தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 25 பிப்ரவரி, 2015

யாழ்ப்பாணச் சமூகத்தில் சாதி(2)


யுத்தத்தால் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாணச் சமூகத்தில் சாதியும் உள்ளூரில் இடம்பெயர்ந்த மக்களும்(3): பரம்சோதி தங்கேஸ்,காலிங்க டியூடர் சில்வா

கடந்த வாரம் பதிவுசெய்யப்பட்ட ‘யுத்தத்தால் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாணச் சமூகத்தில் சாதியும் உள்ளூரில் இடம்பெயர்ந்த மக்களும்’ என்ற கட்டுரையின் தொடர்ச்சி. பரம்சோதி தங்கேஸ்,காலிங்க டியூடர் சில்வா ஆகியோரின் ஆய்வான இக்கட்டுரை யாழ்ப்பாணச் சமூகத்தின் சாதி அமைப்பு முறையை அறிந்துகொள்வதற்கான புதிய தகவல்களைக் கொண்ட நுண்ணாய்வு.
இலங்கைத் தமிழர்களிடையே அறுபத்தைந்திற்கும் மேற்பட்ட சாதிகள் உள்ளதென ‘சாதிகள், வழக்கங்கள், நடத்தைகள் மற்றும் தமிழ் இலக்கியம்’ எனத் தலைப்பிடப்பட்ட தனது நூலில் குறிப்பிடுகின்றார். இத்தகைய சாதிக் குழுக்கள் பெரும் சாதிக் குழுமத் தோற்றத்தோடு (Formation of Mega Caste Groups) எண்ணிக்கையில் குறைந்து செல்கின்றது (Sivathamby, 2005). டேவிட் (1974அ, 1974ஆ) மற்றும் ஃபாபன்பேகர் (1982) ஆகியோரது கற்கைகள் யாழ்ப்பாணச் சமூகத்தில் இருபது, பெரும் சாதிக் குழுக்கள் இருப்பதாக அடையாளம் காண்கின்றன.
வெள்ளாளர், பிராமணர், சைவக் குருக்கள், பண்டாரி, சிப்பாச்சாரி, கோவியர், தட்டார், கரையார், தச்சர், கொல்லர், நட்டுவர், கைக்குழார், சாண்டார், குயவர், முக்குவர், வண்ணார், அம்பட்டர், பள்ளர், நளவர் மற்றும் பறையர் ஆகியோரே இவ்விருபது சாதிக்குழுக்களுமாகும். இச்சாதிக் குழுக்களின் மரபுரீதியான தொழில்கள் மற்றும் அவர்களது அடிமை, குடிமை அந்தஸ்து ஆகியன அட்டவணை-1 இல் கொடுக்கப்பட்டுள்ளது.
chat1

















இலங்கையின் வேறுபல பகுதிகளைப் போன்று யாழ்ப்பாணத்திலும் ஒவ்வொரு சாதிகளும் கொண்டுள்ள சனத்தொகை தொடர்பான மிகச் சரியான தகவல்கள் இல்லை. இருபதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இருவேறு மானிடவியலாளர்களால் (கெனத் டேவிட் மற்றும் மைக்கல் பாங்ஸ்) மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின்படி யாழ்ப்பாணக் குடாநாட்டின் சனத்தொகையில் 50 வீதமானோர் ‘உயர் சாதி’ வெள்ளாளராய் இருந்தனர் எனக் கணிப்பிடப்பட்டது. அத்தோடு கரையார் 10% மாகவும், கோவியர் 7% மாகவும், பள்ளர் 9% மாகவும், நளவர் 9% மாகவும் கணிப்பிடப்பட்டனர். யாழ். குடாநாட்டின் சனத்தொகையில் ஏனைய பெயர்குறிப்பிடப்பட்ட பதின்மூன்று சாதிகளில் எதுவும் 3% துக்கும் மேலான இடத்தினைப் பெறவில்லை.
யாழ்ப்பாணச் சமூகத்தைப்பற்றி எழுதிய டேவிட் (1973அ, 1973ஆ, 1974அ, 1974ஆ), ஃபாபன்பேகர் (1982, 1990), பாங்ஸ் (1960), அருமை நாயகம் (1979, 2000) மற்றும் சிவத்தம்பி (2005) போன்ற புலமையாளர்கள் சாதிகளை வெவ்வேறு முறைகளில் பாகுபடுத்தினர். உதாரணமாக, டேவிட் (1973:36) யாழ்ப்பாணச் சாதிகளை ‘உயர் சாதி’, ‘நல்ல சாதி’, மற்றும் ‘கீழ்ச் சாதி’ எனப் பாகுபடுத்துகின்றார். சிவத்தம்பி (2000:10) ‘உயர் சாதியினர்’, ‘உயர் சாதி அல்லாதோர்’ மற்றும் ‘குடிமக்கள்’ என வேறுபடுத்துகின்றார். வெள்ளாளர், பிராமணர், சைவக் குருக்கள், கோவியர் மற்றும் சைவச் செட்டி ஆகிய சாதிக் குழுக்களை டேவிட் உயர் சாதியாகக் கருத, சிவத்தம்பி வெள்ளாளர் மற்றும் பிராமணர்களை உயர் சாதி எனக் கருதுகின்றார். யாழ்ப்பாணச் சாதி அடுக்கமைவிலிருந்த குடிமக்கள் மற்றும் அடிமைகள் என்ற பாகுபாடுகளும் முக்கிய விடயங்களாகும். வேறுபட்ட அளவீடுகளைப் பயன்படுத்தி பல்வேறு புலமையாளர்களும் சில சாதிக் குழுக்களை அடிமைகள் என்ற வகைக்குள்ளும் உட்படுத்துகின்றனர். உதாரணமாக, ஒல்லாந்தரின் கணிப்பீட்டின்படி கோவியர், நளவர், பள்ளர், சாண்டார் மற்றும் சிவியார் ஆகியோர் ‘குடிமைகள்’ என்ற குழுவினுள் உள்ளடங்குவர் எனச் சிவத்தம்பி குறிப்பிடுகின்றார். இன்னொரு பக்கத்தில், டேவிட் (1974) மற்றும் ஃபாபன்பேகர் (1982) ஆகியோர் கோவியர், பள்ளர் மற்றும் நளவர் ஆகிய சாதிக் குழுக்களை ‘அடிமைகள்’ என்ற வகுப்பினுள்ளும் தட்டார், தச்சர், கொல்லர், குயவர், வண்ணார், அம்பட்டர் மற்றும் பறையர் ஆகிய சாதிக் குழுக்களை குடிமைகள் என்ற வகுப்பினுள்ளும் உள்ளடக்குகின்றனர். அதேபோன்று ‘தீண்டத்தக்கவர்’ (Touchables), தீண்டத்தகாதோர் (Untouchables) ஆகிய சாதிக்குழுக்களும் யாழ்ப்பாணச் சாதியமைப்பில் முக்கியமானதொன்றாக இருந்தன.
அட்டவணை-1 இன் அடிப்படையில், அம்பட்டர், பள்ளர், நளவர் மற்றும் பறையர் ‘தீண்டத்தகாதவர்கள்’ எனக் கருதப்பட்டனர். வண்ணார் சாதியினைச் சேர்ந்தோர் மரபுரீதியாக கோயிலுக்குள் செல்வதற்கு அனுமதிக்கப்பட்டமையால் (வெள்ளை கட்டும் நோக்கத்திற்காக) அச்சாதியினைச் சேர்ந்தோர் ‘தீண்டத்தக்கவராகக்’ கருதப்பட்டனர். இவ்விடயத்தினை பாங்ஸ் (1960:65) பின்வருமாறு குறிப்பிடுகின்றார்: ‘வண்ணார் கோயில்களுக்குள் செல்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டமையால், அவர்கள் தீண்டத்தக்கவராயும் அம்பட்டருக்கு கோயில்களின் உட்புறம் செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டதனால், அவர்கள் தீண்டத்தகாதவராயும் கணிக்கப்பட்டனர்.
இவ்விடயம் தென்னிந்திய சாதி அமைப்புமுறையின் சில பண்புகள் யாழ்ப்பாணச் சாதியிலும் காணப்படுவதை தெளிவுபடுத்துகின்றது. தற்கால யாழ்ப்பாணச் சமூகத்தில் ‘தீண்டாமை’ என்ற விடயம் வழக்கத்திலில்லை என்பது பொதுவாக விவாதிக்கப்படும் விடயமாகும். தற்காலச் சமூகத்தில் வெளிப்படையானதாகவோ அல்லது வலிமை மிக்கதாகவோ ‘தீண்டாமை’ என்ற விடயம் இல்லை என்ற கருத்துடன் நாமும் உடன்படுகின்றோம். சாதி நடைமுறைகள், சாதி தொடர்பான திறந்த கலந்துரையாடல் என்பவற்றின் மீது LTTE யினால் ஏற்படுத்தப்பட்ட தடைகள், பாரியளவிலான சனத் தொகை இடப்பெயர்வு மற்றும் யுத்தம் போன்ற விடயங்களால் கடந்த பல தசாப்தங்களாக யாழ்ப்பாணத்தில் சாதி பல்வேறு மாற்றங்களுக்குள்ளாகி வருகின்ற அதேநேரம், மக்களின் சமூக, கலாசார மற்றும் பொருளாதார வாழ்க்கையின் சில விடயங்களில் சாதி தொடர்ச்சியான புழக்கத்திலிருந்து வருகின்றது.


http://inioru.com/40278/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-2/

1 கருத்து:

  1. கிருக்கு பு........ களாக இருப்பார் போலும், அம்பட்டர் என்பவர்கள் ஆதி தமிழ் அந்தணர்கள் என்று வரலாறு சொல்கிறது, இங்கு தீண்டத்தகாதவர்காளம்,போங்கடா அறிவு கெட்ட மட பு....... களா.

    பதிலளிநீக்கு