தொலைக்காட்சி!!

Search This Blog

Friday, December 2, 2016

இறந்த பின் நாம் என்னவாகிறோம்! மர்மத்தின் முடிச்சு அவிழ்கிறது!

எந்தவொரு உயிரினத்திற்கும் பிறப்பு இருந்தால் இறப்பும் இருக்கும். இது தான் இயற்கையின் நீதி!
மனிதனின் இறப்பு என்பது பல விதமாக நடக்கும். இறந்த பின்னர் மனிதன் என்னவாகிறான்? அவன் ஆன்மா என்னவாகிறது? இதற்கு பெரும்பாலான மக்களுக்கு விடை தெரிய வாய்ப்பில்லை.
இறந்தவர்கள் திரும்ப உயிர் பெற்று வந்து, நான் இறந்தவுடன் இப்படி இருந்தேன் என கூறுவதை கேள்விப்பட்டதுண்டா?
அப்படிப்பட்ட உண்மை அனுபவத்தை அனுபவித்தவர்கள் உலகில் பலர் இருக்கிறார்கள் தெரியுமா? அவர்களின் விசித்திர அனுபவத்தை நீங்களே கேளுங்கள்,
கடந்த 2011 ஆம் வருடம். பிரித்தானியா நாட்டில் உள்ள ஒரு பெரிய மருத்துவமனையில் இதய நோய் காரணமாக ஒரு நோயாளியை ஐ.சி.யூவில் வைத்து சிகிச்சை பார்த்து கொண்டிருந்தார்கள் மருத்துவர்கள்.
அப்போது திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட, மருத்துவர்களில் முயற்சியால் அவர் காப்பாற்றப்பட்டார். பின்னர் மயக்கத்திலிருந்து அவர் சொன்ன வார்த்தைகள் அனைத்தும் கேட்பவர்களை நடுநடுங்க வைத்தது.
அதாவது, மாரடைப்பு ஏற்பட்டவுடன் தன் உடலிலிருந்து தான் வெளியில் வந்ததாகவும், இந்த அறையின் ஓரத்தில் நின்று கொண்டு தனக்கு வழுக்கைத்தலை மருத்துவர் ஒருவர் சிக்கிச்சையளிப்பதை தானே பார்த்ததாகவும் கூறியுள்ளார்.
அவர் வீட்டிலிருந்து மயக்கநிலையில் வந்து மருத்துவமனையில் சேர்ந்துள்ளார். பின்னர் எப்படி அவர் சரியாக மருத்துவரை பற்றி கூறியுள்ளார் பார்த்தீர்களா? அதான் ஆச்சரியம்!
இன்னொரு சம்பவம், கடந்த 1977 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் ஒரு பெண்ணுக்கு கடுமையான மாரடைப்பு வந்து இதயதுடிப்பு நின்றவரை உயிர்ப்பிக்கும் முயற்சியில் மருத்துவர்கள் இருந்தபோது, நடந்ததை பற்றி அவரே கூறுகிறார்
என் உடலைவிட்டு நான் அப்படியே மேலே போனேன், மருத்துவமனை மொட்டை மாடியில் ஒரு செருப்பும், பூக்களும் இருப்பது எனக்கு தெரிந்தது என அவர் கூறினார். அங்கு போய் மருத்துவர்கள் பார்த்த போது உண்மையிலேயே அங்கு அந்த பொருட்கள் இருந்துள்ளது.
இது போல பல உண்மை சம்பவங்கள் உலகெங்கிலும் இங்கொன்றுமாக, அங்கொன்றுமாக நடந்து கொண்டிருப்பதாக மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.
இது சம்மந்தமாக மாரடைப்பு வந்து செத்துப் பிழைத்த 101 நோயாளிகளிடம் ஓர் ஆராய்ச்சி நடத்தப் பட்டது. மாரடைப்பு வரும் நேரத்தில், இதயம் கொஞ்ச நேரம் துடிக்காமல் பின்னர் இயங்க ஆரம்பிக்கும். அந்த நேரத்தில் விலங்குகள் அல்லது செடிகொடிகளை பார்த்தல், அவர்கள் அறைகளில் நடப்பது தெரிவது, அவர்கள் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவம் மறுபடி நடத்தல் போன்ற பல விடயங்களை தாங்கள் உணர்ந்ததாக அவர்கள் கூறியுள்ளார்கள்.
இப்படியான பல தனி மனித உதாரணங்கள், பல மருத்துவ விஞ்ஞானிகள் ஆராய்ச்சிகள் நடந்து வந்தாலும், இறந்தவர்கள் அதன் பின்னர் என்ன ஆவார்கள் என்பதை முற்றிலுமாக யாராலும் கணிக்கமுடியவில்லை என்பதே நிதர்சன உண்மையாகும்.

No comments:

Post a Comment