தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 19 ஏப்ரல், 2015

நடைப்பயிற்சி செய்தவுடன் சாப்பாடு: உடல் எடையை அதிகரிக்குமா?

பொதுவாக நடைப்பயிற்சி சென்று வந்தவுடன் உடனடியாக சாப்பிட்டால் உடல் எடை அதிகரித்து விடுமோ என்ற கேள்வி பலரது மனதிலும் தோன்றும்.
உடலுக்கு நன்மை செய்யும் உடற்பயிற்சிகளில், நடைப்பயிற்சி மிகவும் முக்கியமானது.
உச்சி முதல் உள்ளங்கால் வரை உடல் முழுமைக்கும் ஒரே நேரத்தில் பயிற்சி கொடுக்க வேண்டுமானால், அது நடைப்பயிற்சியால் மட்டுமே முடியும்.
இதனால் ஏற்படும் நன்மைகள் ஏராளம், நீரிழிவு நோயை கட்டுக்குள் வைப்பதுடன், மாரடைப்பு வராமலும் தடுக்கலாம்.
பொதுவாக நடைப்பயிற்சி சென்று வந்தவுடன் பசியெடுக்கும், உடலில் உள்ள கலோரிகள் கரைவதால் தான் பசியெடுக்கிறது.
உடனே சாப்பிட்டால் உடல் எடை அதிகரித்து விடுமோ என்ற கேள்வி பலரது மனதிலும் தோன்றும்.
இந்த நேரத்தில் அதிகமான கலோரி கொண்ட உணவை சாப்பிட்டால் நிச்சயம் எடை அதிகரிக்கும். சராசரி எடை, உயரம் உள்ள ஒருவருக்கு தினம் 2,400 கலோரி போதுமானது. இதை மனதில் கொண்டு சாப்பிடுங்கள்.
நடைப்பயிற்சி முடிந்து வரும்போது ஜூஸ், மோர் போன்றவற்றை அருந்தலாம்.
அதிகம் சர்க்கரை சேர்த்த ஜூஸ், திக்காக இருக்கும் தயிர் போன்றவற்றை உட்கொண்டால் எடை கூடும். சர்க்கரையும் பாலும் கலந்த மில்க்ஷேக் வகைகளைத் தவிர்த்து விட்டு, குறைவான சர்க்கரை கொண்ட ஃப்ரெஷ் ஜூஸ் வகைகளை குடியுங்கள்.
அதிகம் எண்ணெய் உள்ள பொருட்கள், பொரித்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.
கொழுப்புச்சத்து நிறைந்த பொருட்களைச் சாப்பிட்டால் நடைப்பயிற்சி செய்வதில் எந்தப் பலனும் இல்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக