தொலைக்காட்சி!!

Search This Blog

Thursday, July 16, 2015

தோண்டத் தோண்டக் கிடைப்பதெல்லாம் தமிழர்களின் வரலாற்றுப் புதையல்களே.!


நம் வரலாற்று தேடலில் அடுத்தக்கட்டமாக,
நம் பாட்டன், முப்பாட்டனின் கால் பட்டதின் விளைவால் நாகரீகம் வளர்ந்த
இவ்வுலகின் அனைத்து நில பகுதியையும் நோக்கிய பயணத்தின் முதல்கட்டமாய்,
என் தாய் தந்தையை பெற்றெடுத்ததோடு,
இன்றுவரை பல லட்சம் என் தமிழ் உறவுகள் வாழ்ந்து வரும் பர்மிய திருநாட்டிற்கு வருகிற ஆகஸ்ட் மாதம் 18ம் தேதி செல்கிறேன்!!!........
மாறன்மார் எனும் இன்றைய மியான்மர் வரலாற்றை புரட்டினால்,
இரும்பு காலம் எனும் சொல்லப்பட்ட காலக்கட்டத்தில்,
பர்மாவில் ஓடும் ஐராவதி நதிக்கரையில்,
வேளாண்மை தெரிந்த ஒரு கூட்டம் வெளியில் இருந்து வந்த குடியேறி அங்கு நாகரிகம் உருவாக்கினர் என்கிறது அந்நாட்டு வரலாறு???
இந்திரனின்(வேந்தன்) வாகனமான
ஐராவதம் எனும் வெள்ளை யானையின் பெயரை அந்த ஆற்றுக்கு வைத்ததே,
அங்கு குடியேறியவர்கள் தான் என சொல்கிறது அவர்கள் வரலாறு.......
அதுமட்டுமா?,
தமிழக வேளாண் குடிகள் தான் போன இடங்களிலெல்லாம் நீர் மேலாண்மை செய்வதற்காக மருத மரத்தையும் கொண்டு சென்று உள்ளான் என்ற தகவலே
பர்மாவை ஆய்வு செய்யும் போது தான் கிடைத்தது தோழர்களே....
தென் அமெரிக்கா நாடுகளில் ஒன்றான பெரு நாட்டின் மாயன் மற்றும் இன்கா நாகரிகத்தை சேர்ந்தவர்கள்
மொச்சை பள்ளதாக்கு என்ற பகுதியில் பள்ளர் பீன்ஸ் என்ற ஒருவகை பயிர் பயிரிடுகின்றனர்???
நாம் அன்றாடும் உணவில் பயன்படுத்தும் மொச்சைக்கொட்டை எப்படி, எதற்காக கடல் தாண்டி அப்பகுதி வரை பயனித்தது என்ற தகவல்,
பர்மாவின் வரலாற்றை புரட்டும் போது தான் எனக்கு கிடைத்தது!!!.....
இப்படி உலகம் முழுவதும் தோண்ட தோண்ட பொக்கிஷம் போல்,
நம் வரலாற்று பாத்திரம் நீண்டுகொண்டே போகிறது???
வேளாண் தொழிற்நுட்ப அறிவால்,
இவ்வுலகையே பண்படுத்தி நாகரிகப்படுத்திய எம் பாட்டன் முப்பாட்டானின் கால் தூசுக்குக்கு கூட நான் சமமாக மாட்டேன் என்றாலும்?,
அவர்களின் கால் பட்ட இடங்களை தரிசிப்பதின் மூலம் கிடைக்கும் தகவல்களை திரட்டி,
அதைபற்றிய எந்தவித ஞானமுமில்லாமல் இல்லாமல் இருக்கும் இன்றைய தமிழர்களுக்கு கொடுத்து அவர்களை விழிப்படைய வைப்பதை,
காலம் எனக்கிட்ட வரலாற்று கடமையாகவும்,
அதை நிறைவேற்றுவதை பெரும் பாக்கியமாகவும் கருதுகிறேன்???......
தமிழர்கள் கொண்டாடிய சித்திரை விழாவையும், இந்திர விழாவையும்,
இன்றுவரை தங்களின் அரச விழாவாக கொண்டாடுகிறது பர்மிய அரசு.....
தமிழ்நாட்டிலும் இவை மீண்டும் அரச விழாக்களாக கொண்டாடப்பட வேண்டுமானால்,
நம் உண்மை வரலாறு மீட்கப்பட்டு,
அந்த வரலாற்றை பயன்படுத்தி ஒரு வரலாற்றியலை உருவாக்கி,
அந்த வரலாற்றியல் அடிப்படையில் ஒரு கருத்தியலை உருவாக்கி,
அந்த கருத்தியல் மீது கட்டப்படும் அரசியலே நீடித்து நிற்கும் என்பதோடு,
அதை ஆயுதமாக ஏந்தி களமாடினால் தவிர,
வெற்றி எனும் மந்திர சக்தி நம் அருகில் கூட வராது தமிழர்களே???.........
அத்தகைய பெருப்பணியை நோக்கிய என் பயணித்தில்,
விரைவில் பர்மாவில் சந்திப்போம் உறவுகளே!!!..........

செல்வா பாண்டியர்!!




 

No comments:

Post a Comment