தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 26 மார்ச், 2015

ஐந்தொழில்


அருட்பெருஞ் ஜோதி ஆண்டவர் ஐந்தொழில் எப்படி புரிகிறார் என்று வள்ளல் பெருமான் அகவலில் பாடிய வரிகள்..
சிருட்டித் தலைவரைச் சிருட்டி அண் டங்களை
அருட்டிறல் வகுத்த அருட்பெருஞ் ஜோதி
காவல் செய் தலைவரைக் காவல் அண்டங்களை
ஆவகை அமைத்த அருட்பெருஞ் ஜோதி
அழித்தல் செய் தலைவரை அவர் அண்டங்களை
அழுக்கற அமைத்த அருட்பெருஞ் ஜோதி
மறைத்திடு தலைவரை மற்றும் அண்டங்களை
அறத்தொடு வகுத்த வருட்பெருஞ் ஜோதி
தெளிவு செய் தலைவரைத் திகழும் அண்டங்களை
அளிபெற வகுத்த அருட்பெருஞ் ஜோதி
அருள் பெறிற் துரும்பும் ஓர் ஐந்தொழில் புரியும்
தெருள்(தெளிவு) இது எனவே செப்பிய சிவமே
உலகு உயிர்த் திரளெலாம் ஒளி நெறி பெற்றிட
இலகும் ஐந்தொழிலையும் யான் செயத் தந்தனை
முந்துறு மைந்தொழின் மூர்த்திகள் பலர்க்கும்
ஐந் தொழிலளிக்கும் அருட்பெருஞ் ஜோதி
http://sagakalvi.blogspot.nl/2012/05/blog-post_9356.html


வள்ளலார் சொல்லியது---இதுவரையில் இருந்தது போல் இனியும் வீண் காலம் கழிக்காதிர்கள் -- .சன்மார்க்க அன்பர்கள் சொல்லுவதிலே காலத்தை கழித்துக் கொண்டு உள்ளார்கள் .சொல்லுவதுபோல் வாழ்ந்து காட்ட வேண்டும். இன்னும் சாதாரண புறச் சாதி சமய மத சின்னங்களையே விட முடியவில்லை-- புறப் பற்றையே விடமுடியவில்லை அகப பற்றை எப்போது விடுவது .எப்போது சுத்த சன்மார்க்கி என்ற பெயர் இறைவனிடம் பெறுவது ,சாகாத கல்வி எப்போது கற்பது ,அருள் எப்போது பெறுவது,மரணத்தை எப்போது வெல்வது .மரணத்தை வெல்வது என்பது சாதாரண காரியமா ?ஒன்றையும் விடாமல் பிடித்துக் கொண்டு மரணத்தை வெல்வேன் என்றால் தன்னைத் தானே ஏமாற்றிக் கொள்வதாகும்,பற்றிய பற்று அனைத்தினையும் பற்று அற விட்டு அருள் அம்பலப் பற்றே பற்றுமினோ என்றும் இறைவீரே .என்று சொல்கிறார் .இந்த நிலைக்கு தன்னை யார் தயார்ப் படுத்திக் கொள்கிறார்களோ அவர்கள் மனிதர்கள் யாகும் .அதற்கு மேல் அவர்கள் எண்ணம் சொல் செயல் ஒழுக்கம் இவைகள் யாவும் முழுமை பெற்று இருக்கிறார்களா என்பதை கடவுள் அறிந்து அருள் தந்தால்-அருளைக் காப்பாற்று வார்களா இல்லை அதை வைத்து சித்து விளையாடுவார்களா என்பதைக் கவனித்துதான் அருளைத் தருவார். அருட்பெரும்ஜோதி ஆண்டவர் என்பதை அறிந்து புரிந்து கொள்ளவேண்டும்.நாம் எந்த தகுதியில் இருக்கிறோம் என்பதை நாமே அறிந்து கொண்டு மேலே செல்ல வேண்டும் .ஏதும் தெரியாமல் மூடமாக இருந்துக் கொண்டு இருக்கக் கூடாது .சாப்பாடு போட்டுவிட்டால் போதும் மரணத்தை வென்று விடலாம் என்று சன்மார்க்க அன்பர்கள் அதே பணியை செய்து கொண்டு உள்ளார்கள் .ஆனால் அதுதான் சன்மார்க்கத்தின் முதற்படியாகும் அதற்கு மேல் நிறைய படிகள் இருக்கின்றன.அதை அறிந்து முயற்ச்சி செய்ய வேண்டும் .அதுவும் பெரு முயற்ச்சி செய்ய வேண்டும் உதாரணத்திற்கு --வள்ளலார் எப்படி வாழ்ந்தாரோ அப்படி நாம் வாழ வேண்டும் .அப்போதுதான் இறைவன் நம்மைக் கவனிப்பார்.அதற்கு முன் நாம் மனிதனாக வாழ வேண்டும். மனிதனாகவே நாம் யாரும் வாழ வில்லை ,மனித உருவத்தில் உள்ள மிருகங்களாக வாழ்ந்து கொண்டு உள்ளோம்..மனித தகுதி என்ன என்பதை வள்ளலார் திரு அருட்பாவில் தெளிவாக எழுதி வைத்துள்ளார் .படித்து பயன் பெறுவோம். முதலில் மனிதனாக வாழ்வோம் மனிதனாக வாழ்பவர்களுக்குத்தான் கடவுள் அருள் கிடைக்கும் .இந்த உலகில் யாரும் மனிதத் தன்மையோடு வாழ வில்லை வாழ முயற்ச்சி செய்கிறார்கள் .முயற்ச்சி வெற்றிபெற அருட்பெரும் ஜோதி ஆண்டவரை இடைவிடாது தொடர்பு கொள்ள வேண்டும்.http://sagakalvi.blogspot.in/2011/09/blog-post_16.html

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக