தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 25 ஜூலை, 2015

12 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த வீர சைவ பக்தி இயக்கத்தின் முக்கியமானவரான அக்கா மகாதேவி!




தீவிர சிவபக்தியினால் தன் உடல் அழகையும் தியாகம் செய்து நிர்வாணமான மகாதேவி அக்காவின் தீவிர பக்திக்கு முன் ஆண்டாள், மீரா போன்றோர்கள் கிருஷ்ணர் மேல் வைத்திருந்த தீவிர அன்பு கூட ஒன்றுமே இல்லை.

ஆண்டாளைப் போலவே ஆண்டவனையே தன் கணவனாக காதலனாக தலைவனாக வரித்துக் கொண்டவர் கர்நாடக மண்ணில் 12 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த வீர சைவ பக்தி இயக்கத்தின் முக்கியமானவரான அக்கா மகாதேவி.

அம்மா, கேள் …நான் அவரை நேசிக்கின்றேன்,
அவர் இந்த உலகில் உள்ளவர்களில் அவருக்கு மட்டுமே,
பிறப்பும் இல்லை இறப்பும் இல்லை,
ஜாதியும் இல்லை பேதமும் இல்லை.
எங்கும் நிறைந்தவர், உருவமற்றவர், மாறாதவர்
கற்பனைக்கெட்டாத அழகின் திருவுருவம் அவர்.,
இந்த உலகில் எல்லாமே அழிந்துவிடும் முடிவாக
வேண்டாம் இவர்கள் எவரும்.
என்றுமே இருக்கும் முடிவில்லாத என் நாயகன்
ஒரே ஒருவர் தான் – அவர்
என் மல்லிகார்ஜூனா
லிங்கமான சிவனே மணமகன்
நானே மணமகளானேன்

அக்கா மகாதேவி கன்னட இலக்கியத்தின் “வாச்சனா” வடிவத்தின்
முன்னோடி. ஒரு வகையில் பார்க்கப்போனால் இவர் தான் 16ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மீராவுக்கு ஒரு வகையில்
வழிகாட்டி..

” சென்னமல்லிகார்ஜூனா ” என்றால் மல்லிகைப்பூவைப் போல
அழகான என் தெய்வமே என் தலைவனே என்று இவர் எழுதியிருக்கும்

கவிதைகள் பக்தியும் காதலும் குழைந்து கொடுத்திருக்கும்
அற்புதமான கவிதைகள்.

என்னைத் தைத்த அம்பு
ஆழமாக எனக்குள்
அதன் இறகுகளும் தெரியாமல்
தைக்கட்டும்.

என் தலைவன் உடலை இறுக
கட்டி அணக்க வேண்டும்.

அவன் எலும்புகள் நொறுங்கும்படி
இறுக்கி அணைக்க வேண்டும் .

பார்வையிலிருந்து மறையும் வரை
அந்த தெய்வீகத்தை பிடித்து அணைக்க வேண்டும்.

இவர் வாழ்க்கை வரலாறு குறிப்புகள் முறையாக எழுதப்பட்டவை நமக்கு கிடைக்கவில்லை. ஆனால் கிடைத்தவற்றிலிருந்து இவர்
வாழ்க்கையில் இவர் மெய்யியல் தேடலின் பயணத்திற்கான
காரணங்களை நாம் அறிய முடிகிறது.

கி.பி. 1146 ஆம் ஆண்டு கர்நாடக மாநிலத்தில் உடுதடி எனும் சிற்றூரில், சித்ராபௌர்ணமி நாளில் மகாதேவி பிறந்தார் என்று சொல்லப்படுகிறது. தாயார் சுமதி; தந்தை நிர்மலன். இருவரும் சிவபக்தர்கள் என்பதால், இளம் வயதிலேயே சிவன் வழியில் செல்ல மகாதேவிக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

அரசன் கௌசிகன் மகாதேவியை மணக்க விரும்பினான். பெற்றோரும் தங்கள் கடமையை முடிக்கவேண்டுமென அதனை ஆதரித்தனர். அக்கமகாதேவியோ சிறிதும் சஞ்சலமின்றி மூன்று நிபந்தனைகள் விதித்திருக்கிறார். அந்தக் காலத்தில் இந்த தீர்க்க சிந்தனை அவரின் மனதிடத்தை வெளிப்படையாக எடுத்துக்காட்டுகிறது
சிவபூஜை செய்வேன், சிவபக்தர் கூட்டத்தில் இருப்பேன், குரு சேவையில் இருப்பேன் என்ற நிபந்தனையோடு கௌசிகனை மணந்தாரென சொல்லப்படுகிறது. கௌசிகன் நிபந்தனைகளில் தவறியதால் அக்கமகாதேவி அரண்மனையை விட்டு வெளியேறிச்சென்றார் எனசொல்லப்படுகிறது. அவருக்குத் திருமணம் ஆகவில்லை என்றொரு கதையும் சொல்லப்படுகிறது. அவர் வாழ்ந்த சமூக பின்புலமும் அவரைக் கோபப்படுத்துகிற்து.தன் மீது மோகம் கொண்ட ஒர் மன்னன் தன்னை அழைத்து காம வார்த்தைகள் பேசி கவர நினைக்கிறான். அக்கா அசையாத பொழுது, அடையும் நோக்கத்தில் மன்னன் துணிந்து புடவையை இழுத்து மன்றாடுகிறான்.

நிர்வாணமான அக்கா கர்ஜிக்கிறார் ‘இந்த உடல் தானே நீ விரும்புவது, இதை சிவனுக்கு அர்ப்பணித்து விட்டேன், என்ன செய்ய முடியும் உன்னால்?’ என கேள்வி எழுப்பி நிர்வாணக் கோலத்திலேயே கடந்து செல்கிறாள். அதன் பின் அதே கோலத்தோடு ‘ஈசன்’ புகழ் பாடி சித்தர்கள் போல் அலைந்து திரிகிறாள். துகிலுரிய படும் பொழுது அவள் மேனி முழுதும் மயிர் முளைத்து ஈசன் தன் கருணையால் அவளை காத்தான் என்கிறது அக்காவின் வரலாறு.

நிர்வாண கோலத்தில் இருந்த காரணத்தால் சைவமடத்தில் இருந்த
பசவண்ணா, அல்லம்மா ஆகியோர் முதலி அக்காமகாதேவியை
ஏற்றுக்கொள்ள தயக்கம் காட்டுகிறார்கள்.
வெட்கத்தால் உடலை மறைப்போரே!
நூலாடை சரிகையில்
ஆண் பெண் என வேற்றுமைகண்டு நாணுவோரே!
ப்ராணநாயகன் ஈசன்
உலகெங்கும் இடைவெளியின்றி சூழந்திருக்க
நாணத்திற்கிடமுண்டோ?
சென்ன மல்லிகார்ஜுனன் உலகெலாம்
கண்ணாய் பார்த்துக்கொண்டிருக்க
மூடிமறைகின்ற இடமெது சொல்லய்யா!

என்ற அக்காமகாதேவியின் பாடல் அவர்களுக்குப் பதிலாகிறது.

அக்கமகாதேவியின் வசனங்கள் உலகின் நிலையாமையையும் இறைவனின் பெருமையையும் விளக்குகின்றன. அக்காமகாதேவிக்கு முன் மாயை என்பதைப் பெண்ணாக பார்த்தார்கள். பெண் உருவில் பார்த்தார்கள். இவரே முதல் முதலாக மாயையைப் பெண்ணாகப் பாராமல் ஆண் உருவில் பார்த்தவர். . முன்னூறுக்கும் மேற்பட்ட வசனங்கள் அளித்துள்ளார். மந்த்ர கோப்யா, யோகாங்க த்ரிவிதி எனும் மேலும் இரு படைப்புகள் அளித்துள்ளார். அக்காமகாதேவியின் முக்கியமான சிறப்பம்சமாக நாம் காணவேண்டியது அவரின் உணர்வு மிக்க கவிதைகளுடன் சேர்ந்து அவர் எழுதியிருக்கும் யோகாங்க திரிவிதி கள்.

எழுநாகத்தில் உறைந்த நியூரோ விஷம் வறண்டிருந்த ஆன்ம விருத்தி
விஷத்துளியில் நனைந்த பாலை இதயம் வழிந்தது போலும்
பொழிந்த ரேத மழையில்
பதுக்கிய அமிர்தம் தெளித்து புருவ
மையத்துளிர்ந்த சமித்துகள்
நாகப்புணர்ச்சியின் பரமானந்தம்
மிதக்கும் கால்கள் செய்யும் பிரபஞ்சப் பயணம்
ஜோதியொளி லிங்கம் சூடிய
வெண்பிறை மல்லிகே ஸ்வர

அக்காமகாதேவியின் இக்கவிதை வெளிப்படுத்தும் பொருள் ஞானயோகம்.

ஆண்டாளும் மீராவும் பக்தி யோகத்தின் மூலம் இறைவனுடன் கலந்தவர்கள். ஆனால் அக்காமகாதேவி மட்டும் ஆதிசங்கரர், ரமணமகரிஷி போன்றவர்கள் சென்ற ஞானயோகத்திலும் பயணிக்கிறார். ஞான யோகம் என்பது அறிவின் துணைகொண்டு முக்தி நிலையை அடைந்து ஆனந்தப்பரவசமடைவது.

ENTERS SAMADHI WITH KNOWLEDGE AND COMES OUT WITH TEARS.

பக்தி யோகம் என்பது ஆனந்தப்பரவச நிலையில் முக்தியை அடைந்து அறிவின் தெளிவைப் பெறுவது.

ENTERS SAMADHI WITH TEARS AND COMES PUT WITH KNOWLEDGE.

பக்தி யோகத்துடன் ஞானயோகமும் அக்காமகாதேவியிடம் இருந்தக் காரணத்தால் தான் அக்கா மகாதேவி தனிமனித ஆன்மவிடுதலையை மட்டுமல்ல, ஒட்டுமொத்த மனித சமூகத்தின் ஆன்மவிடுதலைக்காகவும் குரல் கொடுத்தார். அதற்கு எதிராக இருக்கும் ஜாதி பேதங்களை உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற வேறுபாடுகளை ஒழிப்பதிலும் கவனம் செலுத்தினார். அக்காமகாதேவி 100 வருடங்கள் வாழ்ந்தக் குகை இருக்கிறது. ஆனால் வெளி உலகுக்குத் தெரிந்து அவர் 1150 முதல் 1175 வரை 25 வருடங்கள்தான் வாழ்ந்திருக்கிறார்.

காமமே ஆன்மீகத்திற்கும் உலகியல் வாழ்க்கைக்கும் மகா சத்ரு என்பதை விளக்கும் இந்த ஆன்மீக வீடியோவை அவசியம் உங்கள் ஆன்மீக சகோதர சகோதரிகளுடன் பகிருங்கள்.

https://www.youtube.com/watch?v=esDG10m40y4&index=135&list=PLw_oR2PvIg_JtLaOMn4mUK5HuPF2ja6jY


தீவிர சிவபக்தியினால் தன் உடல் அழகையும் தியாகம் செய்து நிர்வாணமான மகாதேவி அக்காவின் தீவிர பக்திக்கு முன் ஆண்டாள், மீரா போன்றோர்கள் கிருஷ்ணர் மேல் வைத்திருந்த தீவிர அன்பு கூட ஒன்றுமே இல்லை.
ஆண்டாளைப் போலவே ஆண்டவனையே தன் கணவனாக காதலனாக தலைவனாக வரித்துக் கொண்டவர் கர்நாடக மண்ணில் 12 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த வீர சைவ பக்தி இயக்கத்தின் முக்கியமானவரான அக்கா மகாதேவி.
அம்மா, கேள் …நான் அவரை நேசிக்கின்றேன்,
அவர் இந்த உலகில் உள்ளவர்களில் அவருக்கு மட்டுமே,
பிறப்பும் இல்லை இறப்பும் இல்லை,
ஜாதியும் இல்லை பேதமும் இல்லை.
எங்கும் நிறைந்தவர், உருவமற்றவர், மாறாதவர்
கற்பனைக்கெட்டாத அழகின் திருவுருவம் அவர்.,
இந்த உலகில் எல்லாமே அழிந்துவிடும் முடிவாக
வேண்டாம் இவர்கள் எவரும்.
என்றுமே இருக்கும் முடிவில்லாத என் நாயகன்
ஒரே ஒருவர் தான் – அவர்
என் மல்லிகார்ஜூனா
லிங்கமான சிவனே மணமகன்
நானே மணமகளானேன்
அக்கா மகாதேவி கன்னட இலக்கியத்தின் “வாச்சனா” வடிவத்தின்
முன்னோடி. ஒரு வகையில் பார்க்கப்போனால் இவர் தான் 16ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மீராவுக்கு ஒரு வகையில்
வழிகாட்டி..
” சென்னமல்லிகார்ஜூனா ” என்றால் மல்லிகைப்பூவைப் போல
அழகான என் தெய்வமே என் தலைவனே என்று இவர் எழுதியிருக்கும்
கவிதைகள் பக்தியும் காதலும் குழைந்து கொடுத்திருக்கும்
அற்புதமான கவிதைகள்.
என்னைத் தைத்த அம்பு
ஆழமாக எனக்குள்
அதன் இறகுகளும் தெரியாமல்
தைக்கட்டும்.
என் தலைவன் உடலை இறுக
கட்டி அணக்க வேண்டும்.
அவன் எலும்புகள் நொறுங்கும்படி
இறுக்கி அணைக்க வேண்டும் .
பார்வையிலிருந்து மறையும் வரை
அந்த தெய்வீகத்தை பிடித்து அணைக்க வேண்டும்.
இவர் வாழ்க்கை வரலாறு குறிப்புகள் முறையாக எழுதப்பட்டவை நமக்கு கிடைக்கவில்லை. ஆனால் கிடைத்தவற்றிலிருந்து இவர்
வாழ்க்கையில் இவர் மெய்யியல் தேடலின் பயணத்திற்கான
காரணங்களை நாம் அறிய முடிகிறது.
கி.பி. 1146 ஆம் ஆண்டு கர்நாடக மாநிலத்தில் உடுதடி எனும் சிற்றூரில், சித்ராபௌர்ணமி நாளில் மகாதேவி பிறந்தார் என்று சொல்லப்படுகிறது. தாயார் சுமதி; தந்தை நிர்மலன். இருவரும் சிவபக்தர்கள் என்பதால், இளம் வயதிலேயே சிவன் வழியில் செல்ல மகாதேவிக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.
அரசன் கௌசிகன் மகாதேவியை மணக்க விரும்பினான். பெற்றோரும் தங்கள் கடமையை முடிக்கவேண்டுமென அதனை ஆதரித்தனர். அக்கமகாதேவியோ சிறிதும் சஞ்சலமின்றி மூன்று நிபந்தனைகள் விதித்திருக்கிறார். அந்தக் காலத்தில் இந்த தீர்க்க சிந்தனை அவரின் மனதிடத்தை வெளிப்படையாக எடுத்துக்காட்டுகிறது
சிவபூஜை செய்வேன், சிவபக்தர் கூட்டத்தில் இருப்பேன், குரு சேவையில் இருப்பேன் என்ற நிபந்தனையோடு கௌசிகனை மணந்தாரென சொல்லப்படுகிறது. கௌசிகன் நிபந்தனைகளில் தவறியதால் அக்கமகாதேவி அரண்மனையை விட்டு வெளியேறிச்சென்றார் எனசொல்லப்படுகிறது. அவருக்குத் திருமணம் ஆகவில்லை என்றொரு கதையும் சொல்லப்படுகிறது. அவர் வாழ்ந்த சமூக பின்புலமும் அவரைக் கோபப்படுத்துகிற்து.தன் மீது மோகம் கொண்ட ஒர் மன்னன் தன்னை அழைத்து காம வார்த்தைகள் பேசி கவர நினைக்கிறான். அக்கா அசையாத பொழுது, அடையும் நோக்கத்தில் மன்னன் துணிந்து புடவையை இழுத்து மன்றாடுகிறான்.
நிர்வாணமான அக்கா கர்ஜிக்கிறார் ‘இந்த உடல் தானே நீ விரும்புவது, இதை சிவனுக்கு அர்ப்பணித்து விட்டேன், என்ன செய்ய முடியும் உன்னால்?’ என கேள்வி எழுப்பி நிர்வாணக் கோலத்திலேயே கடந்து செல்கிறாள். அதன் பின் அதே கோலத்தோடு ‘ஈசன்’ புகழ் பாடி சித்தர்கள் போல் அலைந்து திரிகிறாள். துகிலுரிய படும் பொழுது அவள் மேனி முழுதும் மயிர் முளைத்து ஈசன் தன் கருணையால் அவளை காத்தான் என்கிறது அக்காவின் வரலாறு.
நிர்வாண கோலத்தில் இருந்த காரணத்தால் சைவமடத்தில் இருந்த
பசவண்ணா, அல்லம்மா ஆகியோர் முதலி அக்காமகாதேவியை
ஏற்றுக்கொள்ள தயக்கம் காட்டுகிறார்கள்.
வெட்கத்தால் உடலை மறைப்போரே!
நூலாடை சரிகையில்
ஆண் பெண் என வேற்றுமைகண்டு நாணுவோரே!
ப்ராணநாயகன் ஈசன்
உலகெங்கும் இடைவெளியின்றி சூழந்திருக்க
நாணத்திற்கிடமுண்டோ?
சென்ன மல்லிகார்ஜுனன் உலகெலாம்
கண்ணாய் பார்த்துக்கொண்டிருக்க
மூடிமறைகின்ற இடமெது சொல்லய்யா!
என்ற அக்காமகாதேவியின் பாடல் அவர்களுக்குப் பதிலாகிறது.
அக்கமகாதேவியின் வசனங்கள் உலகின் நிலையாமையையும் இறைவனின் பெருமையையும் விளக்குகின்றன. அக்காமகாதேவிக்கு முன் மாயை என்பதைப் பெண்ணாக பார்த்தார்கள். பெண் உருவில் பார்த்தார்கள். இவரே முதல் முதலாக மாயையைப் பெண்ணாகப் பாராமல் ஆண் உருவில் பார்த்தவர். . முன்னூறுக்கும் மேற்பட்ட வசனங்கள் அளித்துள்ளார். மந்த்ர கோப்யா, யோகாங்க த்ரிவிதி எனும் மேலும் இரு படைப்புகள் அளித்துள்ளார். அக்காமகாதேவியின் முக்கியமான சிறப்பம்சமாக நாம் காணவேண்டியது அவரின் உணர்வு மிக்க கவிதைகளுடன் சேர்ந்து அவர் எழுதியிருக்கும் யோகாங்க திரிவிதி கள்.
எழுநாகத்தில் உறைந்த நியூரோ விஷம் வறண்டிருந்த ஆன்ம விருத்தி
விஷத்துளியில் நனைந்த பாலை இதயம் வழிந்தது போலும்
பொழிந்த ரேத மழையில்
பதுக்கிய அமிர்தம் தெளித்து புருவ
மையத்துளிர்ந்த சமித்துகள்
நாகப்புணர்ச்சியின் பரமானந்தம்
மிதக்கும் கால்கள் செய்யும் பிரபஞ்சப் பயணம்
ஜோதியொளி லிங்கம் சூடிய
வெண்பிறை மல்லிகே ஸ்வர
அக்காமகாதேவியின் இக்கவிதை வெளிப்படுத்தும் பொருள் ஞானயோகம்.
ஆண்டாளும் மீராவும் பக்தி யோகத்தின் மூலம் இறைவனுடன் கலந்தவர்கள். ஆனால் அக்காமகாதேவி மட்டும் ஆதிசங்கரர், ரமணமகரிஷி போன்றவர்கள் சென்ற ஞானயோகத்திலும் பயணிக்கிறார். ஞான யோகம் என்பது அறிவின் துணைகொண்டு முக்தி நிலையை அடைந்து ஆனந்தப்பரவசமடைவது.
ENTERS SAMADHI WITH KNOWLEDGE AND COMES OUT WITH TEARS.
பக்தி யோகம் என்பது ஆனந்தப்பரவச நிலையில் முக்தியை அடைந்து அறிவின் தெளிவைப் பெறுவது.
ENTERS SAMADHI WITH TEARS AND COMES PUT WITH KNOWLEDGE.
பக்தி யோகத்துடன் ஞானயோகமும் அக்காமகாதேவியிடம் இருந்தக் காரணத்தால் தான் அக்கா மகாதேவி தனிமனித ஆன்மவிடுதலையை மட்டுமல்ல, ஒட்டுமொத்த மனித சமூகத்தின் ஆன்மவிடுதலைக்காகவும் குரல் கொடுத்தார். அதற்கு எதிராக இருக்கும் ஜாதி பேதங்களை உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற வேறுபாடுகளை ஒழிப்பதிலும் கவனம் செலுத்தினார். அக்காமகாதேவி 100 வருடங்கள் வாழ்ந்தக் குகை இருக்கிறது. ஆனால் வெளி உலகுக்குத் தெரிந்து அவர் 1150 முதல் 1175 வரை 25 வருடங்கள்தான் வாழ்ந்திருக்கிறார்.
காமமே ஆன்மீகத்திற்கும் உலகியல் வாழ்க்கைக்கும் மகா சத்ரு என்பதை விளக்கும் இந்த ஆன்மீக வீடியோவை அவசியம் உங்கள் ஆன்மீக சகோதர சகோதரிகளுடன் பகிருங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக