தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 20 ஏப்ரல், 2015

ஸ்லிம்மாக இருக்க வேண்டுமா? இதை கட்டாயம் குடிங்க

இன்றைய இளம் தலை முறையினர் ரசாயனங்கள் நிறைந்த குளிர் பானங்களையும் துரித உணவுகளையுமே உட்கொள்கின்றனர்.
இதனால் வாழைத்தண்டின் பயன்கள் பலருக்கும் தெரிவதே இல்லை. நம் முன்னோர்கள் போற்றி வந்த வாழைத்தண்டை இன்றைய தலைமுறை ஒதுக்குகிறது.
ஆனால் வாழைத்தண்டு பூரண மருத்துவக் குணம் கொண்ட தாவரமாகும். ஏனெனில் இதில் நீர்ச்சத்தும், நார்ச்சத்தும் அதிகம்.
வாழை மரத்தை வெட்டினாலும், கடைசியில் எஞ்சி இருக்கும் வாழைத்தண்டில் ஏராளமான நன்மைகள் உண்டு.
அதிலும் வாழைத்தண்டை ஜூஸ் போட்டு குடிப்பதன் மூலம் பல வியாதிகளுக்கு தீர்வு கிடைக்கும்.
வாழைத்தண்டு ஜூஸின் மகத்துவங்கள்
சிறுநீரக கற்கள் விரைவில் கரையவும், குறைந்தது வாரத்திற்கு ஒரு முறையாவது வாழைத்தண்டு ஜூஸ் குடிக்க வேண்டும்.
வாழைத்தண்டு ஜூஸை காலையில் தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால், நீண்ட நேரம் பசி எடுக்காமல் இருப்பதோடு, உடல் எடையையும் விரைவில் குறையும்.
நெஞ்செரிச்சல் அதிகமாய் இருந்தால் உடனடி தீர்வு காண, காலையில் வெறும் வயிற்றில் வாழைத்தண்டு ஜூஸ் குடிக்க வேண்டும்.
நீரிழிவு நோயாளிகள் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டுடன் வைக்க, தினமும் வாழைத்தண்டு ஜூஸ் குடிப்பது நல்லது.
சிறுநீரக பாதையில் ஏதேனும் நோய்த்தொற்று ஏற்பட்டிருந்தால், அதனை குணப்படுத்த வாழைத் தண்டு உதவியாக இருக்கும்.
இரண்டு அவுன்ஸ் வாழைத்தண்டு ஜூஸை நாள்தோறும் குடித்து வந்தால் வறட்டு இருமல் நீங்கும்.
மாதவிடாய் கோளாறுகளால் ஏற்படும் அதிகப்படியான ரத்தப்போக்கு நோய்க்கும் இது சிறந்த மருந்தாக பயன்படுகிறது.
வாழைத்தண்டு ஜூஸ் குடித்தால், விரைவாக உடல் எடை குறையும். மேலும் மலச்சிக்கலும் உடனே குணமாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக