தொலைக்காட்சி!!

Search This Blog

Tuesday, August 18, 2015

குடி அறிவை அழிக்கும் ,புலால் அனைத்தையும் அழிக்கும் !


குடி .அறிவை அழிக்கும் .புலால் அனைத்தையும் அழிக்கும் !
உயர்ந்த அறிவைப் படைத்த நண்பர்களே கேளுங்கள்.
ஒரு மனிதனின் உடம்பிற்கு உள் செலுத்தப்படும் ஒரே துவாரம் வாய் தான்.
அந்த வழியாகத்தான் மனிதன் உணவையும் தண்ணீரையும் உள்ளே தினமும் செலுத்திக் கொண்டே இருக்கின்றான்.
உணவும் தண்ணீரும் மிகவும் முக்கியமானதாகும்..
ஒரு மனிதன் ஆரோக்கியமாக வாழ்வதற்கு நல்ல உணவும் நல்ல தண்ணீரும் அவசியம் தேவை.
போதைத்தரும் குடி அறிவை மழுங்க வைத்து முட்டாள்களாக மாற்றி விடும்.அதனால்தான் குடி குடியைக் கெடுக்கும் என்றார்கள்.
மாமிசம் என்பது உணவுகளிலே மிகவும் மோசமான உணவாகும்.அதற்கு அசுத்த உணவு என்று பெயர்..மிகவும் துர்நாற்றமுள்ள உணவாகும்.அசுத்த உணவு என்று சொல்வார்கள்.அசுத்த பூதகாரிய உணவு என்றும் சொல்லப்படும்.


அந்த மாமிச உணவால் ,உடம்பிற்கு தீராத வியாதிகள் வந்து சேரும்.அதே நேரத்தில் உடம்பையும், உயிரையும்,சீக்கிரம் அழித்துவிடும்.அறிவை சீக்கிரம் மழுங்க வைத்து விடும்.தீராத வினைப்பயன்கள் என்னும் துன்பம் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும்.
குடியும் ,கொலையும்,அதன் புலாலும். குடிக்காமலும், உண்ணாமலும் இருப்பவர்களுக்குத் துன்பம் என்பதும், மரணம் என்பதும் அவர்களை நெருங்காது.
பஞ்சமா பாதகங்களிலே;-- முதன்மையானது ,கொலையும்,குடியும் ,புலால் உண்பதும் தவறானது என்பதை அனைவரும் அறிந்து கொண்டு.வாழ்ந்தால் அனைவரும் மகிழ்ச்சியுடனும்.நிம்மதியுடனும் வாழலாம்.
அரசாங்கம் ''மதுக் கடைகளை'' அடைக்கா விட்டாலும் ,''உங்கள் வாயை அடைத்து விடுங்கள்'' எல்லாக் கடைகளும் தானே அடைக்கப்பட்டு விடும்.
''குடிக்காதவன் குடிக்காவிட்டால்'' .கடைவிரித்து வைத்து வியாபாரம் நடக்கவில்லை என்றால் தானே அடைத்து விடுவார்கள் ,
மாமிசம் உண்ணாமல் விட்டுவிட்டால் .மாமிசக்கடைகள் இருந்து என்ன பயன்.தானே அடைத்து விடுவார்கள்
இந்த கொடுமையான உயிரை அழிக்கும் குடியையும்,..உடம்பை அழிக்கும் புலாலையும் அதாவது மாமிசத்தையும்.உண்ணாமல் இருப்பவன் எவனோ அவனே மனிதன் .
ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

No comments:

Post a Comment