தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 25 மார்ச், 2015

அப்பா போல முதல் பாடலில் விருது!


அப்பா உன்னிகிருஷ்ணனைப் போலவே முதன் முதலாக சினிமாவில் பாடிய பாடலுக்கு தேசிய விருது பெற்றுள்ளார் அவரது மகள் உத்ரா. ஒரே ஒரு வித்தியாசம் அப்பா பாடியது ஏ.ஆர். ரகுமான் இசையில் மகள் பாடியது அவரது மருமகன் ஜி.வி.பிரகாஷ் இசையில் என்பதுதான்.


 நான்கு வயதில் இருந்து கர்நாடக சங்கீதம் கற்றுக் கொண்டிருந்தாலும் முதன் முதலாக சைவம் படத்தில் ஜி.வி.பிரகாஷ் இசையில் குழந்தைக்காக பாடல் பாடினார் உத்ரா.
 
இவர் பிரபல கர்நாடக இசைப்பாடகரும், திரைப்பட பாடகருமான உன்னிகிருஷ்ணனின் மகளாவார். சைந்தவி வீட்டில் கொலுவிற்கு பாடிய உத்ராவிற்கு திடீரென ‘அழகே அழகு' பாடலை பாடும் வாய்ப்பு கிடைத்தது என்கிறார் உன்னி கிருஷ்ணன்.

சில நிமிடங்கள் மட்டுமே சினிமா பாடலை பயிற்சி செய்த உத்ரா பாடியது இசையமைப்பாளருக்கு பிடிக்கவே,இயக்குநரும் ஓகே சொல்ல இந்த பாடலைப் பாடும் வாய்ப்பு கிடைத்தது என்று கூறியுள்ளார் உன்னி கிருஷ்ணன்.

அப்பா போல முதல் பாடலில் விருது... அப்பாவுக்கு மாமா.. மகளுக்கு மாப்பிள்ளை!
முதல் பாடலுக்கு விருது
கர்நாடக சங்கீதம், மேற்கத்திய இசைகள் பாடினாலும் புதிய பாடலை முதன் முறையாக சைவம் படத்தில் அழகே... அழகு என்று பாடி அதற்கு தேசிய விருது பெற்றுள்ளார்
முத்துக்குமாரின் வரிகள்
பாடலாசிரியர் முத்துக்குமாரின் அழகான எளிமையான வரிகள் தனது மகளுக்கு பாட எளிதாக இருந்தது என்று கூறியுள்ள உன்னி கிருஷ்ணன் வாய்ப்பு கொடுத்த அனைவருக்கும் நன்றி கூறியுள்ளார்.
அப்பாவுக்கும் தேசிய விருது
21 ஆண்டுகளுக்கு முன்னர் காதலன் படத்தில் ஜி.வி.பிரகாஷின் மாமா ஏ.ஆர். ரகுமான் இசையமைப்பில் முதன் முதலாக ‘என்னவளே... அடி என்னவளே...' என்று பாடி தேசிய விருது வாங்கினார் உன்னிகிருஷ்ணன் என்பது குறிப்பிடத்தக்கது.

http://gossip.sooriyanfm.lk/632/2015/03/singer-uthara

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக