தொலைக்காட்சி!!

Search This Blog

Wednesday, October 21, 2015

தேங்காய் எண்ணெய்யில் வாய் கொப்பளிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!

எண்ணெய்களை கொண்டு வாய் கொப்பளித்தால் நுண்ணுயிரிகள் வெளியேறி வாய் ஆரோக்கியம் மட்டுமின்றி, உடல் ஆரோக்கியமும் மேம்படும்.
இதுவரை நல்லெண்ணெய்யில் மட்டுமே வாய் கொப்பளித்து வந்தோம், தற்போது தேங்காய் எண்ணெய்யில் வாய் கொப்பளிப்பதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி பார்ப்போம்,
பாக்டீரியாக்கள் அழிக்கப்பட்டு, வாய் துர்நாற்றம் நீங்கும்.
ஈறுகளில் இரத்தக்கசிவு பிரச்சனையை சரிசெய்யும்.
பற்களில் ஏதேனும் கறை இருந்தால் தேங்காய் எண்ணெய்யால் வாய்கொப்பளிப்பதன் மூலம் பற்கள் வெண்மையாகும்.
டாக்ஸின்கள் வெளியேற்றப்பட்டு, சருமம் ஆரோக்கியத்துடனும், பிரகாசமாகவும் இருக்கும்.
தலைவலியிலிருந்து மற்றும் சுவாசப்பிரச்சனையிலிருந்து விடுபடலாம்.
செய்யும் முறை
சுத்தமான தேங்காய் எண்ணெய்யை 10 ml அளவு எடுத்து, வாயில் விட்டுக் கொண்டு அதை வாய் முழுவதும் படும்படியாக கொப்பளிக்க வேண்டும். 15 முதல் 20நிமிடங்கள் வரை கொப்பளிக்கலாம்.
முட்டையை குளிர்சாதனப்பெட்டியில் வைக்கலாமா?
ஐரோப்பிய முட்டை மார்கெட்டிங் ஒழுங்குவிதிகளின் படி, முட்டையை மிகவும் குளிர்ச்சியான இடத்தில் பராமரித்து, பின் அறைவெப்ப நிலைக்கு கொண்டு வரும் போது, முட்டையின் மேல் அதிகம் வியர்த்து, முட்டையின் ஓட்டில் உள்ள சிறுதுளைகள் வழியே பாக்டீரியாக்கள் வேகமாக வளர்ச்சியடைந்து உள்ளே செல்வதற்கு வாய்ப்புள்ளது.
எனவே முட்டையை வாங்கினால் அதை உடனே சமைத்து சாப்பிடுங்கள் அல்லது அறை வெப்பநிலையிலேயே பராமரியுங்கள்.

No comments:

Post a Comment