தொலைக்காட்சி!!

Search This Blog

Wednesday, October 14, 2015

யாழ்ப்பாணத் தோசை !


செ.தே.பொருட்கள் :-

கோது நீக்கிய உளுந்து - 1 சுண்டு
அவித்த வெள்ளை மா - 1 சுண்டு
அவிக்காத வெள்ளை மா - 1 சுண்டு
வெந்தயம் - 1 தே. கரண்டி
சின்னச்சீரகம் - 1 தே. கரண்டி
மிளகு - 1/2 தே. கரண்டி
உப்பு - தேவையான அளவு
மஞ்சள் தூள் - 1/4 தே. கரண்டி

தாளிப்பதற்கு :-

சின்ன வெங்காயம் - 8 (வெட்டி)
செத்தல் மிளகாய் - 3
கடுகு - 1/2 தே. கரண்டி
பெருஞ்சீரகம் - 1 தே. கரண்டி
கறிவேப்பிலை - 1 நெட்டு

செய்முறை :-

* உளுந்தை 3-4 மணி நேரம் ஊற விடவும்.
* சீரகம்,மிளகு,வெந்தயத்தை இன்னொரு சிறிய பாத்திரத்தில் ஊறவிடவும்.
* உளுந்து ஊறியதும், நன்றாக அரைத்துக்கொள்ளவும். அத்துடன் ஊறவைத்த சீரகம், மிளகு,வெந்தயத்தையும் சேர்த்து பட்டுப் போல் அரைத்து எடுக்கவும்.
* அரைத்த மாவில் அவித்த மா,அவிக்காத மாவைப் போட்டு தேவையான அளவு தண்ணீர் விட்டு கட்டியில்லாமல் கரைத்து
10-12 மணித்தியாலங்கள் புளிக்க விடவும்.
* புளித்ததும், உப்பு, மஞ்சள் தூள், போட்டு நன்றாக கலக்கவும்.
* சட்டியில் எண்ணெய் விட்டு சூடாக்கி, தாளிதப் பொருட்களை தாளித்து எடுக்கவும்.
* தாளிதத்தையும் தோசை மாவில் போட்டு, நன்றாக கலந்து தோசைகளாக சுட்டு பரிமாறுக.
* (தோசைகளை சம்பலுடன் பரிமாறலாம் )

** தோசைகளில் நல்லெண்ணெய், அல்லது நெய் விட்டும் சுட்டுக் கொள்ளலாம்.

** குறிப்பு: தோசை மொற மொறப்பாக விரும்பின், உளுந்துடன் சிறிது பசுமதி, அல்லது சம்பா, அல்லது பொன்னி அரிசியை ஊறவிட்டு அரைக்கவும்.

** நன்றி : ரசிகை

No comments:

Post a Comment