தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 22 அக்டோபர், 2015

ஒரு கண்ணைத் திறந்தவாறு தூங்கும் முதலைகள்: விஞ்ஞானிகள் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

நீர் நிலைகளில் ராஜாவாகத் திகழும் முதலைகள் ஒற்றைக் கண்ணை திறந்தவாறே தூங்கும் ஆற்றலைக் கொண்டிருப்பதாக புதிய ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களால் பறவைகள், டொல்பின்கள் மற்றும் ஊர்வன தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையிலேயே இத் தகவல் வெளியாகியுள்ளது.
இவ்வாறு தூங்கும்போது முதலையின் மூளையின் அரைப் பகுதியும் செயல்பாட்டில் உள்ளதாகவும், இதன் காரணமாக எந்த நேரத்திலும் எதிரியைத் தாக்கக்கூடிய வல்லமை அல்லது இரையைப் பிடிக்கக்கூடிய வல்லமை முதலைகளுக்கு இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக