தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 22 நவம்பர், 2014

கல்லீரலை காக்கும் கரிசலாங்கண்ணி!


பொதுவாக கீரை வகைகள் நம் உடலுக்கு அதிக ஊட்டசத்தையும் கண்களை பாதுகாப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றது.
அதிலும் வயல் வரப்புகளிலும், வயக்கால் ஓரங்களிலும் மற்றும் நீர்ப்பிடிப்புள்ள இடங்களிலும் வளரக்கூடிய கரிசலாங்கண்ணி கீரை உடலுக்கு அதிக சக்தியை தரும் வல்லமை படைத்தது.
இதை துவையலாகவும், பருப்புடன் சேர்த்து கூட்டாகவும் செய்து சாப்பிடலாம். இப்போது இதன் பயன்களை பற்றி பார்ப்போம்.
கரிசலாங்கண்ணியின் பயன்கள்
கரிசலாங்கண்ணியை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் உடல் பிரகாசம் அடையும் மற்றும் கண்களுக்கும் மூளைக்கும் நல்ல குளிர்ச்சியை தரும்.
புண்கள் மற்றும் அடிபட்ட இடத்தில் இந்த கீரையின் இலையை அரைத்து அதன் மேல் தடவி வர நல்ல பலனை காணலாம்.
குழந்தைளின் சளிக்கு இந்த கீரை சிறந்து மருந்தாக இருப்பதுடன், கல்லீரல் வீக்கம் அடைந்த குழந்தைகளுக்கு இதன் இலையை அரைத்து நெல்லிக்காய் அளவு அரைத்து மோரில் கரைத்து கொடுத்துவர ஈரல் வீக்கம் குறையும்.
மாதவிடாய் காரணமாக பெண்களுக்கு இரத்த போக்கு அதிகமாக இருக்கும் காலங்களில் கரிசலாங்கண்ணியின் இலைய வேகவைத்து அதை வடிக்கட்டி காலை மற்றும் மாலை இரண்டு அவுன்ஸ் குடித்து வந்தால் நல்ல பலனை காணலாம்.
கரிசலாங்கண்ணிச் சாற்றுடன் தேங்காய் எண்ணையைக் கலந்து அடுப்பில் வைத்து சூடேற்றி, அந்த எண்ணையை தலைக்கு தடவினால் முடி உதிர்வது குறையும்.
மஞ்சள் காமாலை நோய் உள்ளவர்களுக்கு இந்த கீரையின் இலையை பச்சையாக இடித்து, அதனுடைய சாறை எடுத்து காலை மற்றும் மாலை இரண்டு அவுன்ஸ் வீதம் ஏழு நாட்களுக்கு கொடுத்தால் மஞ்சள் காமாலை குணமடையும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக