தொலைக்காட்சி!!

Search This Blog

Thursday, August 20, 2015

இரவில் வாழைப்பழம் சாப்பிடுவதால் ஏற்படும் பிரச்சனை என்ன?

இரவு உணவுக்கு பிறகு வாழைப்பழம் சாப்பிடுவதை பலரும் பழக்கமாக கொண்டிருப்பார்கள்.
என்னதான் ருசியான உணவை சாப்பிட்டாலும், கடைசியில் ஒரு வாழைப்பழத்தை சாப்பிட்டால்தான் பலருக்கு உணவு உண்டதற்கான திருப்தி கிடைக்கும்.
ஆனால், இரவில் வாழைப்பழத்தை சாப்பிடுவதால் சில உடல்நலப்பிரச்சனைகளும் ஏற்படுகின்றன.
ஏனெனில், அதில் உள்ள Fructose என்ற சர்க்கரை சத்து கொழுப்பாக மாறி நமது உடலில் நிரந்தரமாக தங்கி விடும். இதன் காரணமாக உடலில் கலோரி அதிகமாகும். உடல் எடை அதிகரிக்கும்.
ஒரு சிலர் இரவு உணவிற்குப்பின் வாழைப்பழம் சாப்பிடுவதை பழக்கமாக கொண்டவர்கள் சாப்பிட்ட உடனே வாழைப்பழம் சாப்பிடக்கூடாது. பதினைந்து நிமிடங்கள் கழித்து சாப்பிடலாம்.
இரவு உணவிற்குப் பின் வாழைப்பழம் சாப்பிடுவதால், சாப்பிட்ட உணவு விரைவாக செரிமானம் ஆகும், காலைக்கடன்களை எந்தவித சிரமமும் இல்லாமல் செய்ய முடியும்.
வயிற்று உபாதை காரணமாக காலைக்கடன்களை முடிக்க சிரமப்படுபவர்கள் இரவு உணவிற்குப்பின் வாழைப்பழம் சாப்பிடுவதைத் தவிர்ப்பது நல்லது. அதற்கு பதிலாக நார்ச்சத்து அதிகம் உள்ள காய்கறிகள்,பழங்கள் ஆகியவற்றை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.
குறிப்பு
வயதானவர்களும், நீரிழிவு நோயாளிகளும் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.

No comments:

Post a Comment