ஏட்டுச்சுரக்காய் கறிக்கு உதவாது என்பது என்றோ கூறப்பட்ட தமிழ்ப்பழமொழி !!
இந்த வருடம் கனடா ரொன்ரோ பெரும்பாக உயர் நிலைப் பாடசாலைகளில் அதிக சாராசரியை பெற்றுக் கொண்ட மாணவர்களில் இரு தமிழ் மாணவிகள் இடம்பெற்றுள்ளமை தமிழர்களாக நாம் எல்லோரும் பெருமை கொள்ளும் வாய்பினை வழங்கியிருக்கின்றது.
வருடா வருடம் உயர் நிலை பாடசாலைகளில் இருந்து பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகும் மாணவர்களின் சராசரிகளின் அடிப்படையில் சாதனை படைத்த மாணவர்களின் பட்டியில் வெளியிடப்படுகின்றது.
அந்த பட்டியலில் டுர்காம் கல்விச்சபையில் 98.83 வீத சராரியுடன் நதிசா ஜெயகாந்தன் முதலிடத்தை பெற்றுள்ளார்.
அதே போல் ரொரன்ரோ கத்தோலிக்க கல்விச் சபையில் மினா பாலசுப்பிரமணியம் என்ற மாணவி 100 வீத சராசரியுடன் முதலிடத்தை பிடித்துள்ளார்.
இந்த மாணவிகளின் சாதனை தமிழர்களிடம் உரிய முறையில் பகிரப்படுவது அவசியம். இவர்களை போன்று இன்னும் இன்னும் சாதனையாளர்களை நமது சமூகத்தில் இருந்து நாம் உருவாக்க வேண்டும்.