தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 14 செப்டம்பர், 2015

விநாயகர் சதுர்த்தி!

                                          17.09.2015 அன்று விநாயகர் சதுர்த்தி!
கஜமுகாசுரன் இறைவனிடம் வரம் பெற்றதால், “இந்த உலகத்தில் இருக்கும் அத்தனை பேரும் தம் அடிமைகள்.” என்று கூறி தேவர்கள் யாவரையும் தோப்புக்கரணம் போட வைத்தான். அதனால் விநாயகப் பெருமான், கஜமுகாசுரனின் ஆணவத்தை அடக்கி, தன் முன்பாக அவனை தோப்புக்கரணம் போடவைத்தார்.

அதேபோல் ஒருசமயம் விஷ்ணுவின் சக்கரத்தை விநாயகர் விழுங்கிவிடுகிறார். அதை திரும்பபெற ஸ்ரீமகாவிஷ்ணு எவ்வளவோ முயற்சித்தார். ஆனால் விநாயகர் கொடுப்பதாக இல்லை. அதனால் பெருமாள், விநாயகருக்கு இஷ்டமான தோப்புக்கரணத்தை இட்டார்.

இதை கண்ட பிள்ளை சிரித்து விடுகிறார். இதனால் அவர் வாயில் இருந்த விஷ்ணு சக்கரம் வெளியே வந்து மீண்டும் ஸ்ரீமகாவிஷ்ணுவிடம் சேர்ந்தது.

தோப்புக்கரணம் போட்டால் விநாயகருக்கு மிகவும் பிடிக்கிறது என்பதை அறிந்த தேவர்களும் முனிவர்களும், விநாயகரின் முன்னதாக தோப்புக்கரணம் போட்டு ஆசி பெற்றார்கள்.

இவ்வாறு நம் தலையில் நாம் குட்டிக்கொள்வதால், நம்முடைய உடலில் உள்ள ஏழு சக்கரங்களும் சக்தி பெறுகிறது. ஸஹஸ்ரார கமலத்தில் தட்டி எழுப்புவதற்காகதான் நம் தலையில் குட்டிக்கொள்கிறோம். இதனால் உடல் வலிமை பெறும். எல்லா நரம்புகளும் சக்தி பெறும். லாஸ் ஏஞ்சல்ஸைச் சேர்ந்த மருத்துவர் எரிக் ராபின்ஸ் (Dr.Eric Robins) இந்த எளிய உடற்பயிற்சியால் மூளையின் செல்களும் நியூரான்களும் சக்தி பெறுகின்றன என்கிறார். அவர் தன்னிடம் வரும் நோயாளிகளுக்கு அந்த உடற்பயிற்சியை சிபாரிசு செய்வதாகக் கூறுகிறார்….மேலும் படிக்க

கணபதி இருக்க கவலையில்லை! விநாயகர் சதுர்த்தி சிறப்பு கட்டுரை பகுதி – 1 http://bhakthiplanet.com/2015/09/vinayagar-sathurthi-festival/

விநாயகர் சதுர்த்தி சிறப்பு கட்டுரை பகுதி – 2 

http://bhakthiplanet.com/2015/09/vinayagar-sathurthi-festival-2/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக