தொலைக்காட்சி!!

Search This Blog

Sunday, June 26, 2016

உலக கராத்தே சம்பியனாக யாழ். மைந்தன்

2016 ஆண்டுக்கான கராத்தே உலக சாம்பியன் பட்டத்தை இலங்கையை சேர்ந்த அகிலன் கருணாகரன் என்ற கராத்தே வீரர் வென்று சாதனை படைத்துள்ளார்.
பிரித்தானியாவில் வசித்து வரும் யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையை சேர்ந்த அகிலன் கருணாகரன் அயர்லாந்தில்(டப்ளின்) 15ம் திகதி முதல் 19ம் திகதி வரை நடைபெற்ற கராத்தே உலக சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்றார். இதில் 36 நாடுகளில் இருந்து 2254 விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர்.
66 போட்டியாளர்கள் பங்கேற்ற ஒரு பிரிவில் விளையாடி முதல் இடத்தைப் பெற்று தங்கப் பதக்கத்தை பெற்றுக்கொண்டதுடன் இந்த ஆண்டுக்கான உலக சாம்பியன் பட்டத்தையும் பெற்றுக் கொண்டார்.
2014ல் போலந்து நாட்டில் நடைபெற்ற சாம்பியன்ஷிப் போட்டியில் இவர் வெள்ளிப் பதக்கத்தை பெற்றுக் கொண்டார். 2015ல் பெல்ஜியத்தில் நடைபெற்ற ஐரோப்பிய சாம்பியன்ஷிப்பில் இவர்; வெண்கலப்பதக்கத்தை பெற்றுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
12068518
valavi http://www.canadamirror.com/canada/64848.html#sthash.SjQeQZID.dpuf

No comments:

Post a Comment