தொலைக்காட்சி!!

Search This Blog

Friday, November 21, 2014

அன்னை தெரேசாவின் சிந்தனைகள்...


* துன்பத்தில் இறைவனைத் தேடுவோர் பலர். ஆனால், எப்போதும் இறையன்பில் வாழ்பவனே பாக்கியசாலி.

* அற்பமான மனிதர், அற்பமான பொருள் என்று எதுவும் உலகில் இல்லை. நீங்கள் மதிப்பளித்தால் உலகமும் உங்களுக்கு மதிப்பளிக்கும்.

* கண்ணீர் மல்க கடவுளிடம் பிரார்த்தனை செய்யுங்கள். நிச்சயம், உங்கள் மனபாரம் தீர்ந்துவிடும். பிரச்னைக்குரிய தீர்வினைப் பெற்று மனம் மகிழ்வீர்கள்.

* வாழ்க்கை மிகவும் குறுகியது. அதனால், வாய்ப்பு கிடைக்கும்போதே நல்ல எண்ணங்களைச் செயலாக்கி விடுங்கள்.

* அன்பை மனதில் நிரப்புங்கள். குடும்ப ஒற்றுமைக்கு வழிஏற்படுத்துங்கள். இதன்மூலம் வளர்ச்சியும் முன்னேற்றமும் உண்டாகும்.

* யாரையும் எதற்காகவும் ஏமாற்றக் கூடாது. ஏமாற்ற நினைப்பவனை ஒருநாள் இறைவன் ஏமாற்றிவிடுவது உறுதி.

* சந்தனத்தைத் தொட்ட கையில் நறுமணம் கமழ்வது போல, இறைசிந்தனையில் ஆழ்ந்த மனத்தில்அருள்மணம் கமழத் தொடங்கிவிடும்.

* யாரையும் வார்த்தையால் துன்புறுத்தக் கூடாது. இதனால் நம் சுபாவமே கொடுமையானதாக மாறிவிடும் அபாயம் உண்டு.
 —

No comments:

Post a Comment