தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 24 ஆகஸ்ட், 2014

வெங்காயத்தின் மகிமை! அந்த விஷயத்தில் டாப்

வெங்காயம் முற்காலத்திலிருந்தே அனைவராலும் பயன்படுத்தப்பட்டு வரும் ஓர் உணவுப் பொருளாகும்.
ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, எகிப்தியர்கள் வெங்காயத்தைப் பயன்படுத்தி வந்திருக்கின்றனர்.
தென் இந்தியர்களும் பழங்காலம் முதலே பயன்படுத்தி உள்ளனர். அரேபியர்கள் ஏராளமான வெங்காயத்தை உட்கொள்கிறார்கள்.
வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள் உள்ளன, இதயத்தின் தோழன் என்றே சொல்லலாம்
உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்புகளை கரைத்து ரத்தத்தை சுத்திகரிப்பதில் வெங்காயத்தின் நறுமணம் மற்றும் அமிலத்தன்மை பெரும்பங்கு வகிக்கிறது.
நாம் உண்ணும் உணவை எளிதாக ஜீரணிக்க வைப்பதுடன் தேவையான சத்துக்களை உடலின் தேவைக்கேற்ப பிரித்துக் கொடுக்கிறது.
பெரும்பாலும் பல் சிதைவு மற்றும் வாய் நோயை தடுக்க பயன்படுத்தப்படுகிறது.
இதனை அதிகம் சாப்பிட்டு வந்தால், புற்றுநோய் செல்களை வளர விடாமல் தடுக்கிறது.
முருங்கையை விட அதிக பாலுணர்வைத் தூண்டக் கூடியது வெங்காயம்.

வெங்காய சட்னி
வெங்காயத்தை தோல் நீக்கி சிறுத் துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
வெங்காயம், காய்ந்த மிளகாய்(3 அல்லது 4), புளி மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து மிக்சியில் அரைத்துக் கொள்ள வேண்டும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்துக் கொள்ளவும்.
பின்னர் அரைத்த விழுதை சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயத்தின் பச்சை வாசனை போக வேண்டும்.
நன்கு சுருள வந்ததும் அடுப்பை அணைத்து விடவும். வெங்காய சட்னி தயார்.

வெங்காய ரசம்
முதலில் வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பின்பு மிளகு, சீரகத்தை பொடி செய்து வைத்துக் கொள்ளவும்.
பின்பு ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு, உளுந்தம் பருப்பு, வர மிளகாய் போட்டு தாளிக்கவும்.
தாளித்த பின்பு வெங்காயத்தை போட்டு நன்கு வதக்கவும். வதக்கிய பின்பு அதில் புளியை நன்கு கரைத்து ஊற்றவும்.
பின்பு அதில் மஞ்சள் தூள், மிளகு, சீரக தூள், உப்பு ஐந்து நிமிடம் கொதிக்க விட்டு கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.

வெங்காய பக்கோடா
ஒரு பாத்திரத்தில் கடலை மாவு(ஒரு கப்), அரிசி மாவு(கால் கப்), மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு, பூண்டு, சோம்பு, கரம் மசாலா தூள் சேர்த்து கலந்துக் கொள்ளவும்.
இந்த கலவையுடன் நீளமாக நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து கலந்துக் கொள்ளவும்.
பின்னர் இதில் தேவையான அளவு தண்ணீரை தெளித்து பிசைந்து வைத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கலந்து வைத்திருக்கும் வெங்காயக் கலவையை எடுத்து உதிர்த்து விட்டு, பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக