தொலைக்காட்சி!!

Search This Blog

Friday, November 13, 2015

முட்டாள் என்றால் மூட்டைதூக்கிப்பிழைப்பவன் என்றே பொருள்!


முட்டாள்களே. 
விஜய் ரசிகர்கள் எல்லாம் முட்டாள்கள், உடனே என்னை அஜித் ரசிகன் என்று நினைக்க வேண்டாம். தமிழன் ஆன விஜய் ரசிகனே முட்டாள் என்றால், அஜித் ரசிகர்கள் மாபெரும் முட்டாள்கள். மற்ற நடிகர்களின் ரசிகர்கள் இந்த அளவிற்கு சண்டை போட்டு கொள்ள வில்லை, இதை சொல்லும் போதே கேவலமாக இருக்கிறது. 

இந்த நாட்டில் எத்தனை பிரச்சினைகள், பூமி எதை நோக்கி சென்று கொண்டிருக்கிறது, எதை பற்றியும் கவலைப்படாமல் கொஞ்சம் கூட வெட்கம் இல்லாமல் விஜய் அஜித் போன்ற கூத்தாடி சம்பாதிப்பவர்களுக்காக சண்டை போட்டு கொள்கிறீர்கள். அவர்களுக்கு பணம் கொடுத்து நீ எப்படி நடிக்க சொன்னாலும் நடிப்பான், காரணம் அவன் நடித்து சம்பாதிப்பவன், அவனுக்காக நீ செலவு செய்து மன்றம் அமைத்து, சண்டை வேறு போட்டு கொண்டு த்தூ. இளைஞனே வெட்கமாக இல்லையா..?

ஒவ்வொரு 20 நொடிக்கும் நீர் பற்றாக்குறை மற்றும் மாசுபாட்டால் ஒரு குழந்தை இறந்து கொண்டு இருக்கிறது, நீர்வளம், மண்வளம் அழிந்து கொண்டு இருக்கிறது, பூமி வெப்பமயமாதல் நிகழ்வு அதிகரிக்கிறது, புதிய புதிய நோய்கள் உருவாகிறது, மனித சிந்திக்கும் திறன் குறைகிறது, மின்சாரம் தட்டுப்பாடு ஏற்படுகிறது/ஏற்படும், இந்த பிரபஞ்சம் விஞ்ஞானிகளை குழப்புகிறது, ஒட்டு மொத்த அண்ட சராசரங்களையும் இதுவரை 09 சதவீதம் மட்டுமே அறிய முடிகிறது, மீதி முடியவில்லை, பிளாக் ஹோல் என்று பிரபஞ்சத்தில் உள்ளது, இதனால் பூமிக்கு வரும் ஆபத்தை நீ அறிவாயா..? பூமியை நோக்கி பல ஆபத்துகள் வந்து கொண்டே இருக்கிறது, பூமி எப்போது வேண்டுமானாலும் அழியலாம், நாட்டில் மாட்டுக்காக மனிதரை கொல்கிறார்கள், சாப்பாட்டிற்கு வழியில்லாத மக்கள் இருந்து கொண்டு தான் இருக்கிறார்கள், தண்ணீருக்கு (குடிக்க) நான்கு கிமீ செல்ல வேண்டிய மக்களும் இருக்கிறார்கள், நிலத்தடி நீர் மட்டம் குறைகிறது, பக்கத்து மாநிலத்தில் இருப்பவன் தண்ணீர் தர மறுக்கிறான், கோடிகணக்கான மக்களுக்கு கண்ப்பார்வை இல்லை. உடல் ஊனம், நாடு முழுவதும் குற்றங்கள், அறிய முடியாத மர்மங்கள், குழப்பங்கள் என சொல்லி கொண்டே போகலாம், பதிவு பெரிதாக வரும்.

இவ்வளவு விஷயங்கள், பிரச்சினைகள் மத்தியில் ஒன்னுக்கும் பிரயோஜனம் இல்லாத கூத்தாடிகளுக்காக சண்டை போட்டு கொள்கிறீர்களே,

முட்டாள்களே, திரைப்படத் துறையில் உயர்ந்த இடத்தில் உள்ள ஹாலிவுட் நடிகர்களுக்கு இப்படி தான் ரசிகர் மன்றம் வைத்து சண்டை போட்டு அசிங்கப் படுத்தி கொண்டு இருக்கிறார்களா..! முட்டாள்களே ஜேஸன் ஸ்நாத்தம் க்கு எத்தனை ரசிகர் மன்றம் இருக்கிறது, ஏனெனில் அவர்கள் எல்லாம் அதை பொழுதுபோக்காக பார்க்கிறார்கள், நீயோ அதை உண்மையாக நினைக்கிறாய், ஏன் உங்க தலைவர ரியலா வந்து ரவுடிகள அடிச்சு தப்ப தட்டி கேட்க சொல்லு, அது முடியாது, ஏனென்றால் அது வெறும் நடிப்பு.

நடிப்பை நடிப்பாக மட்டும் பாருங்கள் முட்டாள்களே.

நீ ஒரு நாள் ஒரு தடவை உன் தலைவன் கட் அவுட்டுக்கு ஊற்றி வீணாக்கும் அந்த பால், அந்த பால் மட்டும் கிடைத்தால் நானும் எனது குடும்பமும் ஒரு வாரம் உயிர் வாழ்வோம் என்ற நிலையில் ஆப்ரிக்காவில் மக்கள் இருந்து கொண்டு தான் இருக்கிறார்கள்..

முதலில் உன் தாய் நிலையை கவனி, குடும்பம் நண்பர்களை பார், ஆதரவு கொடு.

இந்த ரசிகர், மன்றம், வெறியன் என்ற வார்த்தையை நீக்கு, விஜய், சூர்யா, அஜித் எல்லாவற்றையும் தூக்கி போட்டு விட்டு வாழ்க்கைக்கும் நாட்டிற்கும் தேவையானதை செய்.

சிந்தித்து பார்.

குறிப்பு :- இதில் நீ என்று ஒருமையிலோ, முட்டாள்கள் என்றும் திட்டியிருப்பேன், அதை பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம், என்னை உன் சகோதரனாகவும், இந்திய குடிமகனாகவும் நினைத்து கொள், எனக்கு உன்னை திட்ட உரிமை உள்ளது.
தயவுசெய்து
சிந்தித்து தெளிவு பெறு!

இதை மற்றவருக்கும் தெரியப்படுத்து.



முட்டாள் என்றால் மூட்டைதூக்கிப்பிழைப்பவன் என்றே பொருள்!மூடன் என்றுவராது!அதேபோலமடையன் என்றால் மடையை மூடித்திறப்பவன்!

Murali Mskp

No comments:

Post a Comment