தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 24 ஆகஸ்ட், 2014

கழுத்து வலியால் அவஸ்தையா?

இன்றைய நவீன காலகட்டத்தில் மனிதர்கள் எப்போதும் அங்கும், இங்கும் ஓடிக் கொண்டு தான் இருக்கிறார்கள்.
ஆதலால் தங்களது உடல்நிலையை சரியாக பராமரிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதில் அதிகம் பேர் சந்திக்க கூடிய பிரச்னைகளில் ஒன்று கழுத்து வலி.
கழுத்து வலிக்கு முக்கிய காரணம் சரியான முறையில் அமரும் பழக்கம் இல்லாதது தான். தவறான முறையில் அமர்ந்திருப்பது, நமக்கே தெரியாமல் நிகழ்ந்து விடுகிறது.
கடைபிடிக்க வேண்டியவைகள்
* கார் ஓட்டும் போதும், சரியான முறையில் அமர்வது அவசியம். சாலையில் பார்வை நன்றாகப்படும் வகையிலும், கழுத்தை அதிகமாக வளைக்காத வகையிலும் அமர உங்கள் சீட்டை சரிசெய்து கொள்ளுங்கள்.
* படுக்கையில் படுத்தபடி புத்தகம் படிப்பது கூட வலியை ஏற்படுத்தி கழுத்தைப் பதம் பார்த்து விடும். இந்த பிரச்னையை மிக எளிதாகக் கையாளலாம்.
* கழுத்தை சாதா நிலையில் எப்போதும் வைத்திருந்தால் போதும். அதாவது வெகு நேரம் கழுத்தை வளைத்தபடி இருக்க வேண்டாம். ஒரே கோணத்தில் வெகு நேரம் அமர்ந்திருப்பதையும் தவிர்க்க வேண்டும்.
* வெகு நேரம் அமர நேர்ந்தால் சரியான முறையில் அமர்ந்துள்ளீர்களா என்பதை சரிபார்க்க வேண்டியது அவசியம். கழுத்து நேராகவும், முதுகுப் பகுதியைத் தாங்கக் கூடிய தலையணை பொருத்தியும் அமர வேண்டும்.
* இடுப்புக்கு சற்றே கீழாக முட்டி இருக்குமாறு அமர வேண்டும். நாற்காலியின் கைப்பிடியில் கைகளை வைத்திருப்பது நல்லது. தூங்கும் போது சரியான முறையில் படுக்காமல் இருந்தாலும் கழுத்து வலி ஏற்படும்.
* இறகால் ஆன தலையணைகள் மிகச் சிறந்தவை. அவை தான் கழுத்து, தலைக்கு ஏற்றவாறு வளைந்து கொடுக்கும் தன்மை கொண்டவை.
* கணணி முன் மணிக்கணக்காக அமர்ந்து பணிபுரிவோர், கழுத்தை சாதா நிலையில் வைத்து அமர்வது தான் நல்லது. சிலர் வேலையில் அதீத கவனம் செலுத்தும்போது கழுத்தை முன்னோக்கி நகர்த்தி வைத்துக் கொள்வர். நெடுநேரம் இப்படி வைத்திருந்தால் கழுத்தில் வலி ஏற்படும்.
* கழுத்தை சரியான முறையில் வைத்திருப்பதற்கு ஏற்ப உங்கள் டேபிள், மொனிட்டர், நாற்காலி ஆகியவற்றை சரியான கோணத்தில் வைத்திருப்பது அவசியம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக