தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 24 ஆகஸ்ட், 2014

புத்துணர்ச்சியை அள்ளித் தரும் உருளைக்கிழங்கு

காய்கறிகளில் உருளைக்கிழங்கை பிடிக்காதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள்.
உருளைக்கிழங்கை அதிகம் சேர்த்தால் வாயுத் தொந்தரவு ஏற்படும், சர்க்கரை நோயாளிகள் கிட்டவே சேர்க்கக் கூடாது என்றெல்லாம் உருளைக்கிழங்கு பற்றிய பலன்களை மட்டும் தான் அறிந்து வைத்திருக்கிறோம்.
ஆனால், உருளைக்கிழங்கும் மருத்துவ குணம் கொண்ட அருமருந்து என்பது உங்களுக்கு தெரியுமா?
* உருளைக்கிழங்கை தோலுடன் சமைத்து சாப்பிட்டால், மலச்சிக்கல் பிரச்சினைகள் தீரும். சருமமும் பளபளப்பாகும்.
* உருளைக்கிழங்கு, காரத்தன்மை நிறைந்த கிழங்கு புளித்த ஏப்பம் பிரச்சனையால் அவதிப்படுகிறவர்கள் உடனடியாக உருளைக்கிழங்கை சமைத்து சாப்பிட்டால், குணமடைவர்.
* வாரத்துக்கு 2, 3 நாட்கள் உருளைக்கிழங்கை சாப்பிட்டு வர, பாலூட்டும் தாய்மார்களுக்குப் பால் அதிகம் சுரக்கும்.
* நரம்புகளுக்குப் புத்துணர்ச்சியை அள்ளித் தருகிறது உருளைக்கிழங்கு.
* குடலில் உள்ள நல்ல பாக்டீரியாவை அதிகரிக்கச் செய்வதால் நோய் எதிர்ப்பு சக்தியும், ஜீரண சக்தியும் அதிகரிக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக