தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 24 ஜூலை, 2015

எப்போதெல்லாம் கை கழுவ வேண்டும்?-இந்த கருத்துப்படி பெரும்பான்மை மிருகங்களும் பறவைகளும் ஆரோக்கியமில்லாமத்தான் இருக்கும்!

சுத்தம் என்பது மனித வாழ்க்கையில் அடிப்படையாக கடைபிடிக்க வேண்டிய ஒன்று.
அந்தவகையில், நாம் நாள்தோறும் கடைபிடிக்கும் அடிப்படை விடயங்களில் ஒன்றான எப்போதெல்லாம் கையை சோப்பு போட்டு கழுவ வேண்டும் என்று பார்ப்போம்.
கழிவறைக்கு சென்று திரும்பும் போது.
• செல்லப்பிராணிகள் மற்றும் விலங்குகளை தொட நேர்ந்த பின்பு.
• தும்மல், இருமல் சமயங்களிலும், மூக்கு ஒழுகுவதை துடைக்கும் சமயங்களிலும் கைகழுவுவது அவசியம்.
• வெளியே பயணங்கள் சென்று திரும்பிய உடன் கைகளை சுத்தம் செய்தபின் மற்ற பணிகளில் ஈடுபட வேண்டும்.
• கழிவுகளை சுத்தம் செய்தால் நிச்சயம் கைகளை சோப்பு போட்டு கழுவ வேண்டும்.
• சாப்பிடும் முன்பும், பின்பும் அவசியம் கைகழுவுங்கள்.
• காயங்களுக்கு மருந்திடும் முன்பும், பின்பும், நோய் பாதிக்கப்பட்டவர்களை பார்க்க செல்லும் முன்பும், பின்பும் கைகால்களை சுத்தம் செய்வது நல்ல பழக்கம்.
• பொது இடங்களில் கழிவறைகளை பயன்படுத்தினாலும், குழந்தைகளை தூக்கும் முன்பாகவும் கை கழுவுவது அவசியம்.
• கை கழுவியவுடன் உலர்ந்த துண்டால் கைகளை துடைப்பது முக்கியம். ஆரோக்கியத்தின் அடிப்படையில் கைகளை சுத்தமாக வைத்துக்கொள்வது ஒரு வழி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக