தடையாக இருப்பது மாடுகளும், ஜல்லிக்கட்டுமே. அதன் விளைவு இந்த பணத்தாசை கை வைத்துள்ளது தமிழனின் பாரம்பரியத்தில்.

ஜல்லிக்கட்டைத் தடை செய்தால் காளைகளின் பராமரிப்பு குறையும் பின்னர் பராமரிப்பு குறைந்து எண்ணிக்கை குறைந்து போகும்.

அடுத்தடுத்து பால் குறையும் நோய் வந்து சேரும். இப்படி குறைவடையும் தொகையில் படிப்படியாக வளர்ச்சியடைவது வெளிநாட்டு வர்த்தகம்.

அதனைச்சார்ந்து அதிகாரத்தில் உள்ளவர்களின் வீடு மற்றும் வங்கிக் கணக்குகளும் வளரத் தொடங்கும். கோடிகள் கொட்டத் தொடங்கும்.

அதற்காக தமிழரின் பாரம்பரியத்திலா கைவைக்க வேண்டும்? இது வரை உரிமைகளை அழித்து வந்த அரசுகள் இப்போது பாரம்பரியத்தையும் கலாச்சாரத்தையும் குறிவைப்பது ஏன்?

பாரம்பரியம் அழியும் போது அந்த இனம் கொஞ்சம் கொஞ்சமாக அழிவடையும் என்பதையும் மறந்து விடலாகாது. அந்த வகையில் தமிழ் இனம் அடக்கப்பட்டு முடக்கவும் வைக்கும் திட்டமாகவே இந்த ஜல்லிக்கட்டு தடை.

மிருகவதை என பேசும் எத்தனை பேர் அசைவ உணவை உண்கின்றார்கள்? அப்படி என்றால் அதனை தடுக்க வேண்டுமே முடியாது காரணம் அங்கும் இலாபம். இதன் மூலம் மிருகவதையை நியாயப்படுத்துவதோ அல்லது போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பதோ நோக்கம் அல்ல.

தமிழும் தமிழ் இனமும் காக்கப்பட வேண்டும், அதற்கு கலாச்சாரமும் பாரம்பரியமும் நிலைக்க வேண்டும். காளைகளை தெய்வமாக பூஜிப்பதும் குடும்பத்தில் அங்கமாக பார்ப்பதும் தமிழ் இனமே.

அடக்கப்படும் தமிழினம் பொங்கி எழும் போது புரட்சிகளாகும் என்பதற்கு இந்த ஜல்லிக் கட்டும் அதற்கான போராட்டமும் ஓர் உதாரணம்.

http://www.tamilwin.com/politics/01/132493

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக