தொலைக்காட்சி!!

Search This Blog

Wednesday, April 15, 2015

தீராத தலைவலியை ஏற்படுத்தும் உணவுகள்

மனித உடல்களில் ஏற்படும் வலிகளில், தலைவலியை தாங்கி கொள்வது கடினமான ஒன்றாகும்.
இப்படி தலைவலி எடுக்கும் போது தைலம், மாத்திரைகள், ஒரு கப் சூடான காபி குடிக்கிறோம்.
ஆனால், சிலவகையான உணவுகளும் தலைவலியை ஏற்படுத்துகின்றன.
தலைவலியைத் தூண்டும் உணவுகளில் முக்கியமானது சீஸ். அதிலுள்ள தைரமின் எனப்படுகிற வேதிப்பொருளே வலியைத் தூண்டும்.
இதுதவிர கேக், சைனீஸ் உணவுகள், சொக்லெட் போன்றவற்றிலும் தலைவலியைத் தூண்டும் காரணிகள் இருப்பதால் அவற்றையும் தவிர்க்க வேண்டும்.
தினசரி நாம் உபயோகப்படுத்தும் பதப்படுத்தப்பட்ட உணவுகளிலும், தலைவலியைத் தூண்டும் நைட்ரைட்(Nitrite) என்கிற வேதிப் பொருள் கலக்கப்படுகிறது.
ஊறுகாய், ஆரஞ்சு, அன்னாசி, கடலைப்பருப்பு, முந்திரிப்பருப்பு, செயற்கை இனிப்புகள், குளிர்பானங்கள், சிப்ஸ் போன்றவற்றை அடிக்கடி எடுத்துக் கொள்பவர்களுக்கும் தலைவலி வரலாம்.
இவை தவிர மது குடிப்பவர்களுக்கும், கருத்தடை மாத்திரைகள் எடுத்துக் கொள்கிற பெண்களுக்கும் கூட அடிக்கடி தலைவலி ஏற்படுகிறது.
அடிக்கடி தலைவலியால் அவதிப்படுகிறவர்கள் பின்வரும் பொருட்களை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
தினசரி 2 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். சாப்பாட்டுக்கு முன்பும், சாப்பிட்ட பிறகும் தேவையான தண்ணீரைக் குடிக்க வேண்டும்.
வைட்டமின் பி12 நிறைந்த காளான், ப்ராக்கோலி, மக்னீசியம் அதிகமுள்ள முள்ளங்கி, கீரை போன்றவற்றையும் அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
மருத்துவரின் பரிந்துரையின் பேரில் கால்சியம் மற்றும் மக்னீசியம் மாத்திரைகளையும் எடுத்துக் கொள்ளலாம். வெறும் உணவின் மூலம் மட்டுமே தலைவலியை முழுக்க சரிப்படுத்தி விட முடியாது.
தீராத தலைவலிக்கு சில சிறப்பு சிகிச்சைகள் உள்ளன. நவீன மருந்துகளுடன் போடாக்ஸ்(Podox), ஸ்டெல்லேட் காங்லியன்(stellate ganglion), கஸேரியன் காங்லியன்(gasserian ganglion) போன்ற சிகிச்சைகளையும், சில பயிற்சிகளையும் மேற்கொண்டால் தலைவலியிலிருந்து முழுமையான விடுதலை பெறலாம்.

No comments:

Post a Comment