தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 29 ஜூலை, 2014

வாழ்க்கை!!


வாழ்க்கை பல்வேறு சுவாரஸ்யங்களைக் கொண்டது.
சிலருக்கு இந்த உண்மை அனுபவ ரீதியில் புலப்படுகிறது, பலருக்கோ புலப்படாமல் போய் விடுகிறது.
வாழ்க்கையை ஒரே மாதிரியாக அணுகினால் போரடித்து விடும். ஒவ்வொரு நிமிடத்திலும் வாழ்தலில் தான் வாழ்க்கை உயிர்பெறுகிறது.
சாதனையாளர்களும் வாழ்க்கையை ரசிக்காமல் சாதனைகளைப் புரியவில்லை. வாழ்க்கையை அவர்கள் எப்படி பார்த்தார்கள் என்பதுதான் முக்கியம்.
சுபாஷ் சந்திரபோஸ் நாட்டு விடுதலையைத் தன்னுடைய லட்சியமாகக் கொண்டார். அதற்காக அவர் பட்ட துயரங்கள் பல.
நம்முடைய நிலையிலிருந்து பார்த்தால் அவையெல்லாம் தாங்க முடியாத துன்பங்கள் என்பதில் சந்தேகமில்லை.
அவர் இந்தத் துன்பங்களை எப்படிப் பார்த்தார் என்பது தான் இதில் முக்கியம்.
‘மாண்ட்லே’ சிறையில் அவர் அடைக்கப்பட்டு இருந்தார். அப்போது ஷயரோக நோயினால் அவர் அவதிப்பட்டுக் கொண்டிருந்தார். சிறை வாழ்க்கையே துன்பமயமானது. இதில் நோய் வேறு.
அந்த நிலையில் நண்பர் ஒருவருக்கு அவர் எழுதிய கடிதத்திலுள்ள ஒரு வாசகம் குறிப்பிடத்தக்கது.
இந்தச் சிறை வாழ்க்கை எனக்கு மகிழ்ச்சியாகவே இருக்கிறது. தேசத்துக்காக அதை அனுபவிக்கிறேன் என்கிற போது அந்த மகிழ்ச்சி மேலும் அதிகரிக்கிறது.
இங்கே அவர் அனுபவித்த துன்பம் முக்கியமில்லை. தன்னுடைய வாழ்க்கையில் தான் ஏற்றுக் கொண்ட லட்சியத்துக்காக அதை அனுபவிக்கிறோமென்ற உணர்வு அவருக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கிறது.
சிறை வாழ்க்கையினைக் கூட அனுபவிக்கும் மனோபாவம் அவருக்கு வந்து விடுகிறது. தன்னுடைய வாழ்க்கை ரசனையை உயர்ந்த நிலைக்கு அவரால் கொண்டு செல்ல முடிந்திருக்கிறது என்பதுதான் இதன் பொருள்.
இவ்வாறு உலக மகா புருஷர்களின் வாழ்க்கையை ஊடுருவிப் பார்த்தால் துன்பங்களுக்கும் துயரங்களுக்கும் மத்தியிலும் அவர்கள் அரிய சாதனைகள் புரிந்ததற்குக் காரணம் அவர்கள், வாழ்க்கையை நேசித்ததுதான் என்கிற உண்மை தெளிவாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக