தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 23 ஜனவரி, 2016

முன்தினம் வடித்த சோறை நீர்விட்டு அதில் தயிரையும் சேர்த்துப் பிசைந்து சாப்பிட்டால் ....


அமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலைக் கழகத்தில் ஒரு ஆராய்ச்சி செய்தார்கள்……….பழையதை வைத்து….
முன்தினம் வடித்த சோறை நீர்விட்டு அதில் தயிரையும்
சேர்த்துப் பிசைந்து சாப்பிட்டால் என்ன பலன் கிடைக்கும் என்று......
கிடைத்த முடிவுகளை பார்த்து மூக்கின் மேல் விரலை வைத்துக்கொண்டு
சொன்னார்களாம்,, தமிழர்கள் மனிதர்கள் அல்ல
அவர்கள் பெரிய விஞ்ஞானிகளாகத்தான் இருக்க வேண்டும் என்று……

ஏனெனில் அவர்களின் பாரம்பரிய உணவான
இந்த பழையதையும் ,தயிரையும் உண்டால்
உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது…..
வெள்ளை அணுக்கள் அதிகரிக்கிறது……..
உடல் சோர்வை போக்குகிறது……..
உடலில் உள்ள அனுச்சிதைவுகளை தடுக்கிறது….
உடல் சூட்டை தணிக்கிறது…….
வயிற்றிலுள்ள பழைய கழிவுகளை விரைந்து வெளியேற்றுகிறது......
உற்சாகமான மனநிலையைத் தருகிறது…!
என்று பலவிதமான நன்மைகளைப் பட்டியலிட்டனர்…..
இந்த ஆராய்ச்சி முடிவுகள் வெளிவந்ததும்,,,,நம்மவர்கள் குப்பை உணவான பர்கரையும்,, பீட்சாவையும்,, புரோட்டவையும் தேடி
அலைவது போல உலகமே பழையசோறைத் தேடி அலைந்தது…..
HOW to MAKE PALAYA
SORU?... என்று அமெரிக்கர்கள் இந்திய நண்பர்களிடமும்,,இணையத்திலும்
கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டனர்….

ஆனால் இன்றைக்கு நம்மவர்கள் சளிபிடிக்கும், உடல் குண்டாகி விடும்
என்றெல்லாம் சொல்லி பழையதை பழித்து வருகிறார்கள்…
அது பெரிய தவறு…
வெயில் காலங்களில் மட்டுமல்ல,,அனைத்து நாட்களிலும்
சாப்பிடுவதற்கேற்ற அருமையான உணவு பழையசோறு….!
சாப்பிட்டு மீதம் உள்ள சாதத்தில் சுமார் ஒரு
மணிநேரம் கழித்து தேவையான அளவு
தண்ணீரை ஊற்றி மூடிவைத்து 6 முதல் 8 மணிநேரம் கழித்து திறந்து பார்த்தால்
அமிர்த பானம் தயார்………..
இதில் தேவையான அளவு சாதத்தை ஒரு
மண்சட்டியில் எடுத்து அதனுடன் தயிர் கலந்து சின்னவெங்காயம், வெண்டைக்காய் ஆகிய வற்றையும் சிறிது சிறிதாக
வெட்டிப்போட்டு, தேவைப்பட்டால் சிறுது உப்பையும் ஒரு பச்சை மிளகாவையும் கலந்து நன்றாக பிசைந்து சாப்பிட்டு பாருங்கள்….
ஆகா….! …..இதுதான் தேவாமிர்தம் என்பதை
நீங்களே ஒப்புக்கொள்வீர்கள்….இந்த உணவு முறையை வாரத்தில் மூன்று
நாட்கள் மட்டுமாவது கடைபிடியுங்கள்…….
பாற்கடலை கடைந்து அமிர்தம் எடுத்தவர்கள் தேவர்கள்…….
அரிசிப்பானையில் தேவாமிர்தம் எடுக்க கற்றுக் கொடுத்தவர்கள் தமிழர்கள் …

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக