தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 12 பிப்ரவரி, 2016

எண் 9 ல் பிறந்தவருக்குரிய சகல பலன்கள்! பிறப்பு முதல் இறப்பு வரை!


எண் 9-யில் பிறந்தவருக்குரிய பலன்கள்
செவ்வாய் நட்சத்திரம் :- மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம்
இயற்கையிலேயே துடிப்பும், வேகமும் கொணட் 9 எண்காரர்களின்சிறப்பு இயல்புகளை இங்கு விவரமாகப் பார்ப்போம். இந்த எண்ணின்நாயகர் முருகப் பெருமான் அவரே தேவர்களுக்குச்சேனாதிபதியாவார்.
எனவே சேனாதிபதிக்குள்ளகட்டுப்பாடும்,திறமையும், சவால்களைத் துணிந்து எதிர்கொள்ளும் தன்மையும்இவர்களுக்கு உண்டு. இரத்தத்தைப் பார்த்து இவர்கள் பயப்படமாட்டார்கள். தெருச் சண்டை, யுத்தக்களம் போன்ற இடங்களில்இவர்களைப் பார்க்கலாம். மேலும் அதிகாரமுள்ள காவல்துறை,இராணுவம் ஆகிய தொழிலில் மிகவும் விருப்பம் உடையவர்கள்இவர்கள்தான்! மற்றவர்கள் பயப்படும் காரியங்களைத் துணிந்துஏற்றுக் கொள்வார்கள். துணிவே துணை என்று நடை போடுவார்கள்.
இவர்களுக்கு முன்கோபமும் படபடப்பும் உண்டு. உடலும் சற்றுமுறுக்கேறி நிற்கும். நான்கு எண்காரர்களைப் போல் இவர்களுக்குக்கோபம், ரோஷம், தன்மானம் ஆகிய மூன்று குணங்களும்நிறைந்திருக்கும். எனவே இவர்களுக்கு எதிர்ப்பு இருந்து கொண்டேஇருக்கும். இவர்கள் எத்தொழிலிலும், பதவியிலும், நிர்வாகத்திலும்வல்லவர்கள். இவர்கள் ஓரளவு ஒல்லியானவர்களே! ஆண்களில்பெரும்பாலோர் மீசை வளர்ப்பதில் விருப்பம் உடையவர்கள்.நாவன்மை மிகுந்தவர்கள்.
இவர்களில் அதிர்ஷ்டசாலிகள் மென்மேலும் அதிர்ஷ்டசாலிகளாகவும்,துரதிர்ஷ்டசாலிகள் தொடர்ந்து துரதிர்ஷ்டசாலிகளாகவும்இருப்பார்கள். இந்த எண்காரர்களுக்கு உடலில் அடிக்கடி காயங்கள்,விபத்துக்கள் போன்றவை ஏற்படும். ஆயினும் அதைக் கண்டு பயப்படமாட்டார்கள்.
9&ம் எண்ணில் பிறந்தவர்களின் பெயர்கள் 8-ம் எண்ணில் மட்டும்இருந்து விட்டால் தற்கொலை முயற்சிகளும், வாகனங்களால் விபத்துஉண்டு.
இந்தச் செவ்வாய்க் கிரக ஆதிக்கர்கள் சைக்கிள், மோட்டார் சைக்கிள்,ஸ்கூட்டர் லாரி, காளை மாண்டு வண்டிகள், குஸ்தி, நீச்சல்போட்டிகள், மிருகவேட்டை, உடற்பயிற்சிகள் ஆகியவற்றில் மிகவும்விருப்பம் உடையவர்களாக இருப்பார்கள். சர்க்கஸ்விளையாட்டுக்களில் விருப்பமுடன் ஈடுபடுபவர்கள் இவர்கள்தான்.கார், சைக்கிள், லாரி, பஸ் ஆகியவற்றை மிகவும் வேகமாகஓட்டுபவர்கள் இவர்கள் தான்.
இவர்கள் எதற்கும், எப்போதும்பயப்பட மாட்டார்கள்! மேலும் தங்களது நோக்கத்திற்காகக்கடுமையான உழைக்கவும் தயங்க மாட்டார்கள். இவர்கள் எப்போதும்அலைபாயும் மனத்தை உடையவர்களாக இருப்பார்கள். இறைவன்இவர்களின் மனத்தை அமைதியாக வைத்திருக்க அனுமதிப்பதில்லைபோலும்!இவர்கள் நடப்பதில் மிகவும் பிரியமுடையவர்கள்!இவர்களுக்கு என்னதான் வசதியிருப்பினும் கால் தேய நடந்து செல்வதில் இவர்களுக்கு விருப்பம் அதிகம். எந்த ஒரு அரசாங்கஅலுவலகத்திலும், தனியார் ஸ்தாபனங்களிலும் தலைமைப் பதவியில்இவர்கள் நன்கு புகழ் பெறுவார்கள். இவர்கள் உழைப்பதில் சுகம்காண்பார்கள். சோம்பலை இவர்கள் வெறுப்பவர்கள். ஊர்சுற்றுவதிலும் அலாதிப் பிரியம் உடையவர்கள்.
நடுரோட்டில் ஒரு நோஞ்சானை ரௌடி ஒருவன் தாக்கினால் அதைக்கண்டு பொறுக்காமல், அந்த முரடனுடன் தைரியமாகச் சென்றுபோராடுபவர்கள் இவர்கள்தான். சிறு வயதுகளில் மிகவும்சிரமப்பட்டாலும், தங்ளது மன உறுதியினாலும், விடாமுயற்சியினாலும், இவர்கள் எப்படியும் பிற்காலத்தில் முன்னேறிவிடுவார்கள்.
இவர்கள் சுதந்திரப் போக்கு உடையவர்கள்! அவசரக்காரர்கள்!உணர்ச்சி மயமானவர்கள்! பிடிவாத குணம் இயற்கையிலேயேஉண்டு. ஆபத்து மிகுந்த தொழிலில் இறங்கி விடுவார்கள். அதில்வெற்றியும் பெறுவார்கள். இவர்களின் சண்டைக் குணத்தால்,குடும்பத்தில் அடிக்கடி குடும்பப் பிரச்சனைகள் ஏற்படும். தங்களைஎல்லோரும் மதிக்க வேண்டும் என எதிர்பார்ப்பார்கள்.
தாங்கள்உயர்ந்தவர்கள் என்ற நினைப்பு இவர்களுக்கு எப்போதும் உண்டு.எந்த நிர்வாகத்திலும் தலைமைப் பதவி அல்லது பொறுப்புகள்கிடைத்தால்தான், இவர்கள் அவற்றில் மிகவும் தீவிரமாகவும்,சிறப்பாகவும் ஈடுபட்டு, அந்தக் காரியங்களைச் செய்து முடிப்பார்கள்.இல்லை என்றால் அவைகளை அப்படியே விட்டுவிட்டு ஒதுங்கிவிடுவார்கள். பின்பு அந்தக் காரியங்கள் கெட்டழிந்தாலும்கூட அதைப்பற்றிச் சிறிதும் கவலைப்பட மாட்டார்கள்.
இவர்களது திருமணம்
இவர்கள் தாம்பத்தியத்தில் மகுந்த விருப்பமும், வேகமும்உடையவர்கள். தங்களது நட்பு எண்களான 3, 5, 6, 9 ஆகியஎண்களில் பிறந்தவர்களை (பிறவி எண், கூட்டு எண்) மணந்துகொண்டால், இவர்களுக்கு ஆனந்தமான திருமண வாழ்க்கைஅமையும். குழந்தை பாக்கியம் இவர்களுக்கு உண்டு! ஆண் குழந்தைநிச்சயம் ஏற்படும்.
2, 11, 20, 29, 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்த பெண்களையும்,கூட்டு எண் 2, 8 வரும் பெண்களையும் திருமணம் செய்யக்கூடாது!திருமண வாழ்க்கையே கசந்துவிடும். சில அன்பர்கள் மனைவியின்கொடுமையால் மனைவியை விட்டு ஓடத் துணிந்து விடுவார்கள்.திருமண நாளின் எண்கள் 3, 6, 9, 1 ஆகியவை வந்தால், குடும்பவாழ்க்கை நன்கு அமையும்.
இவர்களது நண்பர்கள்
3, 6, 9 ஆகிய எண்களை உடைய அன்பர்கள் இவர்களுக்கு நல்லநண்பர்களாகவும், கூட்டாளிகளாகவும் அமைவார்கள். 1-ந் தேதிபிறந்தவர்களின் உதவி நடுத்தரமானதுதான். 2, 8 எண்காரர்களின்நட்பையும், கூட்டையும் தவிர்த்துவிட்டால், பல நஷ்டங்களைஎதிர்காலத்தில் தவிர்த்துக் கொள்ளலாம்.
இவர்களது நோய்கள்
இவர்களது உடலில் ஏதாவது ஒரு நீண்டகாலப் பிணி இருக்கும்.அடிக்கடி வாய்வுத் தொந்தரவுகள், வயிற்றுவலி போன்றவை ஏற்படும்.இவர்களுக்குப் பல் வலி, பற்களில் பூச்சி விழுதல் போன்றவைஏற்படும். கால் ஆணித் தொந்தரவுகள், பாதங்களில் வலி,வெடிப்புக்கள் ஆகியவை ஏற்படும்.
மிகவும் உஷ்ண தேகிகளாதலால்,இவர்களுக்கு அடிக்கடி மலச்சிக்கலும், மூல உபத்திரவங்களும்,வலியும், கண்களில் எரிச்சலும் ஏற்படும். பகலைவிட இரவில்உற்சாகமாக இருப்பார்கள். நீண்ட நேரம் இரவில் குழந்தைகளுடன்விளையாடிக் கொண்டோ, பேசிக் கொண்டோ இருப்பார்கள்.இவர்கள் தினமும் நீராகாரம் பருகி வந்தால் மிகவும் நல்லது! உடல்சூட்டைத் தணிக்க நீராகாரம் சிறந்த பானமாகும். நெருப்புக்காயங்கள், விபத்துக்கள் ஆகியவைகளால் உடலில் பாதிப்பும் உண்டு.இரத்தக் கட்டிகள், குடற்புண்கள், இரத்தம் கெடுதல் ஆகியவைகளால்பாதிப்பும் உண்டு! கூர்மையான ஆயுதங்களைக் கையில் வைத்துக்கொள்ளக்கூடாது! இந்த எண்காரர்களின் உடம்பில் எப்படியும்ஆபரேஷன்கள் (ஏதாவது ஒரு காரணத்திற்காவது) செய்ய வேண்டிவரும்.
இவர்களது தொழில்கள்
இவர்களில் பெரும்பாலோர் எஞ்சினியர்களாகவும், அறுவை சிகிச்சைநிபுணர்களாகவும் இருப்பார்கள். இராணுவம், போலீஸ், மேனேஜர்போன்ற அதிகாரப் பதவிகளின் விருப்பம் உடையவர்கள். மேலும்கட்டிடம் கட்டுதல் இயந்திரங்கள், வியாபாரம், இரும்புச் சாமான்கள்உற்பத்தி ஆகியவை நல்ல அதிர்ஷ்டம் தரும். சிறந்தஅமைச்சர்களாகவும், இராஜ தந்திரிகளாகவும் இருப்பார்கள். வானஇயல் துறையும், இவர்களுக்கு மிகவும் பிடிக்கும்.
நாட்டிற்காகத் துப்பாக்கி ஏந்து வீரர்கள் இவர்களதான். அநீதிகளைஎதிர்த்துப் போராடுவார்கள். இவர்கள் அரசியலிலும் ஈடுபடலாம்.பலரை வைத்து வேலை வாங்கும் தலைவர்களாக, உயர் அதிகாரியாக,மேஸ்திரியாகப் புகழ் பெறுவார்கள். இவர்கள் வீரம் மிகுந்தவர்கள்,துப்பறியும் தொழில் ஒத்து வரும். கலைத் தொண்டிலும்,உணர்ச்சியைத் தூண்டும் எழுத்திலும் பிரகாசிப்பார்கள்! பொதுமக்களுக்காகத் தியாகம் (உண்மையாகச்) செய்ய வல்லவர்கள்.
பிரபலவேட்டைக்£கரர்களாகவும், வனவிலங்குகளைத் திறமையாக அடக்கும்தொழிலும் சிவீக்ஷீநீ நன்கு பிரகாசிப்பார்கள். கால் பந்தாட்டம்,டென்னிஸ், ஹாக்கி, பேட்மிண்டன், வாலிபால், சைக்கிள் பந்தயம்ஆகியவற்றில் ஈடுபாடு கொள்வார்கள்! சிறந்த விளையாட்டுவீரர்களாகவும் புகழ் பெறுவார்கள். இரயில், கார், லாரி ஆகியவைஓட்டுநர்கள், தீயணைப்புத் துறை, மின்சாரத் துறை ஆகிய வற்றிலும்இவர்கள் தொழில் அமையும்.
செவ்வாய் யந்திரம் & செவ்வாய் & 21
8 3 10
9 7 5
4 11 6
செவ்வாய் மந்திரம் & செவ்வாய்& 21
தரணீ கர்ப்ப ஸம்பூதம்
வத்யுத்காந்தி ஸமப்ரம்
குமாரம் சக்தி ஹஸ்தம் ச
மங்களம் ப்ரணமாம்யஹம்
எண் 9 சிறப்புப் பலன்கள்
செயல் வீரர்களான 9-ம் எண்காரர்களின் சிறப்புப் பலன்களைப்பார்ப்போம்.
எண்களில் முடிவானது இந்த எண்தான். எந்த எண்ணுடன்சேர்ந்தாலும், தன் இயல்புக் குணத்தை இழக்காதது இந்த எண்தான். 3எண்ணுடன் 9 சேர்ந்தால் 12 கிடைக்கும். மீண்டும் கூட்டினால் (1+2) 3என்ற எண்ணே மீண்டும் கிடைக்கும். எனவே 9 எண்காரர்கள் மற்றஎண்காரர்களுடன் சேர்ந்து செயல்பட்டுத் தங்களின் இயல்பிறக்குஏற்றவாறு அவர்களை மாற்றிவிடும் திறமை படைத்தவர்கள்! இவர்கள்தீவிரமான மனப்போக்கும், தைரியமான செயல்பாடும்கொண்டவர்கள்.
எந்த முயற்சியையும் திட்டமிட்டு, அதன்படியேசெயல்படுவார்கள். எத்துணைச் சோதனைகள் வந்தாலும்,அவைகளைத் துணிவுடன் சந்தித்து வெற்றி பெறுவார்கள்! மற்றவர்கள்இவர்களை அலட்சியம் செய்தால் உடனே தட்டிக் கேட்பார்கள்.மனதில் எப்போதும் தைரியம், தன்னம்பிக்கை உண்டு. தவறுகளைக்கண்டால் உடனே தட்டிக் கேட்கவும் தயங்கமாட்டார்கள்.
எதையும் திட்டமிட்டு, நேரம், காலம் பார்த்துத் தங்களது காரியங்களைநடத்துக் கொள்வார்கள். ஆனால் இவர்கள் எதையும் போராடித்தான்பெற வேண்டும். இவர்களது பேச்சில் எப்போதும் வேகமும்,அதிகாரமும் உண்டு! பயம் என்பது இருக்காது! செவ்வாய்க் கிரகம்,தேவர்களுக்குத் தளபதியாவார்.
எனவே இவர்களுக்கச் சண்டையிடும்மனோபாவம் இயற்கையிலேயே அமைந்துவிடும். இரத்தம், விபத்து,கொலை போன்ற சம்பவங்களிலும் எல்லாம் துணிந்துபாதிக்கப்பட்டவர்களுக்கு முடிந்த உதவிகளைச் செய்வார்கள். வேகம்,சக்தி, அழிவு, போர் என்பவற்றின் எண் இது! ஆற்றல், ஆசை,தலைமை தாங்குதல் ஆதிக்கம் செலுத்தல் போன்ற குணங்கள்இவர்களிடம் இருக்கும். எதையும் ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மேல்சிந்திக்க மாட்டார்கள்.
விரைவிலேயே ஒரு முடிவு எடுத்து அதைநிறைவேற்றுவதில் வேகம் காட்டுவார்கள். பலருக்கு உடலில்காயங்களும், சிறு விபத்துக்களும் ஏற்படும். பெரும்பாலோர் போர்வீரர்கள், காவல் துறை , ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற கடினமானதுறைகளிலும் புகழ்பெற்று விளங்குவார்கள்.
இவர்கள் நிதானம் குறைந்தவர்கள்! உணர்ச்சி வசப்பட்டவர்கள்,பிறருக்கு அடங்கி நடக்க முடியாதவர்கள். பகைவர்களை இவர்களேஉருவாக்கிக் கொள்வார்கள். பல சமயங்களில் இவர்களது பேச்சேஇவர்களுக்குப் பல சண்டைகளைக் கொண்டு வந்துவிடும். பங்காளிச்சண்டை, மனைவி குடும்பத்தாருடன் ண்டை என்று அடிக்கடிபிரச்சினைக்குள்ளாவார்கள்! பிறர் தங்களைக் குறை கூறவதை மட்டும்இவர்களால் தாங்கிக் கொள்ள முடியாது!
சந்தர்ப்பங்களைச் சமாளிக்கும் திறமையும், சிறந்த நிர்வாக ஆற்றலும்உண்டு! அதிகாரத்துடன் மற்ற அனைவரையும் வேலைவாங்குவார்கள். இல்லையெனில் மனம் உடைந்து போவார்கள்.இவர்கள் பல ஊர்களைச் சுற்றிப் பார்க்க விரும்புவார்கள். பலர்வெளிநாடுகளுக்கும் சென்று வருவார்கள். இவர்கள் ஆன்மீகத்தலைவர்களைக் கண்டவுடன் பணிந்து மிகவும் மதிப்புகொடுப்பார்கள். பலருக்கு முன்னோர்கள் தேடி வைத்த செல்வங்கள்இருக்கும்.
இவர்களுக்கு மனைவியின் வழி சொத்துக்கள் கிடைக்கும்யோகமும் உண்டு. எவ்வளவு துன்பம் வந்தாலும் தாங்கிக் கொள்ளும்மனோ தைரியமும் உண்டு. இவர்கள் கூர்மையானஅறிவுடையவர்கள். எதிரிகளைச் சமயம் அறிந்து அவர்களைஅழித்துவிடும் இயல்பினர். தீவிரமான ஆராய்ச்சிகளில் பலர்ஈடுபடுவார்கள். இவ்வளவு இருப்பினும் சமூகக் கட்டுப்பாடுகளுக்குமிகவும் மதிப்புக் கொடுப்பார்கள்.
தெய்வம் உண்டு என்பதைமுழுமையாக நம்புவார்கள். தங்களது தொழிலில் மிகவும் உற்சாகஉள்ளவர்கள்! தங்களது தொழிலை பெருகச் செய்வது எப்படிஎன்பதைப் பற்றிய எண்ணத்திலேயே இருப்பார்கள். பலருக்குஅரசாங்கப் பணியிலும், காவல் துறையிலும், இராணுவத்திலும்மிகவும் ஈடுபாடு உண்டு.
அதிர்ஷ்ட நாட்கள்
ஒவ்வொரு மாதமும் 9, 18, 27 ஆகிய நாட்களும், 6, 15, 24 ஆகியநாட்களும் மிகவும் சிறப்பானவை! எனவே கூட்டு எண்கள் 6 மற்றும் 9வரும் நாட்களும் இவர்களுக்கு மிகவும் சாதனமானவையே.
1, 10, 19, 28 மற்றும் எண் 1 வரும் நாட்களும் நடுத்தரமானபலன்களையே கொடுக்கும்.
ஒவ்வொரு மாதத்திலும் 2, 11, 20, 29 நாட்களும் கூட்டு எண் 2 வரும்நாட்களும் துருதிர்ஷ்டமானவை! எந்தச் செயலும் தொடங்கக் கூடாது.
அதிர்ஷ்ட இரத்தினம்
இவர்களுக்குப் பவழம் மிகவும் ஏற்றது! இரத்தக் கல் மிகவும் ஏற்றது!மேலும எனப்படும் இரத்தினக் கல்லும் மிகவும் நன்மை தரும்.
அதிர்ஷ்ட நிறங்கள்
இவர்களுக்கு கருஞ்சிவப்பு, நீலம், சிவப்பு ஆகிய நிறங்கள் மிகவும்ஏற்றவை! ஆனால் கரும்பச்சை, கருப்பு மற்றும் வெள்ளை நிறங்கள்துரதிர்ணடமானவை.
9 ஆம் தேதி பிறந்தவர்கள்
வாழ்க்கையில் எதிர் நீச்சல் போட்டு முன்னேறுபவர்கள். எளிதில்உணர்ச்சி வசப்படுவார்கள். சுதந்திரமான எண்ணங்கள் நிறைந்தவர்.புதிய காரியங்களைச் செய்ய வேண்டும் என்ற ஆதங்கம்உடையவர்கள். மற்றவர்களை அடக்கி ஆள விரும்புவார்கள்! உற்றார்,உறவினர்களிடம் கூட அடிக்கடி சண்டை போடு குணமும் உண்டு.
18 ஆம் தேதி பிறந்தவர்கள்
போராட்டமே இவர்களது வாழ்க்கையாக இருக்கும். இவர்கள்மற்றவர்களின் எச்சாக்கையைப் பொருட்படுத்தமாட்டார்கள். எதையும்தங்களின் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வரவே முற்படுவார்கள். பேச்சுத்திறமை அதிகம் உண்டு. கட்டைப் பஞ்சாய்த்து செய்து வைக்கும்குணத்தவர்கள்.
அவசரம், பிடிவாதம், சுயநலம் ஆகியவற்றை விட்டுவிட்டால்,இவர்கள் பெரும் சாதனைகளைப் படைக்கலாம். காதலிலும் அதிகாரம்காட்டி, அதன் மூலம் பிரச்சினைகளை உண்டு பண்ணிக்கொள்வார்கள். எப்போதும் உணர்சி வசப்பட்டவர்கள், மனஅமைதியை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
27 ஆம் தேதி பிறந்தவர்கள்
அறிவும், ஆற்றலும் நிறைந்தவர்கள். பலர் இராஜ தந்திரிகளாகவும்விளங்குவார்கள். சமூகத்தில் இவர்களுக்கு நல்ல செல்வாக்கு நிச்சியம்கிடைக்கும். இரவு நேரத்தில் வேலை செய்வது இவர்களுக்கு பிடிக்கும்.இவர்களது திட்டங்கள் எல்லாம் நிச்சயம் வெற்றி அடையும். மனம்தளராமல் உழைப்பவர்கள். மற்ற இரு தேதிகளில் பிறந்த அன்பர்களைவிட அமைதியானவர்கள். செயலில் நம்பிக்கை உடையவர்கள்.ஆன்மிகத்தில் ஈடுபாடு உண்டாகும். நல்ல செயல்களின் மூலம் பேரும்,புகழும் அடைவார்கள். சுதந்திர மனப்பான்மை உண்டு. நிதானமாக,அவசரப் படாமல் (சீரான திட்டத்துடன்) செயல்பட்டு வெற்றியைச்சீக்கிரம் அடைவார்கள். ஒரு தடவைக்கு இரண்டு தடவை யோசித்தேகாரியங்களில் ஈடுபடுவார்கள்.

எண் 9க்கான (செவ்வாய்) தொழில்கள்
இவர்கள் நிர்வாகச் சக்தி மிகுந்தவர்க! ஆயுதம் தாங்கிச் செய்யும்அனைத்துத் தொழிலும் வெற்றி பெறுவார்கள். இராணுவம், காவல்துறை, அறுவை மருத்துவர்கள் போன்றவைகளில் பிரகாசிப்பார்கள்.கார், ரயில், விமானம், ஓட்டுவதில் நாட்டம் உள்ளவர்கள். வேகமாகச்செல்வது இவர்களுக்கு மிகவும் பிடிக்கும்.
பொறுமை இவர்களுக்குப்பிடிக்காத விஷயம். எலக்ட்ரிகல் என்ஜினியரிங் துறை,விவசாயத்துறையும் ஒத்து வரும். தீயுடனும், வெப்பத்துடனும் சேர்ந்தஎந்தத் திட்டங்களிலும் வெற்றி பெறுவார்கள். எலக்ட்ரானிக்ஸ்துறையிலும் பிரகாசிப்பார்கள். சிலர் கோபக்காரர்களாக மாறி தீயசெயல்களைச் செய்யவும் தயங்கவும் மாட்டார்கள். பொறியியல்தொடர்பான பெரிய பொறுப்புகளை தைரியமாக ஏற்று வெற்றிபெறுவார்கள்.
இரும்பு, எஃகு தொழில்களில் ஈடுபட்டால் சீக்கிரம்முன்னேறலாம். அச்சகத் தொழிலும் நன்கு அமையும். கட்டிடத் துறை,மின்சாரத் துறை, விளையாட்டுத் துறை, வாழை, மொச்சை, சிவப்புதானியம் போன்றவை உற்பத்தி, உரம் சம்பந்தப்பட்ட தொழில்கள்,தச்சு வேலை, போன்ற தொழில்கள் அனைத்தும் வெற்றி தரும். விளையாட்டு வீரர்கள். மலையேறும் வல்லுநர்கள் போன்றவையும்வெற்றி தரும். ஆன்மிகத்திலும் சிலர் தீவிரமாக, முழுமையானமனதுடன் ஈடுபடுவார்கள். சிலர் தொண்டு நிறுவனங்களையும்தொடங்கி, நன்கு நிர்வகிப்பார்கள்.
நவக்கிரக மந்திரங்கள் – செவ்வாய் (குஜன்)
மங்களன் அல்லது செவ்வாய் தொடர்பான பிரச்சனைகள் மற்றும்செவ்வாய் தசை அல்லது செவ்வாய் அந்தர் தசையின் போது:
செவ்வாயின் கடவுளான முருகன் மற்றும் சிவனைத் தினமும்வழிபடவேண்டும்.
முருகன் மந்திரம் “ஓம் சரவணபவாய நமஹ” கந்த சஷ்டி கவசம் தினமும் படிக்கவேண்டும்.
சிவ மந்திரம் “ஓம் நமச் சிவாய” சொல்ல வேண்டும்.
தினசரி முருகன் அல்லது சிவன் ஸ்தோத்திரம் படிக்க வேண்டும்.
செவ்வாய் மூல மந்திர ஜபம்:
“ஓம் க்ரம் க்ரீம் க்ரௌம் ஷக் பௌமாய நமஹ”,
40 நாட்களில் 7000 முறை சொல்ல வேண்டும்.
செவ்வாய் ஸ்தோத்திரம் படிக்க வேண்டும்.
தரணீ கர்ப்ப ஸம்பூதம்
வித்யுத்காந்தி ஸப்ரபம் !
குமாரம் சக்தி ஹஸ்தம் ச
மங்களம் ப்ரணமாம் யஹம்!!
தமிழில்,
சிறப்புறு மணியே செவ்வாய்த் தேவே!
குறையிலா தருள்வாய் குணமுடன் வாழ
மங்கள் செவ்வாய் மலரடி போற்றி!
அங்காரகனே அவதிகள் நீக்கு!
தொண்டு: செவ்வாய்க்கிழமை நன்கொடையாக துவரம் பருப்பு, சிவப்பு பயறு கொடுக்கவேண்டும்.
நோன்பு நாள்: திங்கள், செவ்வாய்கிழமை உகந்தது.
பூஜை: முருகன் பூஜை அல்லது ருத்ர அபிஷேக பூஜை.
ருத்ராட்சம்: 3 அல்லது 6-முக ருத்ராட்சம் அணியவேண்டும்.
அங்காரக காயத்ரி மந்திரம்
வீரத்வஜாய வித்மஹே விக்ன ஹஸ்தாய தீமஹி|
தந்நோ பௌம: ப்ரசோதயாத்||
செவ்வாய் தசையின்போது வால்மீகி ராமாயணத்தில் பாலாகாண்டத்தின் 36 வது மற்றும் 37 வது அத்தியாயம் தினமும் படிக்கவேண்டும். மேலும் செவ்வாய் கடன்களை தீர்ப்பவர் மற்றும் செல்வம்கொடுப்பவர். பின்வரும் செவ்வாயின் இந்த ஸ்தோஸ்திரம் கடன்தீர்க்கவும், செல்வம் பெருகவும் மிகவும் பரிந்துரைக்கப்படுகிறது.
சங்கீத முமூர்த்திகளில் ஓருவரும், வேத விற்பன்னருமான
ஸ்ரீ மான் முத்துசாமி தக்ஷிதர் அருளியது.
செவ்வாய் பகவான் கீர்தனைகளை சுரட்டி ராகத்தில்
செவ்வாய் பகவான் கீர்த்தனம் – பல்லவி
அங்காரகமாஸ்ரயாம் யஹம் விந்தாஸரித ஜனமந்தாரம்
மங்களவாரம் பூமிகுமாரம் வாரம் வாரம் (அங்காரகம்)
அனு பல்லவி
சிருங்காரக மேஷ வ்ருஸ்சிகராஸ்யதிபதிம் ரக்தாங்கம்
ரக்தாம் பாரதி தரம் ஸக்தி ஸூலதரம்
மங்களம் கம்புகளம் மஞ்சுளதர பதயுகளம்
மங்களதாயாகம் மேஷ துரங்க மகரோத்துங்கம் (அங்)
சரணம்
தானவ ஸூரஸேவித மந்தஸ்மித விலஸித வக்த்ரம்
தரணீப்ரதம் ப்ராத்ரு காரகம் ரக்த நேத்ரம்
தீனரக்ஷம் பூஜித வைத்யனாத க்ஷேத்ரம்
திவ்யௌகாதி குரு குஹ காசக்ஷானுக்ரஹ பாத்ரம்
பானுசந்த்ர குருமித்ரம் பாஸமான ஸூகளத்ரம்
ஜானுஸ்த ஹஸ்த சித்ரம் சதுர்புஜம் அதிவிசித்ரம் (அங்)
நிறைவேற்றுபவரும், மங்களவார நாயகனும், பூமி புத்ரனும், மேஷ,விருச்சிக ராசிகளின் அதிபதியும், சிவப்பு நிறத்தவரும், சக்தியையும், சூலத்தையும் தரித்துள்ளவரும், சங்கு போன்ற கழுத்தைகொண்டவரும், ஆட்டை வாகனமாய் கொண்டுள்ளவரும், பூமியையும்,சகோதரனையும் தருபவரும், திவ்ய, சித்த, மாயை என மூன்றுதத்துவம் நிறைந்த குருவானவரும், சூர்யன், சந்திரன் மற்றும் குருவிற்கு நண்பரானவரும், கீர்த்தி வாய்ந்தபத்தினியை கொண்டவரும், தேவர்களால் சேவிக்கப்படுபவரும், முழங்காலில் கையை வைத்துள்ளவரும், மந்தஹாசமாய் உள்ளவரும்,குரு குஹனின் அனுக்கிரகத்திற்கு பாத்திரமானவரும், நான்குகரங்களை கொண்டவரும், வைத்தீஸ்வரன் கோவிலை தன்ஷேத்திரமாய் கோண்டுள்ளவருமான அங்காரகன் எனும் செவ்வாய்பகவானை துதிப்போம்.
செவ்வாய் தோஷம் நீங்க
செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் வளர்பிறை சுக்கில பட்சம் மற்றும்தேய்பிறை கிருஷ்ண பட்சங்களில் வருகின்ற செவ்வாய் கிழமைகளில்விரதம் இருந்து விநாயகப் பெருமானை வழிபட்டால் செவ்வைதோஷம் நீங்கி திருமணம் இனிதே நிறைவேறிடும்.
பூமி புத்ரோ மஹாதேஜோ ஜாதாம பயக்ருத்ஸதா !
வ்ருசக் ருத்விருஷ்டி விஷர்தா சபீடாம் ஹாது மேகுஜ !
செவ்வாய் பகவானுக்கு உரியவையும், பிரீத்தியானவையும்
ராசி மேஷம், விருச்சிகம் திக்கு தெற்கு
அதி தேவதை நலமகள், முருகன் ப்ரத்யதிதேவதை ஷேத்திர பாலகர்
தலம் வைதீஸ்வரன் கோவில் வாகனம் ஆட்டுக்கிடா
நிறம் சிவப்பு உலோகம் செம்பு
தானியம் துவரம் பருப்பு மலர் செண்பகம்,செவ்வரளி
வஸ்திரம் சிவப்பு நிற ஆடை ரத்தினம் பவழம்
நைவேத்யம் துவரம் பருப்பு பொடிஅன்னம் சமித்து கருங்காலி
செவ்வாய் தோஷம் உள்ள அனைவரும் இத் தலம் வந்து துவரைஅன்னம் நைவேத்யம் செய்து இவரை வழிபடவேண்டும். இவர்அனுக்கிரகம் கிட்டினால் தோஷ நிவர்த்தி பெற்று, மணவினைபெறலாம் அன்பது
திண்ணம். இத் தல வழிபாடு கோள் வினைகள், வாத நோய், பேய்பிசாசு வாதனைகள், கிரக பீடை, சொறி சிரங்கு, குஷ்ட நோய், சித்தபேதம், வெப்பு நோய் போன்ற கொடிய நோய்களை தீர்க்க வல்லது.
இங்கு விற்கப்படும் ” வைத்தியநாதர் மருந்து ” என்ற திருச்சாந்துருண்டையை உண்ணசகல நோய்களிலுமிருந்தும் நிவாரணம் பெறலாம். இங்கு நாம்வாங்கும் அர்ச்சனை தட்டுடன் வெல்லம், உப்பு, மிளகு ஆகியனவும்தரப்படும். வெல்லத்தை அங்குள்ள தீர்தத்தில் கரைத்து விட்டு,மிளகையும், உப்பையும் தையல் நாயகி சந்நதி எதிரில் சேர்க்கவேண்டும். மிகச் சிறிய அளவு உப்பையும், மிளகையும் பிரசாதமாகஉட்கொள்ள வேண்டும்.
உடலில் ஏதேனும் கட்டிகள் இருந்தால், வெள்ளம் குளத்து நீரில்கரைவது போல உடலிலுள்ல கட்டிகளும் கரைந்துவிடும் என்பதுநம்பிக்கை
சிறப்பான சில குறிப்புகள்
எண் :- 9
எண்ணுக்குறிய கிரஹம் :- செவ்வாய்
அதிர்ஷ்ட தேதிகள் :- 9,18, 27, 6,15, 24, 5,14
அதிர்ஷ்ட கிழமை :- செவ்வாய், வியாழன், வெள்ளி
அதிர்ஷ்ட மாதம் :- மார்ச், மே, ஜுன், செப்டம்பர், டிசம்பர்
அதிர்ஷ்ட ரத்தினங்கள் :- பவழம், நவரத்தினகற்கல்
அதிஷ்ட திசை :- தெற்கு
அதிர்ஷ்ட நிறம் :- சிகப்பு
அதிர்ஷ்ட தெய்வங்கள் :- முருகர், பைரவர், காயத்ரிதேவி
அதிர்ஷ்ட மலர்கள் :- செம்பருத்தி. செண்பகமலர்
அதிர்ஷ்ட தூப, தீபம் :- குங்குல்யம், சாம்பிராணி, கருங்காலி
அதிர்ஷ்ட சின்னங்கள் :- அன்னப்பட்சி, மயில், வேல், பழங்கள்
அதிர்ஷ்ட மூலிகைகள் :- வைகுண்டம், தலைசுருளி
அதிர்ஷ்ட யந்திரங்கள் :- லலிதா புவனேஸ்வரி யந்திரம்,சண்முகர் யந்திரம்
அதிர்ஷ்ட எண் :- 2, 3, 7, 9
ஆகாத எண் மற்றும் கூட்டுத்தொகை :- 6
ஆகாத தேதிகள் :- 6, 15, 24
http://www.newlanka.lk/4365

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக