தொலைக்காட்சி!!

Search This Blog

Monday, March 23, 2015

மாதவிடாய் கோளாறா?

கால்சியம், இரும்பு சத்துக்கள் அதிகம் உள்ள கேழ்வரகை தினமும் உணவில் சேர்த்துக்கொள்வதால் உடல் வலுப்பெறும்.
குழந்தைகளுக்கு கேழ்வரகுடன் பால், சர்க்கரை சேர்த்து கூழாக காய்ச்சி கொடுக்கலாம். இது குழந்தையின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது.
தினமும் கேழ்வரகு கூழ் சாப்பிட்டு வர குடற்புண் குணமடையும். மாதவிடாய் கோளாறு கொண்ட பெண்கள் இதை சாப்பிட்டு வர மாதவிடாய் பிரச்சனைகள் தீரும்.
அதிக எடை இருப்பவர்கள் எடையை குறைக்க விரும்பினால் கேழ்வரகு சாப்பிடலாம்.
கேழ்வரகில் உள்ள நார் சத்துக்கள் மலசிக்கலை தடுக்கிறது. சர்க்கரை நோயாளிகள் கேழ்வரகை, அடை, புட்டாக செய்து சாப்பிடலாம். இதை கூழாக செய்து குடித்தால் கொலஸ்ட்ரால் குறையும்.
கர்ப்பிணி பெண்கள் தினம் உணவில் சேர்த்து கொள்ளலாம். குடலுக்கு வலிமை அளிக்கும், உடலில் உஷ்ணத்தை சமநிலையில் வைத்திருக்கும்.
இதில் புரதம், தாது உப்பு, சுண்ணாம்புச் சத்து, இரும்புச் சத்து மற்றும் உயிர்ச் சத்துக்களும் இருக்கின்றன.
கேழ்வரகு குடலுக்கு வலிமை அளிக்கும். நீரிழிவு நோயாளிகள் கூட கேழ்வரகால் செய்த பண்டங்களைச் சாப்பிடலாம்.

No comments:

Post a Comment