தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 12 செப்டம்பர், 2015

சுவாச பிரச்னைகளுக்கு தீர்வாகும் யூகலிப்ட்ஸ்

மிக உயரமான மரமான யூகலிப்ட்ஸ், சிறந்த நுண்ணுயிர் எதிரியாகும்.
இலைகளும், வேர்களும் மருத்துவ குண நலன்கள் கொண்டவை. நறுமணம் கொண்ட இலைகளிலிருந்து பெறப்படும் எண்ணெய் எளிதில் ஆவியாகக் கூடியது.
யூகலிப்டஸ் எண்ணெய் தோல் மற்றும் அழகு பராமரிப்பிற்கு உபயோகப்படுத்தப்படுகிறது. இதன் எண்ணெய்காகவும், ரெசினிற்காகவும், மரத்திற்காகவும் பெருமளவு பயிரிடப்படுகிறது.
உலகிலுள்ள மிக உயரமான மரங்களில் இவ்வகை ஒன்று. இதன் இலைகள் விறைப்பாகவும், தோல் போலவும் பல வடிவங்களில் இருக்கும். இதன் மலர்கள் பம்பர வடிவில் சிவப்பு, வெள்ளை அல்லது மஞ்சள் நிறத்தில் கொத்துக் கொத்தாக இருக்கும்.
கப்பல் கட்ட, தரைபோட, கருவிகள் செய்ய இம்மரங்கள் பெரிதும் பயன்படுத்தப்படுகின்றன. இதன் பசை போன்ற ரெசின் வயிற்றுப் போக்கை கட்டுப்படுத்துகிற மருந்தாக உபயோகப்படுத்தப்படுகிறது. ஒப்பனைப் பொருள்கள் செய்வதிலும், சோப்புகள் தயாரிப்பிலும் உபயோகிக்கப்படுகிறது.
காயங்களில் பாக்டீரியாக்களினால் ஏற்படும் சீழ்வடிதலைக் தடுக்கும். உடலில் வெப்பமுண்டாக்குவதால் மார்பு சளி, கோழை சம்பந்தப்பட்ட நோய்களைத் தீர்க்கும்.
இந்த மரத்தின் இலைகளிலிருந்து தயாரிக்கப்படும் ஒரு மருத்துவ குணமுள்ள எண்ணெய் தலைவலி, ஜலதோஷம் போன்ற உபாதைகளுக்கு நல்ல மருந்து.
மேலும் இது கொப்புளங்கள், சிறு காயங்கள், வெட்டுக்கள், மற்றும் சிராய்ப்புகளையும் குணமாக்க பயன்படுத்தப்படுகிறது.
ஆஸ்துமா, மார்பு சளி போன்ற சுவாச பிரச்சினை இருந்தால், யூகலிப்டஸ் எண்ணெயை பயன்படுத்தலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக