தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 26 பிப்ரவரி, 2015

சரும எரிச்சலை கட்டுப்படுத்தும் மாங்காய்


சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் சுண்டி இழுத்துவிடும் சுவை மாம்பழத்திற்கு உண்டு.
மாம்பழ சீசன் வந்துவிட்டாலே, மாம்பழத்தை வாங்கி சாப்பிடுவதில் அனைவரும் ஆர்வம் காட்டுவர்.
ஆனால் மாம்பழத்தை ரசித்து உண்ணும் அளவிற்கு, பெரும்பாலானோர் மாங்காயை சாப்பிடுவதில்லை.
கசப்பு, புளிப்பு என கூறி மாங்காய் சாப்பிடுவதை தவிர்க்கின்றனர். ஆனால் இதில் உள்ள மகத்துவங்கள் ஏராளம்.
மாங்காயின் இலை, வேறு, பூ பட்டை என அனைத்துமே மருத்துவ குணங்களை பெற்றுள்ளது.
மாங்காயின் மகத்துவங்கள்
சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்கள் இருந்தால் அது மற்றவர்களுக்கு பரவாமல் தடுக்கும் தன்மை மாவிலைக்கு உண்டு.
இதன் இலையை தேன் விட்டு வதக்கி குடிநீரில் போட்டு ஊறவைத்து அந்த நீரை அருந்தினால், குரல் கம்மல், தொண்டைக்கட்டு போன்றவை நீங்கும்.
நீரிழிவு உள்ளவர்கள், மா கொழுந்து இலையை எடுத்து உலர்த்தி பொடி செய்து, தினமும் காலை மாலை 2 ஸ்பூன் அளவு அருந்தினால் நீரிழிவு கட்டுப்படும்.
தீக்காயம் பட்டவர்கள் மா இலையைச் சுட்டு சாம்பலாக்கி, வெண்ணெயில் குழைத்து பூசி வந்தால் தீப்புண் விரைவில் குணமாகும்.
மாம்பூவை நிழலில் உலர்த்தி எடுத்து பொடித்து நீர்விட்டு கொதிக்க வைத்து குடிநீராக அருந்தினால் வயிற்றுப்போக்கு நீங்கும்.
கால் பித்தவெடிப்பு உள்ள பகுதியில் மாம்பிசினைத் தடவி வந்தால் பித்த வெடிப்பு குணமாகும்.
மாங்காய் குழம்பு
வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு, காய்ந்த மிளகாய், கசகசா, கடுகு உள்ளிட்ட பொருள்களை லேசாக வதக்கி, அரைக்கவும்.
மாங்காயை சின்னத் துண்டுகளாக வெட்டவும். மீண்டும் வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு, கடுகு, கறிவேப்பிலை தாளித்து, சின்ன வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
பிறகு மாங்காய் துண்டுகள் சேர்த்து வதக்கி, அரைத்த விழுது, மஞ்சள் தூள், உப்பு, தேவையான அளவு தண்ணீர் எல்லாம் சேர்த்து, மிதமான தீயில் கொதிக்க விடவும்.
மாங்காய் ரொம்பவும் குழையாமல் பதமாக வெந்ததும், இறக்கி, கொத்தமல்லி தூவினால் மாங்காய் குழம்பு ரெடி.
பயன்கள்
மலச்சிக்கலைப் போக்கும்,  ஜீரண சக்தியை அதிகரிக்கும், வயிற்றுப்புண், வாய்ப்புண்ணை ஆற்றும்.
மூல நோயின் பாதிப்பைக் குறைக்கும்.
புற்றுநோய் தாக்கமால் உதவும்.
மாங்கொட்டை கஷாயம்
முதலில் மாங்கொட்டை பருப்பை எடுத்து நன்கு காயவைத்து கொள்ள வேண்டும்.
பிறகு இதனை நன்கு பொடி செய்து கொள்ள வேண்டும்.
இறுதியில் வாணலியில் நீர் வைத்து, அதை கொதிக்கவிட்டு இந்த பொடியை அதில் போட்டு கலக்கினால் மாங்கொட்டை கஷாயம் ரெடி.
பயன்கள்
மாதவிலக்குக் காலத்தில் இதை அருந்தினால், அதிக உதிரப்போக்கு கட்டுப்படும். வெள்ளைப்படுதல் குணமாகும்.
வயிற்றில் உள்ள புழுக்கள் மற்றும் கிருமிகள் நீங்கும்.
சரும எரிச்சலை கட்டுப்படுத்தும் ஒரு சிறந்த மருந்து.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக