தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 25 மார்ச், 2015

மனிதக் கழிவுகளில் இருந்து தங்கம்!

மனிதக் கழிவுகளில் இருந்து தங்கத்தை பிரித்து எடுக்க முடியுமா என்பது குறித்து அமெரிக்க ஆய்வாளர்கள் ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.
அமெரிக்க கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து ஆண்டுதோறும் ஏழு மில்லியன் டன்கள் திடக்கழிவுகள் வெளியாகின்றன.
இந்த கழிவுகளில் எந்த அளவுக்கு தங்கம் இருக்கிறது என்பது குறித்து ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகிறது.
பாறைகளில் இருக்கும் அளவுக்கு தங்கம் இருக்குமாயின், அதிலிருந்து தங்கத்தை பிரித்தெடுக்க முடியும் என ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.
மேலும் இவ்வாறு செய்யும் போது, சுற்றுச்சூழலில் நச்சுத்தன்மை கொண்ட பொருட்களை விடுவிப்பதை தடுக்க முடியும் எனவும் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அமெரிக்க மண்ணியல் ஆய்வு அமைப்பை சேர்ந்த டாக்டர் கேத்லீன் ஸ்மித் கூறுகையில், தற்போது அந்த கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து எடுக்கப்படும் தங்கத்தின் அளவு, பாறைகளில் மிகக் குறைந்த அளவில் இருக்கும் தங்கத்துக்கு ஒப்பாகும்.
கழிவுகளில் தங்கத்தை தவிர, வெள்ளி மற்றும் பலேடியம் மற்றும் வெனேடியம் போன்ற பல அபூர்வத் தாதுப் பொருட்களும் காணப்பட்டன. எனவே இது குறித்து கூடுதலான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.
ஒரு லட்சம் அமெரிக்கர்களின் மனிதக் கழிவுகளில் இருந்து 13 மில்லியன் டாலர் அளவு உலோகத்தை பெற முடியும் என ஆய்வு முடிவுகள் மூலம் தெரியவந்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக