கனடா- எதிர்வரும் கோடைகாலத்தில் ரொறொன்ரோவில்  நடைபெற உள்ள Pan Am விளையாட்டுக்கள் நடைபெறும் இடத்திற்கு அண்மையில்  ஒரு நிலக்கீழ் சுரங்கபாதை கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக தேசிய பாதுகாப்பு அதிகாரிகளிற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த சுரங்கபாதை ரொறொன்ரோவின் றெக்சால் சென்ரர் மற்றும் யோர்க் பல்கலைகழகத்தின் கீல் வளாகம் ஆகிய பகுதிகளிற்கு அருகில் உள்ள காட்டு பகுதியில் தோண்டப்பட்டுள்ளது. இப்பகுதியில் தோண்டும் கருவிகள் மற்றும் ஜெனரேட்டரும் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.
இந்த சுரங்கபாதையானது ஒருவர் நிற்பதற்கு போதுமான அளவுடையதாக 2.5 மீற்றர்கள் உயரம், கிட்டத்தட்ட 7 மீற்றர்கள் நீளமுடையதாகவும் அமைக்கப்பட்டுள்ளது. சுரங்கபாதைக்குள் ஒரு ஜெனரேட்டர் மூலம் விளக்குகள் இயக்கப்படுவதுடன் சுவர்களும் உட்கூரைகளும் வலுப்படுத்தப்பட்டும் உள்ளதென தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுரங்கப்பாதை தற்சமயம் அதிகாரிகளால் நிரப்பபட்டுள்ளதாக விடயமறிந்த வட்டாரங்கள் சிபிசி செய்திக்கு கூறியுள்ளதாக அறியப்படுகின்றது.
ரொறொன்ரோ பொலிசார் இந்த மர்ம சுரங்கபாதை சம்பந்தமாக கருத்து தெரிவிக்க மறுத்து விட்டதாகவும் ஆனால் செவ்வாய்கிழமை ஒரு செய்தியாளர் சந்திப்பை நடத்தலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
சிவப்பு புள்ளியிட்ட இடத்தில் சுரங்கப்பாதை அமைந்துள்ளது:
tunneltunnel5tunnel4tunnel2tunnel1tunnel3