தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 29 ஆகஸ்ட், 2014

இலங்கை சுற்றுலா துறையில் சாதனை - பிரித்தானிய தம்பதியர் கௌரவிப்பு!



நடப்பாண்டில் இலங்கைக்கு விஜயம் செய்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை பத்து இலட்சம் என்ற மையில் கல்லை எட்டியுள்ளது
இந்த வருடத்திற்கான பத்தாவது லட்சம் சுற்றுலா பயணியாக பிரித்தானிய தம்பதியினர் அமைந்துள்ளனர். 
இந்த தம்பதியினர் நேற்று நண்பகல் 12.45 மணியளவில் கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
பிரித்தானிய பிரஜையான ஜோசுவா க்ளட்ஸடயின் சோபி நாதன் (Mr. Joshua Gladstein and Ms. Sophie Nathan) என்ற தம்பதியினரே இந்த பெருமையை பெற்றுள்ளனர்.
இவர்கள் தமது முதலாவது திருமண நாளை கொண்டாவதற்காகவே இலங்கை சென்றுள்ளனர்.
பிரித்தானிய தம்பதியினரை, இலங்கை சுற்றுலா அபிவிருத்தி செயலக முகாமைத்துவ பணிப்பாளர் ரூமி ஜவுபர் உட்பட மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர்.
இந்த ஆண்டுக்கான பத்தாவது லட்சம் சுற்றுலா பயணிகளாக தாம் திகழ்வது குறித்து மகிழ்ச்சியடைவதாக பிரித்தானிய தம்பதியினர் தெரிவித்தனர்.
இவர்களுக்கு நினைவுச்சின்னங்களும் அன்பளிப்புகளும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
http://www.tamilwin.com/show-RUmsyIRdKUmp5.html

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக